search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth sacrifice"

    • மரக்கிளை தலையில் விழுந்து வாலிபர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது22). சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று வெம்பக்கோட்டை ரோட்டில் வேனில் வந்து கொண்டிருந்தார். வனமூர்த்திலிங்காபுரம் அருகே வந்தபோது மரக்கிளை முறிந்து வேன் மீது விழுந்தது.

    இதையடுத்து வேனை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு தனது சகோதரர் பாலகுருநாதனை செல்போனில் அழைத்து அங்கு வருமாறு கூறினார்.அவர் அங்கு வந்தவுடன் இருவரும் சேர்ந்து வேனில் விழுந்து கிடந்த மரக்கிளைகளை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    மாரிமுத்து வேன் மீது ஏறி நின்று மரக்கிளைகளை எடுத்து கொடுக்க பாலகுரு நாதன் அதனை வாங்கி தரையில் வைத்து கொண்டி ருந்தார். அப்போது ஒரு மரக்கிளை எதிர்பாராத விதமாக பாலகுருநாதனின் தலையில் விழுந்தது. இதனால் படுகாயமடைந்த பாலகுருநாதனை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெம்பக் கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகர் அருகே மாட்டுவண்டி தலையில் ஏறி வாலிபர் பலியானார்.
    • இது பற்றிய புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாப்டூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பொன்ராஜ்(வயது 30 )இவர் மாட்டு வண்டி ஓட்டி வந்தார். நேற்று அவர் கும்பமலை அடிவாரத்தில் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அவர் தலையில் மாட்டுவண்டி ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராதவிதாக இருசக்கர வாகனம் சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது.
    • ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் உள்ள காந்தி நகர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் பிரபுகுமார். இவரது மகன் அபிஷேக் (வயது 30).  இவர் இன்று அதிகாலை திண்டிவனம்-புதுவை நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கீழ்கூத்த ப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதாக இருசக்கர வாகனம் சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. 

    இதில் அபிஷேக் தூக்கி வீசப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கிளியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அபிஷேக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    • ஆவின் நிலைய கட்டிடம் நீண்ட காலமாக உள்ளதால் மிகவும் சேதம் ஏற்பட்டு எப்பொழுது இடிந்து விழும் என்ற நிலையில் இருந்தது
    • எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேல் கல் போன்ற ஓடு இவரது தலையில் விழுந்து காயம் அடைந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு ரோ ட்டில் ஆவின் பால் குளிர ட்டும் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ஆவின் நிலைய கட்டிடம் நீண்ட காலமாக உள்ளதால் மிகவும் சேதம் ஏற்பட்டு எப்பொழுது இடிந்து விழும் என்ற நிலையில் இருந்தது. இதனால் இந்த பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்க ப்பட்டது

    . எனவே கட்டிடத்தை இடிக்கும் பணியில் விழுப்புரம் மாவட்டம் வாணிய ம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலு (வயது 67) என்பவர் ஈடுபட்டு வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேல் கல் போன்ற ஓடு இவரது தலையில் விழுந்து காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் பாலுவை மீட்டு புவனகிரி ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பா ண்டிச்சேரி தனியார் ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்ப ட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பாலு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேத்தியாதோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது.
    • இந்த விபத்தில் விஜயகுமார் கால் மற்றும் விலா எலும்புகள் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது.34). இவரது நண்பரான தர்மராஜ் உடன் சேர்ந்து இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் மங்கலம்பேட்டையில் இருந்து கர்ணத்தம் பகுதிக்கு சென்றனர். அப்போது கும்பகோணத்திலிருந்து மங்கலம்பேட்டை பைபாஸ் வழியாக கார் ஒன்று வந்தது. இந்த காரை சுரேஷ் (34) என்பவர் ஓட்டி வந்தார்.  இந்நிலையில் கர்ணத்தம் பைபாஸ் சாலை அருகே கார் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது

    . இந்த விபத்தில் விஜயகுமார் கால் மற்றும் விலா எலும்புகள் முறிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து விஜயகுமாரை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி, தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்க்ள், விஜயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தில் விஜயகுமாரின் அண்ணன் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சுரேஷ் மீது மங்கலம்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • தனது நண்பரை புளியங்குடி கிராமத்தில் விட மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • சாலையோரம் இருந்த கட்டையில் மோதி வாலிபர் இறந்தார்.

    கடலூர்:

    சிதம்பரம் மீன் மார்க்கெட் வீதியில் வசிப்பவர் ஜனார்த்தனன் என்பவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 28). இன்று அதிகாலை தனது நண்பரை புளியங்குடி கிராமத்தில் விட மோட்டார் சைக்கிளில் சென்றார். நண்பரை இறக்கி விட்டு வீடு திரும்பினார். அப்போது பனி ப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் குச்சிப்பாளையம் அருகேமோட்டார் சைக்கிளில் வந்தபோது சாலையோரமிருந்த குடிநீர் குழாய் கட்டையில் மோதினார். இதில் மார்புப் பகுதியில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சாலையில் சென்றவர்கள் கொடுத்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த சிதம்பரம் தாலுக்கா போலீசார் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடும் பனிப்பொழிவால் சாலையோரம் இருந்த கட்டையில் மோதி வாலிபர் இறந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ×