search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pulwama terror attack"

    புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வயநாட்டை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் வசந்தகுமார் குடும்பத்தாரை இன்று சந்தித்த பிரியங்கா காந்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். #PriyankaGandhimeets #Pulwamaattack
    திருவனந்தபுரம்:

    காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பஸ் மீது கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் பலியானார்கள்.
     
    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற வீரரும் இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். பலியான வசந்தகுமாருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். 

    இந்நிலையில், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் ராகுல் காந்திக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி, இன்று மக்கம்குன்னு பகுதியில் உள்ள மறைந்த சி.ஆர்.பி.எப். வீரர் வசந்த குமார் இல்லத்துக்கு சென்றார். வசந்த குமாரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

    கேரளாவில் முதல்முறையாக ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்ற பழங்குடியின மாணவி ஸ்ரீதன்யா சுரேஷ்-ஐயும் அங்கு சந்தித்த பிரியங்கா, அவருக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்தார். #PriyankaGandhi #PriyankaGandhimeets #Pulwamaattack #VVVasanthaKumar #WayanadVVVasanthaKumar 
    புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்த சோகம் இன்னும் நீங்காத நிலையில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாட போவதில்லை என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #RajnathSingh #Holi #PulwamaAttack
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த மாதம் 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்த சோகம் இன்னும் நீங்காத நிலையில் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை கொண்டாட போவதில்லை என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, கடந்த 2017-ம் ஆண்டில் சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டபோது, ராஜ்நாத் சிங் ஹோலி பண்டிகையை கொண்டாடவில்லை என்பது நினைவிருக்கலாம். #RajnathSingh #Holi #PulwamaAttack
    காஷ்மீரில் ராணுவத்தில் சேர கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வமாக வந்திருந்தனர். #PulwamaAttack #KashmiriYouth #Army
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கண்டமுல்லா ராணுவ முகாமில் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு செய்யும் முகாம் நடந்தது. கடும் குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர ஆர்வமாக வந்திருந்தனர். அங்கு அவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

    இது தொடர்பான வீடியோ ராணுவத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில், “நாட்டை காக்க ஏராளமான இளைஞர்கள் ராணுவத்துக்கான ஆட்கள் தேர்வில் கலந்துகொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ஸ்ரீநகரில் இந்த வார இறுதியிலும் அடுத்த வாரமும் ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற உள்ளது என்றனர்.

    புலவாமா பகுதியில் துணை ராணுவ படை மீது பயங்கரவாத தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே ராணுவத்தில் சேர காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வம் காட்டியது அதிகாரிகளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம் என்பதை சர்வதேச சமூகம் நன்கு அறியும் என இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. #Pakistan #NerveCentre #ImranKhan #PulwamaAttack
    புதுடெல்லி:

    புலவாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு. இதை விமர்சிக்கிற வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசி உள்ளார்.

    அவருக்கு உடனடியாக இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புலவாமாவில் நமது பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலை பயங்கரவாத செயல் என்பதை பாகிஸ்தான் பிரதமர் ஏற்க மறுப்பதில் ஆச்சரியம் இல்லை.

    இந்த கொடூரமான செயலுக்கு அவர் கண்டனமும் தெரிவிக்கவில்லை. வீரர்களை இழந்து தவிக்கிற குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு கிடையாது என்பது அடிக்கடி திரும்ப திரும்ப சொல்லப்படுகிற ஒன்றுதான்.

    ஜெய்ஷ் இ முகமது இயக்கமும், இந்த கொடூர தாக்குதலுக்கு சதி செய்த பயங்கரவாதியும் ஒப்புக்கொண்டுள்ளதை பாகிஸ்தான் பிரதமர் கண்டுகொள்ளவில்லை. ஜெய்ஷ் இ முகமது இயக்கமும் சரி, மசூத் அசாரும் சரி இவர்கள் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டவர்கள் என்பது நன்கு அறியப்பட்ட உண்மை. பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே போதுமான ஆதாரம்.



    இந்தியா ஆதாரம் அளித்தால் விசாரணை நடத்த தயார் என பாகிஸ்தான் பிரதமர் கூறி உள்ளார். இது நொண்டிச்சாக்கு மட்டும்தான். மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி நடந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானிடம் ஆதாரம் கொடுத்தோம். 10 ஆண்டுகளாகியும் அங்கு நடக்கிற வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை. பதன்கோட் விமானப்படை தளம் தாக்குதலிலும், முன்னேற்றம் இல்லை. உறுதியான நடவடிக்கைக்கு அளிக்கப்படுகிற வாக்குறுதிகள், எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது கடந்த கால வரலாறு.

    புதிய பாகிஸ்தான், புதிய சிந்தனை என்று பாகிஸ்தான் பிரதமர் கூறுகிறார். ஆனால் ஐ.நா. சபையால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் போன்ற பயங்கரவாதிகளுடன் தற்போதைய அரசின் மந்திரிகள் ஒரே மேடையில் ஒன்றாக தோன்றுகிறார்கள்.

    பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். பயங்கரவாதம் பற்றி பேச தயார் என்று சொல்லி இருக்கிறார். பயங்கரவாதமும், வன்முறையும் இல்லாத சூழலில் முழுமையான இரு தரப்பு பேச்சு வார்த்தைக்கு தயார் என்று இந்தியா மீண்டும் மீண்டும் கூறி இருக்கிறது.

    பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு மிகப்பெரிய களப்பலி என சொல்லி இருக்கிறது. இதெல்லாம் உண்மைக்கு வெகு தூரமானது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம் என்பதை சர்வதேச சமூகம் நன்கு அறிந்திருக்கிறது.

    பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் குற்றச்சாட்டு, வரவுள்ள தேர்தலை வைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் கூறி இருப்பது வருந்தத்தக்கது. இந்த தவறான குற்றச்சாட்டை இந்தியா நிராகரிக்கிறது.

    இந்தியாவின் ஜனநாயகம் உலகத்துக்கே முன்மாதிரி. அது ஒருபோதும் பாகிஸ்தானுக்கு புரியாது.

    சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்துவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும். புலவாமா பயங்கரவாத தாக்குதல் சதிகாரர்கள், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கிற பிற பயங்கரவாதிகள், பயங்கரவாத இயக்கங்கள் மீது நம்பத்தகுந்த, காணத்தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார். #PulwamaAttack #VirenderSehwag
    புதுடெல்லி:

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுகரம் நீட்டி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயிர்தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக இருக்காது. ஆனால் குறைந்தது என்னால் முடிந்த உதவியாக வீரமரணம் அடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எனது பெயரில் உள்ள ‘ஷேவாக் சர்வதேச பள்ளி’யில் படிக்க வைக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



    இரானி கோப்பையை வென்றதன் மூலம் கிடைத்த பரிசுத்தொகையை, தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்குவதாக விதர்பா அணியின் கேப்டன் பைஸ் பாசல் அறிவித்து இருக்கிறார். இதே போல் அரியானா காவல்துறையில் பணியாற்றும் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங் தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும், இதே போல் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    விராட் கோலியின் பவுண்டேசன் மற்றும் ஆர்.பி.-சஞ்ஜிவ் கோயங்கோ குரூப் சார்பில் டெல்லியில் நேற்று விளையாட்டு விருது வழங்கும் விழா நடப்பதாக இருந்தது. ஆனால் ராணுவ வீரர்களை இழந்து வாடும் இந்த வேதனையான தருணத்தில் இந்த விழாவை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் அந்த விழாவை வேறுஒரு நாளுக்கு தள்ளிவைப்பதாக விராட் கோலி டுவிட்டரில் கூறியுள்ளார்.
    ×