search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கிளை"

    • வெள்ளிமலை, கரியாலூர், சேரப்பட்டு உள்ளிட்ட 20 கிராமங்களில் இன்று அதிகாலை 2 மணி முதல் மழை பெய்தது.
    • மலைக்கும்-கல்வராயன்மலைக்குமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    வங்கக்கடலில் உருவாகி யுள்ள வளிமண்டல மேல டுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவ லாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் மற்றுமொரு வளிமண்ட மேலடுக்கு சுழற்சி நேற்று உருவாகியது. இதனால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கள்ளக் குறிச்சி மாவட்டம் கல்வரா யன்மலையில் உள்ள வெள்ளிமலை, கரியாலூர், சேரப்பட்டு உள்ளிட்ட 20 கிராமங்களில் இன்று அதிகாலை 2 மணிமுதல் மழை பெய்தது.

    இதனால் இன்று காலை 5 மணியளவில் வெள்ளி மலை பெரியார் நீர்வீழ்ச்சி அருகேயுள்ள சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. அவ்வழியே இன்று காலை 6 மணிக்கு அவ்வழியே வந்த கார், மண் சரிவால் சாலையில் இருந்த சேற்றில் சிக்கியது. இதனால் வெள்ளி மலைக்கும்-கல்வராயன்மலைக்குமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. அந்த சாலையின் இருபுற மும் அரசு, மற்றும் தனியார் பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு விரைந்து வந்த அப்பகுதி இளைஞர்கள், சேற்றில் சிக்கியிருந்த காரினை மீட்டு சாலையோரம் நிறுத்தினர். தொடர்ந்து சாலையில் இருந்த சேற்றினை அகற்றி னர். மேலும், மரக்கிளை களையும் அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் போக்குவரத்து நெரிசலை இளைஞர்களும், பொதுமக்களும் சரி செய்த னர்.

    • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.
    • ஆபத்தான நிலையில் இருந்த மரங்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக நாகை மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி சீயாத்தமங்கை ஊராட்சி மெயின்ரோடு பகுதியில் உயர் அழுத்தம் மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகளை உரசி கொண்டும்,எந்நேரத்திலும் முறிந்து விழுந்து விபத்துக்க ளை ஏற்படுத்தும் ஆபத்தான நிலையில் இருந்த மரங்களையும் வெட்டி அகற்றும் பணி ஊராட்சி தலைவர் சிவகாமி அன்பழகன் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    • மரக்கிளை தலையில் விழுந்து வாலிபர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது22). சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று வெம்பக்கோட்டை ரோட்டில் வேனில் வந்து கொண்டிருந்தார். வனமூர்த்திலிங்காபுரம் அருகே வந்தபோது மரக்கிளை முறிந்து வேன் மீது விழுந்தது.

    இதையடுத்து வேனை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தனது சகோதரர் பாலகுருநாதனை செல்போனில் அழைத்து அங்கு வருமாறு கூறினார்.அவர் அங்கு வந்தவுடன் இருவரும் சேர்ந்து வேனில் விழுந்து கிடந்த மரக்கிளைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    மாரிமுத்து வேன் மீது ஏறி நின்று மரக்கிளைகளை எடுத்து கொடுக்க பாலகுரு நாதன் அதனை வாங்கி தரையில் வைத்து கொண்டி ருந்தார். அப்போது ஒரு மரக்கிளை எதிர்பாராத விதமாக பாலகுருநாதனின் தலையில் விழுந்தது. இதனால் படுகாயமடைந்த பாலகுருநாதனை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெம்பக் கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பல கிராமங்களுக்கு மார்கெட் திடல் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.
    • தீயணைப்பு படையினர் மரக்கிளையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    கோத்தகிரி

    கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம், பல கிராமங்களுக்கு மார்கெட் திடல் வழியாக அரசு பஸ்கள் மற்றும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சாலையோரத்தில் நின்ற ராட்சத சோலை மரத்தின் கிளை முறிந்து சாலையின் குறுக்கே தொங்கியபடி கிடந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து, மரக்கிளையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். மரக்கிளையை அகற்றியதும் போக்குவரத்து சீரானது. மரத்தில் இருந்து கிளை முறிந்து விழுந்த நேரத்தில் அந்த வழியாக எந்த வாகனமும் அந்த வழியாக செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • டி‌. கல்லுப்பட்டி அருகே மரக்கிளை முறிந்து விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • திடீரென மழை பெய்ததால் ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கினார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி. கல்லுப்பட்டி போலீஸ் சரக்கத்திற்கு ட்பட்ட எம்.சுப்புலாபுரம் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரசாந்த் (வயது 23). இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். அப்போது திடீரென மழை பெய்தது.

    உடனே அதே பகுதியில் உள்ள ஒரு மரத்தின் அடியில் பிரசாந்த் மழைக்கு ஒதுங்கினார். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக மரத்தின் கிளை எதிர்பாராத விதமாக முறிந்து கீழே நின்றிருந்த பிரசாந்த் மீது விழுந்தது.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அப்ப குதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாந்த் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகராட்சி தூய்மை பணியாளர்களும் அப்புற படுத்துவதில்லை.
    • மரக்கிளைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.

    உடுமலை :

    உடுமலையில் மின் நிலையம் மற்றும் உயரழுத்த தாழ்வழுத்த பாதைகளில் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடைபெறும் .அந்த நேரத்தில் அந்த துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் .மின் பணியாளர்களால் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். மேலும் அந்த நேரத்தில் அந்த பகுதிகளில் மின் கம்பிகள் மீது உரசும் அளவிற்கு உயரமாக வளர்ந்துள்ள மரக்கிளைகள் மின் பணியாளர்களால் வெட்ட படுகிறது. ஆனால் அந்த மரக்கிளைகளை அதே இடத்தில் போட்டுவிட்டு செல்கின்றனர்.

    அவற்றை நகராட்சி தூய்மை பணியாளர்களும் அப்புற படுத்துவதில்லை. அதனால் மரக் கிளைகளில் உள்ள இலைகள் காய்ந்து மரக்கிளையின் குச்சிகள் நீட்டிக்கொண்டு உள்ளது. இது போன்று வஉசி.வீதி, சர்தார் வீதி ,அன்சாரி வீதி உட்பட பல இடங்களில் உள்ளது. வெட்டிப் போடப்பட்ட மரக்கிளைகள் அதே இடங்களில் கிடைக்கின்றன.

    இதனால் அந்தந்த வீதியில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் அந்த பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வரும்போது இருசக்கர வாகனத்தை ஓரமாக ஓட்டிச் செல்லும்போதும் மரக்கிளைகள் இருசக்கர வாகனத்தில் வருவோர் மீது உரசுகிறது. இதனால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

    மின் பணியாளர்களால் வெட்டப்படும் மரக்கிளைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டியது மின் பணியாளர்களின் பணியா அல்லது நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பணியா என்பதில் வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் குழப்பமடைந்துள்ளனர். எது எப்படி இருந்தாலும் வெட்டி போடப்படும் மரக்கிளைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×