search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur"

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
    • காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    காங்கயம் :

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 23-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா். மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:- ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு.

    பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம். காடையூா் துணை மின் நிலையம்: காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், பொன்னங்காளிவலசு ஆகிய பகுதிகள் ஆகும்.

    உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பொம்மநாயக்கன்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், ஆ. அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானூா்பாளையம், பெரியகுமாரபாளையம், முன்டுவேலாம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்காரமுடக்கு, முத்து சமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதூா்.

    • புதுராம கிருஷ்ணாபுரத்தில் சாலை அமைப்பதற்காக கடந்த மாதம் பணிகள் தொடங்கப்பட்டது
    • கடந்த 2 வாரத்திற்கு மேலாக ஜல்லிகற்கள் மட்டும் போடப்பட்டுள்ளது

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட புதுராம கிருஷ்ணாபுரத்தில் சாலை அமைப்பதற்காக கடந்த மாதம் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த 2 வாரத்திற்கு மேலாக ஜல்லிகற்கள் மட்டும் போடப்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. மேலும் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரத்தில் மிகுந்த அவதிக்கு உள்ளாவதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். எனவே விரைவில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பூர் ரெயில் நிலையத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு
    • பெண்ணால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் முதியவரிடம் செல்போனை பிடுங்கி, நீங்கள்பீடி, சிகரெட் குடிக்கிறீர்களா, தீப்பெட்டி வைத்துள்ளீர்களா நான் சேலம்கோட்ட ரெயில்வே அதிகாரி உங்களுக்கு அபராதம் விதித்து விடுவேன் எனக் கூறி 38 வயதுள்ள பெண் ஒருவர் வீடியோ எடுத்தார். பலர் வேடிக்கை பார்க்க, அங்கிருந்த தம்பதியினர்- இளம்பெண்ணையும் வீடியோ எடுத்தார்.

    இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்து நீங்கள் யார் என கேட்க, கடும் வார்த்தைகளால் அப்பெண் திட்டிள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீஸ்காரர் கண்ணன் அப்பெண்ணிடம் விசாரணை நடத்த கால்மேல் கால் போட்டு அமர்ந்தபடி, நான் சேலம் டிவிசன் ஆபீசர், திருப்பூர் ஸ்டேஷன் என்னோடுது, தினமும் வர்றேன். எல்லாத்தையும்புடுச்சி, புடுங்கிட்டாங்களா, என்ன வந்து விசாரிக்கிறீங்க, என்னை யாரும்எதுவும் கேட்க முடியாது என, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்தவர்களிடம் போலீஸ்காரர் விசாரணை நடத்திக் கொண்டிருக்க,குறுக்கிட்ட அந்த பெண்,' உனக்கு விசாரிக்கவே தெரியல, நீ எப்படி? வேலைக்கு வந்த என வாய்க்கு வந்தபடி பேசினார். அங்கு வந்த ரெயில்வே போலீஸ் எஸ்.ஐ., லதா அப்பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அழைத்துச் சென்றனர். தன்னைரெயில்வே அதிகாரி எனக்கூறி போலீசாரிடம் சண்டையிட்ட பெண்ணால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 2-வது குடிநீர் திட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடக்கிறது.
    • திங்கட்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் 2-வது குடிநீர் திட்டத்தில் மின்பராமரிப்பு பணிகள் இன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடக்கிறது.  எனவே திருப்பூர் மாநகராட்சியில் 1-வது மண்டலத்தில் 1, 13, 14 ஆகிய வார்டுகள், 3-வது மண்டலத்தில் 44, 45, 50, 51 ஆகிய வார்டுகள், 4-வது மண்டலத்தில் 52, 55 ஆகிய வார்டுகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடிநீர் வினியோகம் தடைபடும்.

    திங்கட்கிழமை முதல் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி அறிவித்துள்ளார்.

    • நிலுவையில் உள்ள 11072 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
    • நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வினை, முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் தலைவர் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஸ்வர்ணம் ஜெ நடராஜன் வருகிற சனிக்கிழமை 12 ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 20 அமர்வுகளாக காலை 10 மணியளவில் நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வில், நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்திற்குரிய சிறு குற்ற வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 11072

    விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு கொள்ள வேண்டுகிறோம் என்று கூறினார்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
    • 13 ஊராட்சி ஒன்றியங்களில் மருத்துவ குழுவினர் காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் முகாம் நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் :

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. கொசு ஒழிப்பு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 39 மருத்துவ குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் முகாம் நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை மாவட்டத்தில் பெரிய அளவில் டெங்கு பாதிப்பு இல்லை. ஒருசிலர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி அவர்கள் குணமடைந்து விட்டனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறையினர் தீவிர காய்ச்சல் கண்டறியும் முகாம்களை மேற்கொண்டு வருவதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    • லட்சக்கணக்கான வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.
    • திருப்பூர் மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் மழையின் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்து ள்ளதால், அதனை தடுக்கு வீதிகள் தோறும் மாநகரில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது.

    திருப்பூர் மாநகரில் பனியன் நிறுவனங்கள் உள்ள தால், லட்சக்கணக்கான வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியாகவும் திருப்பூர் மாநகர் பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய நிலையில் திருப்பூர் மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாநகர் பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரி த்துள்ளது. கொசுக்கள் உற்பத்தியை தடுக்க மாநகராட்சி பருவகால முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. இந்த 60 வார்டுகளிலும் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களும் வீடு, வீடாக சென்றும், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு சென்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து அடித்தும், அபேட் மருந்துகளை தெளித்தும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :- திருப்பூர் மாநகராட்சியில் மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகள் திட்டமிட்டு மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. 60 வார்டுகளிலும் வீதிகள் தோறும் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. ஒரு பகுதி கூட விடுபடாமல் அனைத்து பகுதிகளுக்கு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தொழிலாளர்கள் நெருக்கம் அதிகமாக நிறைந்த பகுதிகள் கூடுதல் கவனத்துடன் கையா ளப்பட்டு வருகின்றன.

    பொதுமக்களும் தங்களது வீடுகள் அருகில் சிரட்டை, டயர்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் வீட்டு உரிமையாளர்கள் வைத்திருந்தால், அவர்களு க்கு அபராதமும் விதி க்கப்படும். எனவே சுகாதார பணிகளுக்கு பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வேலைவாய்ப்பு முகாம் காலை 10.30 மணிக்கு அறை எண் 439, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
    • எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 28-ந்தேதி காலை 10.30 மணிக்கு புதிய மாவட்ட கலெக்டர் வளாகம், அறை எண் 439, 4வது தளம், பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

    முகாமில் தனியார் துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு பயன்தாரர்களை தேர்வு செய்ய வருகை தர இருக்கிறார்கள். அது சமயம் வேலைநாடுபவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

    அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். 28.10.2022 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும்போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரிசெய்து கொள்ளலாம். புதுப்பித்துக்கொள்ளலாம். கூடுதல் கல்வி பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெற்று உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தனியார் துறைகளில் வேலையில் சேருவதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. இப்பணி முற்றிலும் இலவசமானது. மேலும் விவரங்களுக்கு 0421-2999152, 9499055944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
    • வாகன நெரிசலை பார்த்து போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து வெளிமவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதற்காக திருப்பூரில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் வருகையை பொறுத்து 400 சிறப்பு பஸ்கள் தொடர்ச்சியாக இயக்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக அதிகாரி–ள் தெரிவித்தனர்.கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகை–யில் மாந–க–ரில் இன்று வாகன நெரிசலை பார்த்து போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து பழனி, திண்டுக்கல், மதுரை, தேனி வழித்தட பஸ்கள், தென்மாவட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, கோவை வழித்தடங்களில் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சேலம், திருவண்ணாமலை, சென்னை பஸ்களும், அவினாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி, சத்தியமங்கலம், ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம் பஸ்களும் இயக்கப்படுகிறது.

    பழைய பஸ் நிலையத்தில் இருந்து நகர பஸ்கள், அவினாசி, பெருமாநல்லூர், ஊத்துக்குளி, காங்கயம், கொடுவாய், பல்லடம், சோமனூர் வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    • நீண்ட காலம் முன்னர் அமைந்த குடியிருப்புகளில் உரிய மழை நீர் வடிகால் வசதியில்லாத நிலை உள்ளது
    • மழை நாட்களில் மழை நீர் செல்ல வழியின்றி ரோட்டில் சென்று பாய்வதும் வாடிக்கையாக உள்ளது.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளில் லட்சக்கணக்கான குடியிருப்புகள், தொழிற்சாலை, வர்த்தக கட்டடங்கள் உள்ளன. பிரதான ரோடுகள், முக்கிய வீதிகள் மற்றும் தெருக்களில் கழிவு நீர் கால்வாய்கள், பாதாள சாக்கடை திட்டம் ஆகியன உள்ளன. இருப்பினும் நீண்ட காலம் முன்னர் அமைந்த குடியிருப்புகளில் உரிய மழை நீர் வடிகால் வசதியில்லாத நிலை உள்ளது. பிரதான ரோடுகள், ெரயில்வே பாலங்கள் பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி அவதி ஏற்படுவதும், நீண்ட காலமாக தூர் வாராமல் உரிய பராமரிப்பில்லாத கால்வாய்களில் மழை நாட்களில் மழை நீர் செல்ல வழியின்றி ரோட்டில் சென்று பாய்வதும் வாடிக்கையாக உள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில் அனைத்து வார்டுகளிலும் கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தேங்கி கிடந்த மண் மற்றும் திடக்கழிவுகள் அகற்றிய நிலையில், கழிவு நீர் முறையாக கடந்து செல்ல வழி ஏற்பட்டுள்ளது.

    நகரின் மையமாக உள்ள நொய்யல் ஆறு மற்றும் இதில் சேரும் கிளை ஓடை, பள்ளம் மற்றும் வாய்க்கால்கள் நீர் வடிப் பகுதியாக உள்ளன. இவற்றின் கரைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் காரணமாக மழையின் போது மழை நீர் முறையாக செல்லாமல் அருகேயுள்ள குடியிருப்புகள், கட்டடங்களில் புகுவதும், ரோட்டில் சென்று பாய்வதும் பெரும் அவதியை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் தற்போது நீர் பாயத் தடையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த காலங்கள் போல் மழை பாதிப்புகள் ஏற்படாத வகையில், மாநகராட்சி நிர்வாகம் தற்போது பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

    நகரைக் கடந்து செல்லும் ஏறத்தாழ 7 கி.மீ., நீளமுள்ள நொய்யல் ஆறு தூர் வாரும் பணி பெருமளவு நிறைவடைந்துள்ளது. இதில் வந்து சேரும் ஓடைகள், நல்லாறு, பள்ளம், வாய்க்கால் அனைத்தும் தூர்வாரும் பணி நடைபெறுகிறது. இதில் பொக்லைன் வாகனங்கள், செயின் டோசர் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பணி முழுமையடையும் நிலையில் உள்ளது.நகரில் பெரும் சவாலாக இருந்து வரும் கழிவு நீர் கால்வாய்கள் தூர் வாரும் பணி துரிதமாக நடக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நிரந்தர கான்கிரீட் மூடிய நிலையில் உள்ளதால் அவற்றில் திடக்கழிவு அகற்றும் பணிக்கு முன்னுரிமை அளித்து பணி நடக்கிறது. இதில் நவீன ஸ்லிட்டிங் எந்திரங்கள்,ரீசைக்ளர் எந்திரம் ஒன்றும் சோதனை அடிப்படையில் களம் இறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் 9 டன் எடையுள்ள திடக்கழிவு அகற்றப்பட்டுள்ளது.மழையின் போது அதிகளவில் பாதிக்கப்படும் பகுதிகளாக 2,4,7,8,47 மற்றும் 58 ஆகிய வார்டுகளில் மொத்தம் 29 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் மழை நீர் தேங்கினால் உடனடியாக அகற்றும் வகையில் ஜெனரேட்டர் வசதியுடன் பம்பிங் மோட்டார் தயார் நிலையில் உள்ளது. இது தவிர 8 ஜெட் ராடு வாகனங்கள், 5 ஸ்லிட்டிங் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், 4 ஆட்டோக்களில் இது போல் பம்பிங் மோட்டார் அமைப்புடன் தயாராக உள்ளது. வேறு பகுதிகளில் தேவை ஏற்பட்டால் அவை அங்கு சென்று பயன்படுத்தப்படும். வார்டுவாரியாக மாநகராட்சி அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர்.சுகாதாரப் பிரிவைப் பொறுத்தவரை வார்டு வாரியாக காய்ச்சல் கண்டறிதல் மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. உரிய மருந்துகள் தேவையான அளவு இருப்பு உள்ளது. கொசு ஒழிப்பு பணியாளர்கள் பகுதி வாரியாக 3 நாளுக்கு ஒருமுறை சென்று கொசு மருந்து தெளித்தல், கொசுப்புழு ஒழித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நடப்பு பருவ மழையின் பாதிப்புகள் ஏற்படாத வகையிலும், ஏதும் இருப்பின் அதை எதிர்கொள்ளும் வகையிலும் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

    பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நீர் தேங்காத வகையில் கவனமாக இருக்க வேண்டும்.மைய அலுவலகத்தை, 155304 என்ற டோல் பிரீ எண்ணில் தொடர்பு கொண்டு மழை பாதிப்புகள் இருப்பின் புகார் தெரிவிக்கலாம் என்றார். 

    • மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் தலைமையில் காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
    • பொதுமக்கள் மின் தொடர்பான தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருப்பூர் மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு திருப்பூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. பொதுமக்கள் மின் தொடர்பான தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • சாலை விரிவாக்கத்திற்காக உயரழுத்த மின்பாதையில் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நாளை நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

    திருப்பூர் :

    அவினாசி மின்–சார வாரிய செயற்பொறியாளர் பி.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    அனுப்பர்பாளையம் பிரதான சாலையில் வேலம்பாளையம் பிரிவு அருகில் சாலை விரிவாக்கத்திற்காக உயரழுத்த மின்பாதையில் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே 11 கே.வி. சோளிபாளையம் மின்பாதை மற்றும் 11 கே.வி. வேலம்பாளையம் மின்பாதை ஆகியவற்றிற்குட்பட்ட காசிக்காடு, டி.டி.பி.மில், பி.டி.ஆர்.நகர், சிறுபூலுவப்பட்டி, சொர்ணபுரி, அம்மன் நகர், திலகர் நகர், புதுக்காலனி, மற்றும் வேலம்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் குன்னத்தூர் 16 வேலம் பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குன்னத்தூர், ஆதியூர், தாளபதி, கருமஞ்சிறை, வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம், கணபதிபாளையம், வேலம்பாளையம், நவக்காடு, செட்டி குட்டை, எடைய பாளையம், கம்மாள குட்டை, சொக்கனூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை பெருந்துறை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்புப் பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கயம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர், அரசம்பாளையம், கீரனூர், மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம், நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி முத்தூர் துணை மின் நிலையத்திற்குப்பட்ட முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இந்த தகவலை தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.

    ×