search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொசு மருந்து"

    • வார்டு பகுதிகளில் ஆங்காங்கே பல்வேறு வகையான செடிகள், புற்கள் முளைத்துள்ளது.
    • இந்நிலையில் 18 வார்டுகளில் தொடர்ச்சியாக கொசு மருந்து அடிக்கும் பணியை வேலூர் பேரூராட்சி செயலாளர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு 18 வார்டுகள் உள்ளது. வார்டு பகுதிகளில் ஆங்காங்கே பல்வேறு வகையான செடிகள், புற்கள் முளைத்துள்ளது. அதே போல் ஆங்காங்கே கிடக்கும் கழிவுகளில் கொசுக்கள் ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டு கொசுக்களை உற்பத்தி செய்து வருகிறது. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் 18 வார்டுகளில் தொடர்ச்சியாக கொசு மருந்து அடிக்கும் பணியை வேலூர் பேரூராட்சி செயலாளர் செல்வகுமார் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து கொசு உற்பத்தி அதிகரித்து, மக்களை துன்புறுத்தி வருவதாக வந்த புகாரை அடுத்து அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி தூய்மை பணியாளர்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வருகிற ஜூன் மாதம் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்கு முன்னதாக வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளின் சுற்றுவட்டாரங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

    • திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 60 வார்டு பகுதிகள் உள்ளன.
    • புகை அடிக்கும் கருவிகள், 33 தற்போது பயன்பாட்டில் உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 60 வார்டு பகுதிகள் உள்ளன. வீடுகளில் தேங்கிக் கிடக்கும் குப்பை, சாக்கடை கழிவு நீர் கால்வாய் மற்றும் கழிவுகள் தேங்கியுள்ள பகுதிகள், செடிகள் நிறைந்த புதர் பகுதி உள்ளிட்ட திறந்த வெளிப் பகுதிகளில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன.

    இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக, மாநகராட்சி சுகாதார பிரிவினர் கொசு மருந்து புகை அடித்தல் மற்றும் கொசு புழுஒழிப்பு மருந்து தெளித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிக்கு மண்டலவாரியாக, புகை அடிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட தலா ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. புகை அடிக்கும் கருவிகள், 33 தற்போது பயன்பாட்டில் உள்ளன.சுகாதார பிரிவினர் கூறுகையில், 'வழக்கம் போல் சுழற்சி முறையில் பகுதிவாரியாக புகை மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் கண்டறியப்படும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சுகாதார ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்றனர்.

    • புதர் மண்டிக்கிடக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தி டெங்கு கொசுவை ஒழிக்க மருந்து தெளித்தனர்.
    • மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் மாணவர்கள் மத்தியில் பரவாமல் தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூரில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    இதற்கான துவக்க நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவர்கள், கழிப்பறைகள், வகுப்பறைகள், ஆய்வக ங்கள், நூலகம் மற்றும் புதர் மண்டிக்கிடக்கும் பகுதிகளை தூய்மைப்படுத்தி டெங்கு கொசுவை ஒழிக்க மருந்து தெளித்தனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், "மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் மாணவர்கள் மத்தியில் பரவாமல் தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பருவ தேர்வுகள் தொடங்க இருப்பதால் டெங்கு காய்ச்சலில் இருந்து மாணவர்களை பாதுகாக்கவும், கல்லூரி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்கவும், குழுக்களை அமைத்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ள து" என்றார்.

    • லட்சக்கணக்கான வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.
    • திருப்பூர் மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் மழையின் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்து ள்ளதால், அதனை தடுக்கு வீதிகள் தோறும் மாநகரில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது.

    திருப்பூர் மாநகரில் பனியன் நிறுவனங்கள் உள்ள தால், லட்சக்கணக்கான வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியாகவும் திருப்பூர் மாநகர் பகுதி இருந்து வருகிறது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய நிலையில் திருப்பூர் மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாநகர் பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரி த்துள்ளது. கொசுக்கள் உற்பத்தியை தடுக்க மாநகராட்சி பருவகால முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. இந்த 60 வார்டுகளிலும் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களும் வீடு, வீடாக சென்றும், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு சென்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வருகிறார்கள். கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து அடித்தும், அபேட் மருந்துகளை தெளித்தும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது :- திருப்பூர் மாநகராட்சியில் மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகள் திட்டமிட்டு மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. 60 வார்டுகளிலும் வீதிகள் தோறும் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. ஒரு பகுதி கூட விடுபடாமல் அனைத்து பகுதிகளுக்கு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தொழிலாளர்கள் நெருக்கம் அதிகமாக நிறைந்த பகுதிகள் கூடுதல் கவனத்துடன் கையா ளப்பட்டு வருகின்றன.

    பொதுமக்களும் தங்களது வீடுகள் அருகில் சிரட்டை, டயர்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் வீட்டு உரிமையாளர்கள் வைத்திருந்தால், அவர்களு க்கு அபராதமும் விதி க்கப்படும். எனவே சுகாதார பணிகளுக்கு பொது மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 3 நாட்கள் நடைபெறும்
    • பொதுமக்களுக்கு காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    ஜோலார்பேட்டை:

    ேஜாலார்பேட்டை பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மையப்பன் நகர் ஊராட்சி பகுதி முழுவதும் நேற்று முன்தினம் வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடிக்கும் பணி தொடங்கியது.

    அம்மையப்பன் நகர் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன் தலைமையில் ஊராட்சி மன்ற துணை தலைவர் நிர்மலா சஞ்சய் மற்றும் சுகாதார துறை சார்பில் சுகாதார ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் இணைந்து அப்பகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    முன்னால் தலைவர் வட்டம், வி.எம்.வட்டம், வரதராஜ் கவுண்டர் வட்டம், சில்கூர் உள்ளிட்ட அம்மையப்பன் நகர் ஊராட்சி பகுதி முழுவதும் உள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது

    இப்பணி தொடர்ந்து 3 நாட்களாக நடைபெறும் என ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா இளவரசன் தெரிவித்தார்.

    • ஏர்வாடி பகுதிகளில் கொசுக்களை ஒழிக்க மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    • கடந்த ஜூன் மாதம் முதல் கட்ட கொசு மருந்து தெளிப்பு பணி நடந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டாரத்தில் உள்ள ஏர்வாடி, வாலிநோக்கம், முந்தல், மாரியூர், ஒப்பிலான் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை ஒழிக்க பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் வருடத்திற்கு 2 முறை வீடு, வீடாக சென்று கொசு மருந்து தெளிப்பான்கள் மூலம் தெளிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் கட்ட கொசு மருந்து தெளிப்பு பணி நடந்தது. இந்த நிலையில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தலின் படி, சென்னை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரவீந்திரன் ஆகியோர் உத்தரவுப்படி நேற்று சின்ன ஏர்வாடி பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியை மாவட்ட மலேரியா அலுவலர் ரமேஷ் தொடங்கி வைத்தார். 30 நாட்கள் நடைபெறும் இந்த பணியில் 30 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்களோடு இணைந்து டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களும் வீடு, வீடாக சென்று தண்ணீரில் வளரும் கொசுப்புழுக்களை அபேட் மருந்துகள் ஊற்றி அழித்து வருகின்றனர்.

    இந்த பணிகளை பரமக்குடி சுகாதாரத்துறை இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலசுப்பிரமணியன், கடலாடி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன் ஆய்வு செய்தனர். இதில் சுகாதார ஆய்வாளர்கள் செல்லத்துரை, ராஜசேகரன், சுப்பிரமணியன், ராம்பிரபு, முரளிதரன், தீனதயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
    • கால்வாயில் தூர்வாரும் பணியும் நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    பருவ மழை தொடங்குவதையொட்டி முன்னெச்சரிக்கையாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் காலை மற்றும் மாலை என நாளொன்றுக்கு இரு வேளையிலும் மாநகராட்சி பணியாளர்கள் வாகனங்கள் மூலம் சென்று ராட்சத மருந்து தெளிக்கும் எந்திரம் மூலம் கொசு மருந்து தெளித்து வருகின்றனர்.

    இதேபோல் ஒவ்வொரு சனிக்கிழமை அன்று மாஸ் கிளினிக் என்ற பெயரில் மாநகர் பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. கால்வாயில் தூர்வாரும் பணியும் நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×