search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stone on the head"

    • ஆவின் நிலைய கட்டிடம் நீண்ட காலமாக உள்ளதால் மிகவும் சேதம் ஏற்பட்டு எப்பொழுது இடிந்து விழும் என்ற நிலையில் இருந்தது
    • எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேல் கல் போன்ற ஓடு இவரது தலையில் விழுந்து காயம் அடைந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு ரோ ட்டில் ஆவின் பால் குளிர ட்டும் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ஆவின் நிலைய கட்டிடம் நீண்ட காலமாக உள்ளதால் மிகவும் சேதம் ஏற்பட்டு எப்பொழுது இடிந்து விழும் என்ற நிலையில் இருந்தது. இதனால் இந்த பழைய கட்டிடத்தை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்க ப்பட்டது

    . எனவே கட்டிடத்தை இடிக்கும் பணியில் விழுப்புரம் மாவட்டம் வாணிய ம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாலு (வயது 67) என்பவர் ஈடுபட்டு வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேல் கல் போன்ற ஓடு இவரது தலையில் விழுந்து காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் பாலுவை மீட்டு புவனகிரி ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பா ண்டிச்சேரி தனியார் ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்ப ட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பாலு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சேத்தியாதோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×