search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ குழு"

    • 35 வயது மதிக்கத்தக்க ஒற்றை காட்டு யானையை பிடிக்க மருத்துவ குழு வரவழைக்கப்பட்டுள்ளது.
    • வனத்துறையினருடன் இணைந்து கடம்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைகிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை கடந்த ஒரு வருடமாக உணவுக்காக பூதிக்காடு, செங்காடு உள்ளிட்ட வனத்தை யொட்டிய விவசாயம் நிலங்களில் புகுந்து சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கடம்பூர் வனத்துறையில் இது குறித்து புகார் அளித்து இருந்தனர்.

    மேலும் பயிர்களை நாசம் செய்து வரும் இந்த ஒற்றை காட்டு யானை பிடித்து வேறொரு பகுதியில் விட வேண்டும் எனவும் வனத்துறைக்கு விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கையும் விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடம்பூர் வனத்துறையினர் உயரதிகாரிகளின் அனுமதியை தற்போது பெற்றுள்ள நிலையில் 35 வயது மதிக்கத்தக்க அந்த ஒற்றை காட்டு யானையை பிடிக்க மருத்துவ குழு வரவழைக்கப்பட்டுள்ளது.

    அதே போன்று காட்டு யானை பிடித்து மற்றொரு வனப்பகுதியில் கொண்டு செல்ல விடுவதற்கு வனத்துறை சார்பில் ஒசூர் பகுதியில் இருந்து லாரியும் வரவழைக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து மருத்துவ குழு மற்றும் கடம்பூர் வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான வனத்துறையினர் இணைந்து அந்த ஒற்றை யானை செல்லும் வழி தடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த ஒற்றை காட்டு யானையானது சமதளமான விவசாய நிலங்களையொட்டி வரும் போது தான் மருத்துவ குழுவால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    வனத்துறையினர் மற்றும் மருத்துவ குழு இணைந்து ஒற்றை காட்டு யானையை கண்காணித்து வரும் நிலையில் மயக்க ஊசி செலுத்தி இந்த காட்டு யானை வேறு எந்த வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த நிகழ்வை பார்க்க மலைகிராம மக்கள் ஆங்காங்கே வேடிக்கை பார்த்து வருவதால் காட்டு யானையால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் வனத்துறையினருடன் இணைந்து கடம்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • புதிய செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு மாநில குழு ஆய்வு நடத்தி ஒப்புதல் வழங்கி வந்தது.
    • மாவட்ட மருத்துவக்குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 18 செயற்கை கருத்தரித்தல் மையங்கள் அமைக்க ஒப்புதல் கேட்டு, பல்வேறு தனியார் மருத்துவமனை நிர்வாகங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் தொழில்நுட்ப ரீதியான மருத்துவ வசதிகள் உள்ளதா, உள்கட்டமைப்பு நிலவரம் குறித்து, மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி, தேசிய மருத்துவம் மற்றும் சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, மூத்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீ வித்யா தலைமையிலான மாவட்ட மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர்.

    குழு அதிகாரிகள் கூறுகையில், புதிய செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு மாநில குழு ஆய்வு நடத்தி ஒப்புதல் வழங்கி வந்தது. தற்போது நடைமுறை மாற்றப்பட்டு மாவட்ட மருத்துவக்குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பித்துள்ள மருத்துவமனைகளில் ஆய்வு நடக்கிறது என்றனர்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
    • 13 ஊராட்சி ஒன்றியங்களில் மருத்துவ குழுவினர் காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் முகாம் நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் :

    வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. கொசு ஒழிப்பு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 39 மருத்துவ குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் முகாம் நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை மாவட்டத்தில் பெரிய அளவில் டெங்கு பாதிப்பு இல்லை. ஒருசிலர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி அவர்கள் குணமடைந்து விட்டனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறையினர் தீவிர காய்ச்சல் கண்டறியும் முகாம்களை மேற்கொண்டு வருவதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    ×