search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரம் முறிந்து விழுந்து பனியன் தொழிலாளி காயம்
    X

     வீட்டின் மீது விழுந்த மரத்தை படத்தில் காணலாம்

    மரம் முறிந்து விழுந்து பனியன் தொழிலாளி காயம்

    • மர கிளைகள் உடைந்து காணப்பட்டதோடு, சாலையில் மழைநீர் தேக்கம் அடைந்தது.
    • திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பனியன் தொழிலாளியை அனுப்பி வைத்தனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து, சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றில் பல மர கிளைகள் உடைந்து காணப்பட்டதோடு, சாலையில் மழைநீர் தேக்கம் அடைந்தது. இந்நிலையில் திருப்பூர் முருகம்பாளையம் சுண்டமெடு அம்பேத்கர் நகர் பகுதியில் பலத்த காற்று வீசியது. அப்போது சாலையோரம் இருந்த பனைமரம் பனியன் தொழிலாளியான ரங்கன் (வயது 45) என்பவர் வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டிலிருந்த ரங்கன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வீரபாண்டி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    Next Story
    ×