search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மா மரங்கள்"

    • சாகுபடியில் அதிக பலன்கள் கிடைக்க தோட்டக்கலைத்துறையினர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
    • பருவமழை துவங்கியதும், நிலப்போர்வையாக பசுந்தாள் உரப்பயிர்களை விதைக்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. விவசாயத்தை பொறுத்தமட்டில் நெல், காய்கறி சாகுபடி, பழ சாகுபடி முக்கியமாக மேற்கொள்ளப்படுகிறது.இதில் மா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை வட்டாரத்தில் ஜல்லிபட்டி, லிங்கம்மாவூர், குமாரபாளையம், தேவனூர்புதூர், மானுப்பட்டி, மொடக்குப்பட்டி, உடுக்கம்பாளையம் உட்பட பகுதிகளில் 1,700 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஆறுக்கும் அதிகமான ரகங்கள் பராமரிக்கப்பட்டு, ஆண்டுக்கு இரு சீசன்களில் மாங்காய் அறுவடை செய்யப்படுகிறது.இந்த சாகுபடியில் அதிக பலன்கள் கிடைக்க தோட்டக்கலைத்துறையினர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

    இந்நிலையில் மா மரங்களில், ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் கவாத்து செய்வதால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அத்துறையினர் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழை சீசனுக்கு முன் மா சாகுபடியில் கிளை படர்வு மேலாண்மை, உர நிர்வாகம் ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். பருவமழை துவங்கியதும், நிலப்போர்வையாக பசுந்தாள் உரப்பயிர்களை விதைக்கலாம்.களைகளை முழுவதுமாக கட்டுப்படுத்த இடை உழவு செய்த பின் கொள்ளு, பாசிப்பயறு, தக்கைப்பூண்டு அல்லது மண் வளம் பெருக எளிதில் மட்கும் பயறு இனவகைகளை விதைக்க வேண்டும்.

    நோய் தாக்கிய காய்ந்த கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி கீழே விழுந்துள்ள இலைகளை சேகரித்து, மண் புழு உரக்குழி அல்லது மண்புழு கூடாரத்திலோ மட்க செய்ய வேண்டும்.மரங்களின் வளரும் தருணத்தில் மிக நெருக்கமாக உள்ள மரங்களின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் கவாத்து பணிகளை மேற்கொள்ளலாம்.

    ஆரோக்கியமாக உள்ள கிளையை விட்டு விட்டு குறுக்கே நிழல் பகுதியில் வளரும் சிறு கிளைகளையும், கவாத்து செய்ய வேண்டும். மரத்தில் 5 கிளைகள் இருந்தால் 2 முதல் 3 கிளைகள் மட்டும் இருக்குமாறு கவாத்து செய்யலாம்.கவாத்து வாயிலாக மரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கிளை படர்வு மேலாண்மையை விவசாயிகள் பின்பற்றினால், புதுக்கிளைகளில் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் இருக்காது. இவ்வாறு தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • ஆண்டுதோறும் ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் காய்ப்பு சீசன் இருக்கும்.
    • காய்ப்பு சீசனில், ஒரு மரத்திற்கு 300 முதல் 400 கிலோ வரை மாங்காய் கிடைக்கும்.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள மணல் கலந்த செம்மண் பரப்பு மா சாகுபடிக்கு உகந்த மண் வளமாகும். இந்த வளம் மிகுந்த ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை, மானுப்பட்டி, ஒன்பதாறு செக்போஸ்ட், திருமூர்த்திநகர், பொன்னலாம்மன்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.செந்தூரம், நீலம், மல்கோவா, பங்கனப்பள்ளி, பெங்களூரா உட்பட 10-க்கும் மேற்பட்ட ரகங்கள் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    ஆண்டுதோறும் ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் காய்ப்பு சீசன் இருக்கும். கொத்து கொத்தாக காய்கள் பிடித்து கார்பைட் போன்ற ரசாயன பயன்பாடு இல்லாமல்மரங்களில் மாங்காய்கள் பழுக்கும் போது அப்பகுதியில் பரவும் மணம்மக்களை மட்டுமல்லாது மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள யானைகளையும் இழுப்பது வழக்கம்.ஆனால் இந்தாண்டு மரங்களில் பூ பிடிக்கும் தருணத்தில், பெய்த மழை கோடை காலத்தில் போதிய வெயில் இல்லாதது போன்ற காரணங்களால் மகசூல் முற்றிலுமாக பாதித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், காய்ப்பு சீசனில், ஒரு மரத்திற்கு 300 முதல் 400 கிலோ வரை மாங்காய் கிடைக்கும். சந்தை நிலவரத்தை பொறுத்து கிலோவிற்கு 50 ரூபாயிலிருந்து விலை கிடைக்கும். இந்த வருவாயே எங்களின் வாழ்வாதாரமாக இருந்தது. இந்தாண்டு ஜூன் மாத சீசன் கைகொடுக்கவில்லை. மரங்களில் பூக்கள் உதிர்ந்து தற்போது தழைவு துவங்கியுள்ளது. இதனால்காய் பிடிக்காமல் மகசூல் முற்றிலுமாக பாதித்துள்ளதுஎன்றனர்.

    ×