search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவநிலை"

    • 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியது.
    • கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல் போய் நிலம் போல் மாறிவிட்டது.

    கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே 'ஆரல்' எனும் கடல் அமைந்துள்ளது. இந்த கடல் 68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இது உலகின் 4-வது பெரிய கடல். 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியது.

    2010 -ல் பெரும்பாலும் வறண்டது. 'ஆரல்' கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு நடந்தது. 1960-ல் சோவியத் யூனியன் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக ஆற்றுத்தண்ணீர் திசை திருப்பப்பட்டது. 


    இப்பகுதியின் 2 பெரிய ஆறுகளான வடக்கில் சிர்தர்யா மற்றும் தெற்கில் அமுதர்யா ஆறுகள் பாலைவன பகுதியில் பருத்தி மற்றும் பிற பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக திசைதிருப்பி விடப்பட்டன. இதனால் ஆரல் கடல் வற்ற தொடங்கியது. ஆறுகளின் தண்ணீரைத் திருப்பி பாலைவனத்தை விளைநிலமாக உருவாக்கிய பிறகு, நீர்வரத்து வெகுவாகக் குறைந்து கடல் முழுவதும் ஆவியாகிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல் போய் நிலம் போல் மாறிவிட்டது. இது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆண்டுதோறும் ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் காய்ப்பு சீசன் இருக்கும்.
    • காய்ப்பு சீசனில், ஒரு மரத்திற்கு 300 முதல் 400 கிலோ வரை மாங்காய் கிடைக்கும்.

    உடுமலை :

    உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள மணல் கலந்த செம்மண் பரப்பு மா சாகுபடிக்கு உகந்த மண் வளமாகும். இந்த வளம் மிகுந்த ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை, மானுப்பட்டி, ஒன்பதாறு செக்போஸ்ட், திருமூர்த்திநகர், பொன்னலாம்மன்சோலை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.செந்தூரம், நீலம், மல்கோவா, பங்கனப்பள்ளி, பெங்களூரா உட்பட 10-க்கும் மேற்பட்ட ரகங்கள் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

    ஆண்டுதோறும் ஜூன் மற்றும் நவம்பர் மாதங்களில் காய்ப்பு சீசன் இருக்கும். கொத்து கொத்தாக காய்கள் பிடித்து கார்பைட் போன்ற ரசாயன பயன்பாடு இல்லாமல்மரங்களில் மாங்காய்கள் பழுக்கும் போது அப்பகுதியில் பரவும் மணம்மக்களை மட்டுமல்லாது மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள யானைகளையும் இழுப்பது வழக்கம்.ஆனால் இந்தாண்டு மரங்களில் பூ பிடிக்கும் தருணத்தில், பெய்த மழை கோடை காலத்தில் போதிய வெயில் இல்லாதது போன்ற காரணங்களால் மகசூல் முற்றிலுமாக பாதித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், காய்ப்பு சீசனில், ஒரு மரத்திற்கு 300 முதல் 400 கிலோ வரை மாங்காய் கிடைக்கும். சந்தை நிலவரத்தை பொறுத்து கிலோவிற்கு 50 ரூபாயிலிருந்து விலை கிடைக்கும். இந்த வருவாயே எங்களின் வாழ்வாதாரமாக இருந்தது. இந்தாண்டு ஜூன் மாத சீசன் கைகொடுக்கவில்லை. மரங்களில் பூக்கள் உதிர்ந்து தற்போது தழைவு துவங்கியுள்ளது. இதனால்காய் பிடிக்காமல் மகசூல் முற்றிலுமாக பாதித்துள்ளதுஎன்றனர்.

    ×