search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tree"

    • விபத்தில் காரை ஓட்டி வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.
    • திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பல்லடம் :

    பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள சின்னூர் பிரிவு அருகே, பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமாக இருந்த புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் அவர் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கிட்டுசாமி மகன் முருகேசன்( வயது 37) என்பது தெரியவந்தது . இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • காா் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.
    • தீயணைப்புத் துறையினா் முருகானந்தத்தை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    காங்கயம் :

    திருப்பூா் வீரபாண்டி, சபாபதி நகரை சோ்ந்தவா் முருகானந்தம் (வயது 66). இவா் திருப்பூா் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள ஒரு நிறுவனத்தில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

    இந்நிலையில் கரூருக்கு காரில் சென்றுள்ளாா். காங்கயம் தாலுகா, சிவன்மலை அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியில் செல்லும்போது, காா் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் முருகானந்தம் காருக்குள் சிக்கிக் கொண்டாா்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் தீயணைப்புத் துறையினா் முருகானந்தத்தை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.இது குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • காலை கடற்கரை ஓரமாக மர்ம பொருள் கடல் அலையில் அடித்து வந்து கரை ஒதுங்கியது.
    • கடலூர் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிலை குறித்து விசாரணை நடத்தி பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே தாழங்குடா மீனவ கிராமம் உள்ளது. இன்று காலை கடற்கரை ஓரமாக மர்ம பொருள் கடல் அலையில் அடித்து வந்து கரை ஒதுங்கியது. அப்போது அவ்வழியாக சென்ற மீனவர்கள் அதனை எடுத்து பார்த்தபோது பழங்காலத்து மரச்சிலையாக இருந்தது‌. மேலும் அந்த சிலை ஆங்கிலேயர் போலீஸ் மரசிலை என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கடலூர் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிலை குறித்து விசாரணை நடத்தி பறிமுதல் செய்தனர்.

    • ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி.
    • மரத்தில் கயிரால் தூக்கு போட்டு முனுசாமி தற்கொலை செய்து கொண்டார்.

    திருச்சி

    ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. (வயது 59). இவர் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இவர் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு யாத்திரிநிவாஸ் அருகில் உள்ள ஒரு மரத்தில் கயிரால் தூக்கு போட்டு முனுசாமி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்து ஸ்ரீரங்கம் போலீசார்பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது வாலிபர்வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
    • இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 27). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியில் இரும்புகளை வாங்கி இரும்பு உருக்கு ஆலைக்கு அனுப்பும் வேலை செய்து வந்தார். இவர் கள்ளியம்புதூர் பகுதியில் தனியாக தங்கி விஜயமங்கலத்திற்கு வேலைக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு பல்லகவுண்ட ம்பாளையம் சென்று விட்டு இரவு கள்ளியம்புதூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளியம்புதூர் அருகே வந்து கொண்டு இருந்த போது திடீரென நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது அவர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக கூறினர். இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • நன்றி இல்லாத மனிதன் காற்று, தண்ணீர் இரண்டையும் தான் முதலில் மாசு படுத்துகிறான்.
    • அமேசான் காட்டின் 22 சதவீதத்தை அழித்தவன் மனிதன்.

    பல்லடம் :

    பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளையின் 53 -வதுவான்மழை மாதாந்திர கருத்தரங்கம் வனம் அறக்கட்டளை அலுவலகமான வனாலயத்தில் நடைபெற்றது. சக்தி மசாலா உரிமையாளர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வனம் அறக்கட்டளை தலைவர் சின்னச்சாமி, செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், சிறு துளி அமைப்பு வனிதா மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனம் அறக்கட்டளை செயலாளர் சுந்தரராஜன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் வைரமுத்து பங்கேற்று பேசியதாவது:- இந்த பூமியில் மனிதன் உயிர் வாழத் தேவையான முக்கியமான இரண்டு காற்று, தண்ணீர். நன்றி இல்லாத மனிதன் அந்த இரண்டையும் தான் முதலில் மாசு படுத்துகிறான். அவர்களை காப்பது மரங்கள். இதை அறியாமல் உலகில் மனிதன் ஆயுதங்களை அதிகம் பிரயோகித்தது மரங்களிடம்தான். ஆம் இதுவரை அவன் அளித்தது எண்ணிலடங்கா மரங்கள். ஏன் அமேசான் காட்டின் 22 சதவீதத்தை அழித்தவன் மனிதன். வனம், சிறுதுளி போன்ற ஆர்வலர்களால் அவன் செய்த தவறுகள் சிறிதேனும் சரி செய்யப்படுகிறது.

    நமது முப்பாட்டன் வள்ளுவன் முதல் குறளில் சொல்வது கடவுள் நம்பிக்கை. அதற்கு அடுத்ததாக தண்ணீரைப் பற்றிச் சொல்லி உள்ளார். ஏன்? தண்ணீர் என்பது அவ்வளவு முக்கியம். அந்தத் தண்ணீரின் தேவை இல்லை என்றால் நீ கடவுளைக் கூட வழிபட முடியாது .இந்த உலகம் 70 விழுக்காடு தண்ணீரால் சூழப்பட்டது. மீதி உள்ள பகுதியில்தான் மனிதன் குடித்தனம் நடத்தி வருகிறான். அவனுடன் புழு, பூச்சி, விலங்குகள், போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன. இனியாவது மாற்றத்தைப் பற்றி யோசி, மரத்தை நேசி.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு மாலை அணிவித்து கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நாகராஜ்,சூழல் செயற்பாட்டாளர் சந்திரசேகர் வெள்ளிங்கிரி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, கள் இயக்கத் தலைவர் நல்லசாமி மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள்,உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • நகராட்சி தூய்மை பணியாளர்களும் அப்புற படுத்துவதில்லை.
    • மரக்கிளைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.

    உடுமலை :

    உடுமலையில் மின் நிலையம் மற்றும் உயரழுத்த தாழ்வழுத்த பாதைகளில் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடைபெறும் .அந்த நேரத்தில் அந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் .மின் பணியாளர்களால் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். மேலும் அந்த நேரத்தில் அந்த பகுதிகளில் மின் கம்பிகள் மீது உரசும் அளவிற்கு உயரமாக வளர்ந்துள்ள மரக்கிளைகள் மின் பணியாளர்களால் வெட்ட படுகிறது. ஆனால் அந்த மரக்கிளைகளை அதே இடத்தில் போட்டுவிட்டு செல்கின்றனர்.

    அவற்றை நகராட்சி தூய்மை பணியாளர்களும் அப்புற படுத்துவதில்லை. அதனால் மரக் கிளைகளில் உள்ள இலைகள் காய்ந்து மரக்கிளையின் குச்சிகள் நீட்டிக்கொண்டு உள்ளது. இது போன்று வஉசி.வீதி, சர்தார் வீதி ,அன்சாரி வீதி உட்பட பல இடங்களில் உள்ளது. வெட்டிப் போடப்பட்ட மரக்கிளைகள் அதே இடங்களில் கிடைக்கின்றன.

    இதனால் அந்தந்த வீதியில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் அந்த பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வரும்போது இருசக்கர வாகனத்தை ஓரமாக ஓட்டிச் செல்லும்போதும் மரக்கிளைகள் இருசக்கர வாகனத்தில் வருவோர் மீது உரசுகிறது. இதனால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

    மின் பணியாளர்களால் வெட்டப்படும் மரக்கிளைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டியது மின் பணியாளர்களின் பணியா அல்லது நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பணியா என்பதில் வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் குழப்பமடைந்துள்ளனர். எது எப்படி இருந்தாலும் வெட்டி போடப்படும் மரக்கிளைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • ஆண்டுதோறும் ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் காய்ப்பு சீசன் இருக்கும்.
    • காய்ப்பு சீசனில், ஒரு மரத்திற்கு 300 முதல் 400 கிலோ வரை மாங்காய் கிடைக்கும்.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள மணல் கலந்த செம்மண் பரப்பு மா சாகுபடிக்கு உகந்த மண் வளமாகும். இந்த வளம் மிகுந்த ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை, மானுப்பட்டி, ஒன்பதாறு செக்போஸ்ட், திருமூர்த்திநகர், பொன்னலாம்மன்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.செந்தூரம், நீலம், மல்கோவா, பங்கனப்பள்ளி, பெங்களூரா உட்பட 10-க்கும் மேற்பட்ட ரகங்கள் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    ஆண்டுதோறும் ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் காய்ப்பு சீசன் இருக்கும். கொத்து கொத்தாக காய்கள் பிடித்து கார்பைட் போன்ற ரசாயன பயன்பாடு இல்லாமல்மரங்களில் மாங்காய்கள் பழுக்கும் போது அப்பகுதியில் பரவும் மணம்மக்களை மட்டுமல்லாது மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள யானைகளையும் இழுப்பது வழக்கம்.ஆனால் இந்தாண்டு மரங்களில் பூ பிடிக்கும் தருணத்தில், பெய்த மழை கோடை காலத்தில் போதிய வெயில் இல்லாதது போன்ற காரணங்களால் மகசூல் முற்றிலுமாக பாதித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், காய்ப்பு சீசனில், ஒரு மரத்திற்கு 300 முதல் 400 கிலோ வரை மாங்காய் கிடைக்கும். சந்தை நிலவரத்தை பொறுத்து கிலோவிற்கு 50 ரூபாயிலிருந்து விலை கிடைக்கும். இந்த வருவாயே எங்களின் வாழ்வாதாரமாக இருந்தது. இந்தாண்டு ஜூன் மாத சீசன் கைகொடுக்கவில்லை. மரங்களில் பூக்கள் உதிர்ந்து தற்போது தழைவு துவங்கியுள்ளது. இதனால்காய் பிடிக்காமல் மகசூல் முற்றிலுமாக பாதித்துள்ளதுஎன்றனர்.

    • மர கிளைகள் உடைந்து காணப்பட்டதோடு, சாலையில் மழைநீர் தேக்கம் அடைந்தது.
    • திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பனியன் தொழிலாளியை அனுப்பி வைத்தனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து, சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றில் பல மர கிளைகள் உடைந்து காணப்பட்டதோடு, சாலையில் மழைநீர் தேக்கம் அடைந்தது. இந்நிலையில் திருப்பூர் முருகம்பாளையம் சுண்டமெடு அம்பேத்கர் நகர் பகுதியில் பலத்த காற்று வீசியது. அப்போது சாலையோரம் இருந்த பனைமரம் பனியன் தொழிலாளியான ரங்கன் (வயது 45) என்பவர் வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டிலிருந்த ரங்கன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வீரபாண்டி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    • கிராம உதயம் உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
    • 1100 மரக்கன்றுகளை நட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட நிர்வாகம், வீரவநல்லூர் பேரூராட்சி மற்றும் கிராம உதயம் இணைந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 1100 மரக்கன்றுகள் நடும் விழா தட்டன் குளம் பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். சேரன்மகாதேவி சப் -கலெக்டர் ரிஷாப் முன்னிலை வகித்தார்.

    கிராம உதயம் வழக்கறிஞரும், ஆலோசனை குழு உறுப்பினருமான புகழேந்தி பகத்சிங் வரவேற்றார். பேரூராட்சி உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர், வீரவநல்லூர் பேரூராட்சி மன்றத் தலைவர் சித்ரா, செயல் அலுவலர் சத்தியதாஸ் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    இதில் கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் தன்னார்வ தொண்டர்கள், கிராம உதயம் உறுப்பினர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 1100 மரக்கன்றுகளை நட்டனர். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் சசிகலா நன்றி கூறினார்.

    குன்னூரில் இன்று காலை ரோடு ஓரம் இருந்த வீடு, அதன் பின்புறம் இருந்த மது பார் மீது ஒரு ராட்சத மரம் முறிந்து விழுந்ததில் 2 பேர் உயிர் தப்பினார்கள்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர்- கோத்தகிரி சாலையில் வண்டிச் சோலை உள்ளது.

    இங்கு வனத்துறைக்கு சொந்தமான காடுகள் இருக்கிறது. இப்பகுதியில் சாலை ஓரங்களில் ராட்சத மரங்கள் ஏராளமாக இருக்கிறது.

    இந்த நிலையில் இன்று காலை ஒரு ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இந்த மரம் ரோடு ஓரம் இருந்த வீடு, அதன் பின்புறம் இருந்த மது பார் மீதும் விழுந்தது.

    இதில் வீடு மற்றும் மதுபார் சேதம் அடைந்தது. மது பாரில் இருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது. வீடு முன் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த காரும் சேதம் அடைந்தது.

    மரம் விழுந்த போது மது பாரில் 2 பேர் இருந்தனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினார்கள். #tamilnews
    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று மாலை பெய்த மழையால் மரம் முறிந்து விழுந்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Mumbairain
    மும்பை:

    மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தெருக்களிலும், சாலை ஓரங்களிலும் சூழ்ந்த வெள்ளநீர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை தொடரும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக தெற்கு மும்பையில் எம்.ஜி சாலை அருகே உள்ள மெட்ரோ சினிமாஸ் பகுதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது. மரம் முறிந்து விழுந்ததில் மரத்தின் அருகே இருந்த 6 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள ஜி.கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பார்சிங் மற்றும் ராஜேந்திர சிங் ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தலையில் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Mumbairain
    ×