search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் கன மழை-கடும் குளிரால் மக்கள் தவிப்பு
    X

    ஏற்காட்டில் கன மழை-கடும் குளிரால் மக்கள் தவிப்பு

    • ஏற்காட்டில் கன மழை-கடும் குளிரால் மக்கள் தவித்தனர்.
    • ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை கன மழையாக பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது . இதையடுத்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை கன மழையாக பெய்தது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் மழையை தொடர்ந்து ஏற்காட்டில் இரவில் கடும் குளிர் நிலவியது. நேற்றிரவு ஏற்காடு முழுவதும் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் பொது மக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 21.8 மி.மீ. மழை பெய்தது. மேட்டூர் 3.2, காடையாம்பட்டி 3, ஆனைமடுவு 2, கரியகோவில் 2, சங்ககிரி 1.1, சேலம் 0.9 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 34 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடதக்கது.

    Next Story
    ×