search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி கிரிக்கெட் நலனிற்காக பதவியை ராஜினாமா செய்துள்ளேன்- சேவாக்
    X

    டெல்லி கிரிக்கெட் நலனிற்காக பதவியை ராஜினாமா செய்துள்ளேன்- சேவாக்

    டெல்லி கிரிக்கெட் நலனிற்காக டிடிசிஏ கிரிக்கெட் கமிட்டியில் பதவியை ராஜினாமா செய்தேன் என்று சேவாக் தெரிவித்துள்ளார். #DDCA #Sehwag
    இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், அதிரடி பேட்ஸ்மேனும் ஆன சேவாக் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் கிரிக்கெட் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த கமிட்டியில் ஆகாஷ் சோப்ரா, ராகுல் சங்வி ஆகியோரும் இடம் பிடித்திருந்தனர்.

    டெல்லி கிரிக்கெட்டில் முன்னேற்றம் கொண்டு வர முக்கியமான ஆலோசனைகள் வழங்குவதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு மனோஜ் பிரபாகரை பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கலாம் என ஆலோசனை வழங்கியிருந்தது. ஆனால் டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.



    இந்நிலையில் சேவாக் உள்பட மூன்று பேரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். டெல்லி கிரிக்கெட்டின் நலன் கருதியே ராஜினா செய்துள்ளதாக சேவாக் தெரிவித்துள்ளார்.

    ‘‘டெல்லி கிரிக்கெட் வளர்ச்சி பெற ஆலோசனைகைள் வழங்குவதே கிரிக்கெட் கமிட்டியில் உள்ள எங்களுடைய பணி. ஆனால், நாளுக்கு நாள் எங்களுக்கு மற்ற வேலைகள் அதிக அளவில் வருவதால் இதில் நாங்கள் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நாங்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்தோம்’’ என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×