search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourist"

    • ராஜபாளையம், மதுரை வழியாக காசிக்கு சுற்றுலா ெரயில் விடப்படுகிறது.
    • மே மாதம் 4-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து புறப்படும்.

    மதுரை

    இந்திய ெரயில்வே உணவு சுற்றுலா கழகம் சார்பில் திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து காசிக்கு 'பாரத் கவுரவ்' சுற்றுலா ெரயில் இயக்கப்பட உள்ளது.

    இந்த ெரயில் மே மாதம் 4-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து புறப்படும். இதனை தொடர்ந்து கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக மே மாதம் 6-ந் தேதி ஒடிசா மாநிலம் பூரி செல்லும்.

    அங்கு ஜெகநாதர் கோவில், கொனார்க் சூரிய கோவில் ஆகிய தலங்களில் தரிசனம் செய்யலாம். மே 8-ந் தேதி கொல்கத்தாவில் காளி கோவில் தரிசனம். 9-ந் தேதி பால்குனி நதியில் நீராடி முன்னோர் பித்ரு பூஜை. அதன் பிறகு மகா போதி கோவில் தரிசனம். மே 10-ந் தேதி கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்கள் தரிசனம். 11-ந் தேதி அயோத்தியா சரயு நதியில் நீராடி ராம ஜென்ம பூமி, அனுமன் கோவில்கள் தரிசனம். 12-ந் தேதி பிரக்யாராஜ் திரிவேணி சங்கமத்தில் நீராடி அனுமன் கோவில் தரிசனம். 14-ந் தேதி சுற்றுலா ெரயில் மீண்டும் கொச்சுவேலி வந்து சேரும். இந்த சுற்றுலா ெரயி லுக்கான பயண சீட்டுகள் பதிவு நடந்து வருகிறது.

    • வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் தர்கா உள்பட பல்வேறு வழிபாட்டு தலங்கள் உள்ளது.
    • கோடியக்கரை சரணாலயம் உள்பட பல்வேறு சுற்றுலா தலம் நிறைந்த மாவட்டமாக நாகை விளங்குகிறது.

    வேதாரண்யம்:

    தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் விமான நிலையம் உள்ளது. தமிழகத்தின் கிழக்கு எல்லையான நாகையில் புவியியல் அடிப்படையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என நாகை மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது :-

    நாகை மாவட்டம், ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் தர்கா உள்பட பல்வேறு முக்கிய வழிபாட்டு தலங்களும், கோடியக்கரை சரணாலயம், உள்பட பல்வேறு சுற்றுலா தலமும் நிறைந்த மாவட்டமாக நாகை மாவட்டம் விளங்குகிறது.

    இதுதவிர நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. மேலும் மீனவர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. மீன் ஏற்றுமதி, உப்பு ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது.

    கடற்கரை நகரங்களின் மத்திய பகுதியில் நாகப்–பட்டினம் அமைந்துள்ளது. எனவே எல்லை பாது–காப்பை கணக்கில் கொண்டு விமான நிலையம் அமைத்தால் அது நாட்டிற்கே அரணாக விளங்கும் விமானப்படைக்கு ஏதுவாக இருக்கும்.

    நாகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதி என்பதால் மீட்பு பணிகளுக்கு ராணுவம் மற்றும் மீட்பு படையினர் விரைந்துவர வழி வகுக்கும்.

    கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகள், அறந்தாங்கி வரை உள்ள மக்கள் திருச்சி விமான நிலையம் செல்வதைவிட நாகையில் விமான நிலையம் அமைந்தால் வந்து செல்வது எளிது.

    எனவே "நாகையில் விமான நிலையம் அமைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

    • லாட்ஜில் தங்கியிருந்த சுற்றுலா பயணி இறந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மேற்குவங்கம் முர்ஜிதாபாத்தை சேர்ந்தவர் அமலன் பதன் பதோ பாய். இவர் சிலருடன் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வந்துள்ளார். அவர்கள் மதுரையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு பெருமாள் தெப்பம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

    இதில் அவர் மயங்கி விழுந்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து திடீர்நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனப்பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பது வழக்கம்.
    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், பலத்த மழை பெய்து வருகிறது.

    கோவை

    கோவை மக்களின் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்வது கோவை குற்றாலம்.

    அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்த சுற்றுலா தலம் உள்ளதால் இங்குள்ள இயற்கை அழகினையும், வனவிலங்குகளை கண்டு ரசிக்கவும், அருவியில் குளித்து மகிழவும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வருவார்கள்.

    அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து விட்டு, வனப்பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பது வழக்கம்.

    கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாறைகள் முழுவதும் மறைந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வரவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வனத்துறையினர். அறிவிப்பு பதாகையும் வைத்துள்ளனர். அதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

    • குற்றாலத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் சீசன் தொடங்கவில்லை.
    • தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றாலம், புலிஅருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் சீசன் தொடங்கவில்லை.

    பழைய குற்றாலம்

    கடந்த சில நாட்களாக சாரல் மழை தொடர்ந்து பெய்கிறது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி பழைய குற்றாலம், புலிஅருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

    பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் சீராக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

    ஆனால் பழைய குற்றாலம் அருவிக்கு செல்லும் வழியில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திலேயே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் முதியவர்கள் அருவிக்கு செல்வதில் சிரமம் உள்ளது. மேலும் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் மட்டும் இரவு முழுவதும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பழைய குற்றாலம் அருவியில் இரவில் குளிக்க இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மட்டுமன்றி பழையகுற்றாலத்தை நம்பி வாழும் குத்தகைகாரர்கள், கடை உரிமையாளர்கள், சிறுவியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

    எனவே அனைத்து அருவிகளைப்போல் பழைய குற்றாலம் அருவியிலும் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்க வேண்டும். என்று வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தென்காசி மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    • சுற்றுலா பயணிகள் தொடர் வருகையால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது சீசன் முடிவடையும் நிலையில் உள்ளது. இருந்தபோதும் விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    தற்போது சாரல் மழை பெய்து இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. எனவே இதனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    குறிப்பாக கேரளமாநிலத்தில் இருந்து ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான தூண்பாறை, குணாகுகை, பைன்பாரஸ்ட், மோயர்பாயிண்ட், வெள்ளிநீர் வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் அவர்கள் உற்சாகமாக படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் சென்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுற்றுலா பயணிகள் தொடர் வருகையால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • ஏற்காட்டில் கன மழை-கடும் குளிரால் மக்கள் தவித்தனர்.
    • ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை கன மழையாக பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது . இதையடுத்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை கன மழையாக பெய்தது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் மழையை தொடர்ந்து ஏற்காட்டில் இரவில் கடும் குளிர் நிலவியது. நேற்றிரவு ஏற்காடு முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் பொது மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 21.8 மி.மீ. மழை பெய்தது. மேட்டூர் 3.2, காடையாம்பட்டி 3, ஆனைமடுவு 2, கரியகோவில் 2, சங்ககிரி 1.1, சேலம் 0.9 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 34 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.

    • உடன்குடி அருகே மணப்பாடு கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • குடும்பத்துடன் கடலில் நீராடிதங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி யூனியனுக்கு உட்பட்டது மணப்பாடு கடற்கரை. தற்போது பள்ளிகளுக்கு கோடை காலவிடுமுறை என்பதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி குடும்பத்தோடு இங்குவந்து கொண்டிருக்கின்றனர்.

    கடற்கரையையொட்டி இயற்கையாக அமைந்துள்ள உயரமான மணல் குன்று, குன்றின் மீதுஉள்ள திருச்சிலுவைநாதர் ஆலயம், ஆலயத்திற்குப் பின்புறம் உள்ள கலங்கரை விளக்கு, புனித சவேரியார் வாழ்ந்தகுகை, தியான மண்டபம், நாழிக்கிணறுஆகியவற்றை பார்த்து ரசிப்பதும், மணல் குன்றின் மீதுஏறி விளையாடுவதும், பின்பு குடும்பத்துடன் கடலில் நீராடிதங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக தனிநபர்கள்கடலில் பிடித்த பலவகையான மீன்கள், நண்டு. இறால் போன்றவற்றை பொறித்து விற்பனை செய்கின்றனர். மேலும் ஐஸ் கிரீம் உட்பட பல வகையான தனியார் கடைகள் உள்ளது.

    இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள பொருட்களை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். மணப்பாடு கடற்கரை தினசரி சுற்றுலா பயணிகளின் கூட்டமாகவே உள்ளது.

    திருச்செந்தூரில் இருந்து கடற்கரை வழியாக உவரி, கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகள் மணப்பாடு கடற்கரை வராமல் செல்வதில்லை.

    மலைரெயில் பாதையில் சுற்றுலா பயணிகள் அத்துமீறி வருகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    குன்னூர்:

    மலைப்பிரதேசமான நீலகிரியில் சுற்றுலா தலங்களுக்கு பஞ்சம் இல்லை. இந்த சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். நீலகிரியின் குளு, குளு காலநிலையை அனுபவிக்கும் சுற்றுலா பயணிகள் மலைரெயிலில் பயணம் செய்ய மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலைகளை குடைந்து பாதை அமைக்கப்பட்டு, மலைரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இந்த பாதை குறுகிய மீட்டர் கேஜ் பாதையாக உள்ளது.

    மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே கல்லாறில் இருந்து மலைரெயில் பாதை தொடங்குகிறது. மலைரெயிலின் பாதுகாப்பு கருதி கல்லாறில் இருந்து குன்னூர் வரை பல்சக்கர தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. மலைரெயில் பாதையில் குகைகளும், பாலங்களும் அமைய பெற்றுள்ளன. ஒருசில பாலங்களில் தண்டவாளத்தின் நடுவில் ஜல்லிக்கற்கள் நிரப்பப்படாமல், ‘ஸ்லீப்பர்‘ கட்டைகள் மட்டுமே பொருத்தப்பட்டு உள்ளன.

    இந்த பாலங்களில் ரெயில்வே ஊழியர்கள் தவிர மற்றவர்கள் சுலபமாக நடந்து செல்ல முடியாது. ஏனெனில் ‘ஸ்லீப்பர்‘ கட்டைகளுக்கு இடையே ஜல்லிக்கற்கள் போடப்படாததால், அதன் மீது நடப்பவர்கள் கீழே பார்க்கும்போது தலைசுற்றல் ஏற்பட்டு தவறி விழும் அபாயம் உள்ளது. இதுபோன்ற பாலங்கள் மலைரெயில் பாதையில் உள்ள காட்டேரி, ரன்னிமேடு, விக்கிமரம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. குறிப்பாக ரன்னிமேடு பகுதியில் உள்ள பாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அத்துமீறி நடந்து செல்கின்றனர். இவ்வாறு நடந்து செல்லும்போது, சிறிது தடுமாறினாலும் பாலத்தில் இருந்து தவறி கீழே விழும் அபாயம் இருப்பதை அவர்கள் உணருவது இல்லை. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    காட்டேரி பூங்காவுக்கு அருகில் ரன்னிமேடு ரெயில் நிலையம் அமைந்து உள்ளது. இதனால் பூங்காவை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகள் ரன்னிமேடு ரெயில் நிலையத்தையும் பார்வையிட வருகின்றனர். அவ்வாறு பார்வையிடும் ஒருசில சுற்றுலா பயணிகள் அங்குள்ள பாலத்தில் நடந்து செல்வதை விரும்புகின்றனர். இது ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். எனவே அவர்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இனிமேல் மலைரெயில் பாதையில் உள்ள அந்த பாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுத்தால் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது. #Thailand #Tourist #Selfie #DeathPenalty
    தைபே:

    தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.

    இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய மற்றும் புறப்பட்டு செல்லும் விமானங்கள் கடற்கரை பகுதியில் தரையில் இருந்து சில அடி உயரத்தில் மிகவும் தாழ்வாக பறப்பது வழக்கம்.



    இதன் காரணமாக கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாழ்வாக பறக்கும் விமானத்துக்கு கீழ் நின்றபடி விதவிதமாக ‘செல்பி’ படங்களை எடுக்கின்றனர்.

    இது அவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, விமானிகளின் கவனத்தை திசை திருப்பி பெரும் விபத்துகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதால் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுக்க மாகாண அரசு தடைவிதித்தது.

    எனினும் சுற்றுலா பயணிகள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விமானங்களுடன் ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், தடையை மீறி விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுத்தால் அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது. அரசின் இந்த முடிவு சுற்றுலாவை வெகுவாக பாதித்து, கடற்கரையை மூட வழிவகுக்கும் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  #Thailand #Tourist #Selfie #DeathPenalty
    சுவாச் பாரத் திட்டத்தின் வெற்றியால் இந்திய கிராமங்களில் ஓவியங்களுடன் கூடிய கழிப்பறைகளை காண சுற்றுலாப் பயணிகள் வரும் காலம் வரும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #Hindustantoilets #tourists #Modi #SwachhBharat
    சண்டிகர்:

    பிரதமர் மோடி அரியானா மாநிலம், குருஷேத்ரா நகரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    தனது உரையினிடையே நைஜீரியாவில் இருந்து இங்கு வந்துள்ள ஆய்வுக்குழுவினரை குறிப்பிட்டுப் பேசிய மோடி, ‘திறந்தவெளி கழிப்பறைகள் இல்லாத இந்தியாவுக்கான ‘சுவாச் பாரத்’ திட்டம் இவ்வளவு குறுகிய காலத்தில் மிகப்பெரிய வெற்றியை எப்படி பெற்றது, இதை எப்படியெல்லாம் நைஜீரியா நாட்டில் செயல்படுத்தலாம்? என்பது தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நைஜீரியாவில் இருந்து இங்கு வந்துள்ள நமது விருந்தினர்களை நான் வரவேற்கிறேன்.

    கடந்த ஒரு வாரமாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள உங்களது முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என்றார்.



    மேலும், ‘ஐரோப்பாவில் உள்ள ஒரு இடத்தில் வீடுகளின் முகப்பில் அழகிய சுவரோவியங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளது. அவற்றை கண்டு ரசிப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்துச் செல்கின்றனர்.

    அதேபோல், அநேகமாக இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தின் கழிப்பறைகளின் தூய்மையையும் அவற்றில் உள்ள அழகிய ஓவியங்களையும் காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் இங்குவரும் ஒரு காலம் ஒருநாள் வரும்’ என மோடி நம்பிக்கை தெரிவித்தார். #Hindustantoilets #tourists #Modi #SwachhBharat 
    கொடைகானலில் சுற்றுலா பயணியிடம் ரூ.2000 லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டருக்கு மாநில மனித உரிமை ஆணையம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.
    திண்டுக்கல்:

    கேரளாவை சேர்ந்தவர் பைசல்ரகுமான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு குடும்பத்துடன் கொடைக்கானல் வந்தார். அப்போது பல்வேறு இடங்களை சுற்றிபார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் தனது குடும்பத்துடன் சென்றார்.

    அப்போது போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அவரை வழிமறித்தார். மோட்டார் வாகனத்திற்குரிய ஆவணங்களை பைசல் ரகுமானிடம் கொடுத்தார். உடனே அவரும் உரிய ஆவணங்களை கொடுத்தார்.

    ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் உங்களது வாகனத்தில் மாசுக்கட்டுப்பாட்டு சான்றிதழ் காலாவதியாகிவிட்டது. எனவே ரூ.2000 வழங்கவேண்டும் என்று தெரிவித்தார். அப்போது பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டதால் சப்-இன்ஸ்பெக்டர் அவரை விடுவித்தார்.

    இதுகுறித்து பைசல்ரகுமான் சென்னையில் உள்ள மாநிலமனித உரிமை ஆணையத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் என்னை வழிமறித்து லஞ்சம் கேட்டு அவமதித்தார். இதனால் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைதொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றேன்.

    தேவையில்லாமல் எனக்கு ரூ.2லட்சம் வரை செலவாகிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போஸ் மீது ஒழுங்கு நடவடிக்கையும், ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை விசாரித்த நீதிபதி துரைஜெயசந்திரன் சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர் போஸ் மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது நிரூபணமானது. இதற்காக சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த தொகையை மனுதாரருக்கு தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் வழங்கிவிட்டு சப்-இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துகொள்ளலாம் என உத்தரவிட்டார். #tamilnews
    ×