search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணப்பாடு கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு
    X

    மணப்பாடு கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.


    மணப்பாடு கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பு

    • உடன்குடி அருகே மணப்பாடு கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • குடும்பத்துடன் கடலில் நீராடிதங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி யூனியனுக்கு உட்பட்டது மணப்பாடு கடற்கரை. தற்போது பள்ளிகளுக்கு கோடை காலவிடுமுறை என்பதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி குடும்பத்தோடு இங்குவந்து கொண்டிருக்கின்றனர்.

    கடற்கரையையொட்டி இயற்கையாக அமைந்துள்ள உயரமான மணல் குன்று, குன்றின் மீதுஉள்ள திருச்சிலுவைநாதர் ஆலயம், ஆலயத்திற்குப் பின்புறம் உள்ள கலங்கரை விளக்கு, புனித சவேரியார் வாழ்ந்தகுகை, தியான மண்டபம், நாழிக்கிணறுஆகியவற்றை பார்த்து ரசிப்பதும், மணல் குன்றின் மீதுஏறி விளையாடுவதும், பின்பு குடும்பத்துடன் கடலில் நீராடிதங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக தனிநபர்கள்கடலில் பிடித்த பலவகையான மீன்கள், நண்டு. இறால் போன்றவற்றை பொறித்து விற்பனை செய்கின்றனர். மேலும் ஐஸ் கிரீம் உட்பட பல வகையான தனியார் கடைகள் உள்ளது.

    இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இங்குள்ள பொருட்களை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். மணப்பாடு கடற்கரை தினசரி சுற்றுலா பயணிகளின் கூட்டமாகவே உள்ளது.

    திருச்செந்தூரில் இருந்து கடற்கரை வழியாக உவரி, கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகள் மணப்பாடு கடற்கரை வராமல் செல்வதில்லை.

    Next Story
    ×