என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கழிப்பறைகள்"

    • சென்னை மாநகராட்சி கழிப்பறைகள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.
    • சென்னை மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் (SBM) கீழ் 620 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சியில் உள்ள பொது கழிப்பறைகளை சுத்தம் செய்ய ₹1,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்ட பிறகும், அவை பயன்படுத்தப்பட முடியாத நிலையில் துர்நாற்றம் வீசி வருகிறது.

    இந்நிலையில், மீண்டும் பொது கழிப்பறைகளை சுத்தம் செய்ய சென்னை மாநகராட்சி ரூ.1,000 கோடியை செலவிட திட்டமிட்டுள்ளது

    சென்னை நகரத்தில் 1,260 இடங்களில் 10,000 பொது கழிப்பறை இருக்கைகளை சுத்தம் செய்தல், பராமரித்தல் மற்றும் கட்டுதல் ஆகியவற்றிற்காக, கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் (SBM) கீழ் 620 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

    ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய இரண்டு மண்டலங்களில் கழிப்பறைகளை 9 ஆண்டுகள் தனியார்மயமாக்க 430 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. இது தவிர, மொபைல் கழிப்பறைகள், மின் கழிப்பறைகள் மற்றும் சிங்காரா சென்னையின் 'ஒப்பனை கழிப்பறைகள்' ஆகியவற்றைக் கட்டவும் பராமரிக்கவும் சுமார் 50 கோடி செலவிட்டுள்ளது.

    ரூ.1000 கோடி செலவு செய்த பின்னரும் சென்னை மாநகராட்சியில் உள்ள கழிப்பறைகள் அசுத்தமாக பயன்படுத்தப்பட முடியாத நிலையில் தான் உள்ளது. அப்படியெனில் இந்த 1000 கோடி ரூபாய் எங்கே போனது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    • அறந்தாங்கி அரசு கல்லூரியில் நவீன கழிப்பறைகள் திறக்கபட்டது
    • அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர்களுக்கான புதிய நவீன கழிப்பறைகளை சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். தமிழக அரசின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பல்வேறு நலத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அறந்தாங்கி அருகே பெருநாவளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவறைகள் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தலின்படி ஐடிசி நிறுவனம் சார்பில் 31 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டது. இதனை அமைச்சர் மெய்யநாதன் மாணவியர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், கல்லூரி முதல்வர் பாலமுருகன், ஐடிசி நிறுவன பொது மேலாளர் விஸ்வநாதன், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், நகர்மன்றத் தலைவர் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×