search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்பத்திரி"

    • விபத்தில் சிக்கியவர்களை தனது காரில் ஏற்றி தானும் பயணம் செய்து மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
    • ஒரு நபருக்கு நினைவு திரும்பாத காரணத்தால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ரெயிலடி மேம்பாலத்தில் இருந்து குத்தாலம் செல்லும் இறக்கத்தில் மூன்று இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் அப்பகுதியைச் சேர்ந்த எல்.ஐ.சி முகவர் வெங்கட்ரமணன், கூறைநாட்டைச் சேர்ந்த சுகுமார் உள்பட 3 பேர் காயம் அடைந்து கீழே விழுந்தனர்.

    அப்போது அந்த வழியாக குத்தாலம் நோக்கி சென்று கொண்டிருந்த மாவட்ட கலெக்டர் மகாபாரதி உடனே விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரமாகும் என்பதால் தன்னுடன் வந்த செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரியின் காரில் விபத்து ஏற்பட்டவர்களை ஏற்றி கொண்டு அதே காரில் தானும் பயணம் செய்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    மூன்று பேருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு நபருக்கு நினைவு திரும்பாத காரணத்தால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

    கலெக்டரின் இந்த செயலை பலரும் பாராட்டினர்.

    • மதுரை தனியார் கண் மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு நோய் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • அடுத்த 10 ஆண்டுகளில் சர்க்கரை, இதய நோய்கள் முக்கிய உயிர்க் கொல்லியாக மாறும் என அரசு ஆஸ்பத்திரி டீன் பேசினார்.

    மதுரை

    மதுரை தனியார் கண் மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு நோய் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

    சர்க்கரை நோய் இன்னும் 10 ஆண்டுகளில் மேஜர் கில்லராக இருக்கும். ஒரு காலத்தில் காலரா போன்ற நோய்கள் மேஜர் கில்லராக இருந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் சர்க்கரை நோய், இருதய நோய்கள் மேஜர் கில்லராக இருக்கும். இது மருத்துவமனைகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும். மக்களை தேடி மருத்துவம் மூலம் வீடு தேடி சென்று மருந்து, மாத்திரை கொடுத்து அரசு முயற்சிகள் மேற்கொண்டாலும் வரும் காலத்தில் நோய்களின் தாக்கம், பாதிப்பு அதிக அளவில் இருக்கும். எனவே இந்த சர்க்கரை நோய் குறித்து மக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டி யது அவசியம். இதை அரசு, தனிநபர்களால் மட்டும் செய்ய முடியாது. அனைத்து தரப்பிலும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    வயிற்றுப் பகுதி (தொப்பை) நெஞ்சுக்குள் இருந்தால் சர்க்கரை நோய் வராது. ஆபத்தும் வராது எனவே தனியார் மருத்துவமனைகளும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி யது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய சுகாதார செயலாளர் கதன்ஷ் பந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • செங்கல்பட்டு மாவட்ட துணை இயக்குநர் பரணிதரன் கலந்து கொண்டனர்.

    நந்திவரம் கூடுவாஞ்சேரியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார பெருவிழா மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்தார். மத்திய சுகாதார செயலாளர் கதன்ஷ் பந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மருத்துவ காப்பீடு அட்டை, முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்ட பயனாளிகளுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம், கண்ணொளி காப்போம் திட்ட பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகள், ரத்த தானம் முகாமில் ரத்த தானம் வழங்கிய நபர்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை மத்திய சுகாதார செயலாளர் சுதன்ஷ் பந்த் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கூடுதல் இயக்குநர் சேகர், செங்கல்பட்டு மாவட்ட துணை இயக்குநர் பரணிதரன் கலந்து கொண்டனர்.

    • விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
    • ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, டாக்டர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உடன் இருந்தனர்.

    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது டாக்டர்கள் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டு, பெண்கள் உள் நோயாளிகளின் பிரிவு. குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையின் விவரம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் ஆஸ்பத்திரியின் சுற்றுப்புறங்களை பார்வையிட்டு தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு டாக்டர்களுக்கு கலெக்டர் கலைச் செல்வி மோகன் அறிவுரை வழங்கி, மருந்தகத்தில் மருந்துகள் இருப்புகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூர்- ஓரகடம் கூட்டு சாலையில் நடைபெறும் சாலை விரிவாக்க பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, டாக்டர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் உடன் இருந்தனர்.

    • இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
    • மின்சாரம் இல்லாததால் அல்-ஷிபா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைகள் எதுவும் செயல் படவில்லை.

    காசா:

    இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 37-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    வான்வழி தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின. காசாவுக்குள் இஸ்ரேலின் தரைப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா சிட்டியின் மையப் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்துக்கும்-ஹமாஸ் அமைப்பினருக்கும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

    இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். தொடர் குண்டு வீச்சு காரணமாக ஆயிரக்கணக்கானோர் காசாவில் உள்ள அல்-ஷிபா, அல்-குத்ஸ், அல்-ரான்டி ஆகிய மூன்று பெரிய ஆஸ்பத்திரிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    அங்கு காயம் அடைந்தவர்களுக்கும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஆஸ்பத்திரிகளுக்கு அருகே வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. அல்-ஷிபா ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு துப்பாக்கி சண்டை நடந்தது. ஆஸ்பத்திரிகளை சுற்றி தாக்குதல் நடந்து வருவதால் நோயாளிகள், தஞ்சம் அடைந்தவர்கள் தவிப்புக் குள்ளாகி இருக்கிறார்கள்.

    ஏற்கனவே காசாவில் உணவு, குடிநீர், மின்சாரம், எரிபொருள் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வரும் நிலையில் தற்போதைய இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களால் இரண்டு பெரிய ஆஸ்பத்திரிகளின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியுள்ளது. மிகப்பெரிய மற்றும் முக்கிய ஆஸ்பத்திரியான அல்-ஷிபாவில் எரிபொருள் கையிருப்பு முற்றிலும் தீர்ந்துவிட்டது.

    ஜெனரேட்டர்கள் இயங்காததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த 3 குழந்தைகள் உயிரிழந்தன. அந்த ஆஸ்பத்திரியில் குறை பிரசவத்தில் பிறந்த 45 குழந்தைகள் உள்ளன. அதேபோல் அல்-குத்ஸ் ஆஸ்பத்திரியும் முடங்கி உள்ளது.

    இது தொடர்பாக அல்-ஷிபா மருத்துவமனை இயக்குனர் கூறும்போது, மின்சாரம் இல்லாததால் அல்-ஷிபா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைகள் எதுவும் செயல் படவில்லை. காயம் அடைந்து வருபவர்களுக்கு முதல் உதவி தவிர வேறு எந்த சிகச்சை அளிக்க முடியவில்லை. அறுவை சிகிச்சையும் தேவைப்படுவோர் உயிரிழக்கும் சூழல் உள்ளது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை காப்பாற்ற ஊழியர்கள் முயற்சித்து வருகிறார்கள் என்றார்.

    இன்குபேட்டரில் இருந்து குழந்தைகள் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளன.

    இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, காசாவின் முக்கிய மருத்துவமனையான அல்-ஷிபாவில் ஒரு மோசமான ஆபத்தான சூழ்நிலை இருக்கிறது. மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்புகள், ஏற்கனவே சிக்கலான சூழ்நிலைகளை மோசமாக்கியுள்ளன. அல்-ஷிபா மருத்துவமனை முற்றிலும் செயல்படவில்லை.

    இது வருத்தம் அளிக்கிறது. அல்-ஷிபா ஆஸ்பத்திரியில் மின்சாரம், தண்ணீர், இணைய தளம் இல்லை. இதனால் அத்தியாவசிய உதவியை வழங்குவதற்கான எங்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    இதற்கிடையே அல்-ஷிபா ஆஸ்பத்திரிக்கு 300 லிட்டர் எரிபொருள் வழங்கியதாகவும், ஆனால் அதை ஹமாஸ் அமைப்பு தடுத்ததாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

    அல்-ஷிபா மருத்துவமனை கீழே ஹமாசின் நிலத்தடி கட்டமைப்பு செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால் இதை ஹமாஸ் அமைப்பு திட்டவட்டமாக மறுத்தது. இதற்கிடையே அல்-ஷிபா மருத்துவ மனையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூட இல்லை என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். 17 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

    • அரசு ஆஸ்பத்திரிகளில் ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • வைரஸ் காய்ச்சலா என்பதை நன்கு ஆய்வு செய்து அதற்கான சிகிச்சை யை முறையாக வழங்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டு உள்ளது.

    ராஜபாளையம்

    மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் ராஜ பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் குழந்தை கள், முதியவர்கள் என பொதுமக்கள் என பலரும் காய்ச்சலால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை ராஜ பாளை யம்- தென்காசி ரோட்டில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் எம்.எல்.ஏ தங்க பாண்டியன் ஆய்வு மேற் கொண்டு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை களை முடுக்கி விட்டார்.

    ஆய்வின்போது தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    ராஜபாளையம் தொகுதி யில் அதிகளவில் காய்ச்ச லால் குழந்தைகளும் பொது மக்களுக்கும் பாதிக்கப்பட்டு வருவதால் மருத்துவ மனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் செவிலி யர்கள் பணியில் இருக்க வேண்டுமென கூறப்பட்டு உள்ளது. நோயாளிகளிடமும் கனிவுடன் பேசி அவர் களிடம் அவர்களுக்கு சாதா ரண காய்ச்சலா அல்லது வைரஸ் காய்ச்சலா என்பதை நன்கு ஆய்வு செய்து அதற்கான சிகிச்சை யை முறையாக வழங்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டு உள்ளது.

    தினசரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் 150 முதல் 200 புறநோயாளி களுக்கும் அரசு மருத்துவ மனையில் 800 முதல் 1000 வரையிலான புறநோயாளி களுக்கும் மருத்துவம் பார்க்கப்படுகிறது. குழந்தை களுக்கு காய்ச்சல் என்றால் வீட்டில் வைத்து மருந்து கொடுப்பதை தவிர்த்து விட்டு உடனடியாக குழந்தை களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிசிச்சை பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து பி.ஏ.சி.ஆர் அரசு மருத்துவ மனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பூமி பூஜை செய்து அதற்கான பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது, அந்த பணிகளை தங்கப் பாண்டி யன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.

    தலைமை மருத்துவர் (பொறுப்பு) மாரியப்பன் அவர்கள் மருத்துவர் சுரேஷ் அவர்கள், பொதுப் பணித்துறை உதவிப் பொறி யாளர் பாலசுப்பிரமணியன் கவுன்சிலர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப் பாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருத்துறைப்பூண்டி சாலையில் மணலி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே குரும்பல் காளிய ம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 62). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். சம்பவத்தன்று இவர் திருத்துறைப்பூண்டி சாலையில் மணலி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆலத்தம்பாடி பகுதியில் இருந்து பருத்திச்சேரி நோக்கி ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக லோடு ஏற்றி வந்த டிராக்டர் நந்தகுமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருவாரூர் மாவட்டம் கூரை வீடுகள் அதிகமாக உள்ள மாவட்டம்.
    • மக்கள் உடல் நோயை தீர்த்து கொள்ளும் இடமாக விளங்கக்கூடியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு மருத்துவ மனையில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் 'கோவிட் சிறப்பு வார்டு' கட்டிடம் கட்டப்ப ட்டது.

    இந்த கட்டிடத்தை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசும்போது, திருவாரூர் மாவட்டம் கூரை வீடுகள் அதிகமாக உள்ள மாவட்டம். ஏழை எளியவர்கள் அதிகமா கவும், குடிசைகள் வீடுகள் நிறைந்த மாவட்ட மாகும். எனவே இந்த தொகுதியின் வளர்ச்சிதான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    இந்த மருத்து வமனையை பொருத்தவரை ஏழை எளிய மக்கள் உடல் நோயை தீர்த்து கொள்ளும் இடமாக விளங்க கூடியது. எது தேவை என்று கேட்கும் பட்சத்தில் நிதி ஒதுக்கி தருவேன் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான கோபால், இணை இயக்குநர் மருத்துவர் சிவக்குமார், தலைமை மருத்துவர் ரேணுகா, மருத்துவர்கள் வினோத் குமார், சக்ரவர்த்தி மற்றும் நன்னிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.குணசேகரன், ஒன்றிய துணை பெருந்தலைவர் சி.பி.ஜி. அன்பு, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சம்பத், நன்னிலம் நகர அ.தி.மு.க செயலாளர் பக்கிரிசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 7-ந் தேதி இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாளால் தாக்கப்பட்டனர்.
    • காயம் அடைந்தவர்கள் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர்க ளை வேதாரண்யம் அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது கடந்த 7-ம் தேதி இலங்கை கடற்கொ ள்ளையர்கள் அரிவாளால் தாக்கி அவர்களிடமிருந்து வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி உள்ளிட்ட பொரு ட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    கொள்ளையர்கள் தாக்குத லில் காயமடைந்த வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த மணியன், வேல்முருகன், சத்யராஜ், அக்கரைப்பே ட்டையைச் சேர்ந்த கோடி லிங்கம் ஆகியோர் நாகை அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவர்களை பாஜக மாவட்ட தலைவர் கார்த்தி கேயன் தலைமையில் மாவட்ட செயலாளர் விஜேயந்திரன், விவசாய அணித் தலைவர் சின்னப்பிள்ளை, ஆன்மிக பிரிவு தலைவர் கஜேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகள் நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

    மேலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா மலை மூலமாக மத்திய அரசிடம் பேசி மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பா டுகளை செய்து தர நடவடி க்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    • கிளை செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    • விழா ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேமம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாநில மருத்துவ அணி தலைவர் கனிமொழி, என்.வி.என்.சோமு எம்.பி. மற்றும் செயலாளர் மரு.எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ ஆகியோரின் அறிவுறுத்தல்படி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் அஞ்சுகம் பூபதியின் வழிகாட்டுதல் படி, மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ.வின் ஆலோசனை ப்படி அண்ணா பிறந்தநாள் மற்றும் கருணாநிதி நூற்றா ண்டு விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட மருத்துவ அணி சார்பில் திருத்துறைப்பூண்டி அடுத்த விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ அணி தலைவர் சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.

    மாவட்ட அமைப்பாளர் திவாகரன் சுபாஷ், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பிரகாஷ், ஊராட்சி தலைவர் தனலஷ்மி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட மருத்துவ அணி துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள் வீரராகுல் (திருத்துறைப்பூண்டி), அரவிந்தன் (மன்னார்குடி), ஒன்றிய துணை தலைவர் ராமகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் தொகுதி துணை அமைப்பாளர் தீபன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அணியினர் செய்திருந்தனர்.

    • நர்சிங் படிப்பை பாதியில் கைவிட்ட பெண் உள்பட 2 பேர் மருந்துகளை பரிந்துரைத்ததும், ஊசிசெலுத்தியதும் தெரியவந்தது
    • யாரோ ஒரு டாக்டரிடம் வீடியோ கால் மூலம் பேசி சிகிச்சை அளித்ததாகவும் தகவல்

    சூலூர்,

    கோவை சூலூர் அருகே உள்ள மயிலம்பட்டி பகுதியில் டாக்டர்கள் இன்றி முறையாக மருத்துவம் பயிலாத 2 பேர் ஆஸ்பத்திரி நடத்தி வருவதாக மாவட்ட சுகாதார துறையினருக்கு புகார்கள் சென்றது.

    அதன்பேரில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) மீரா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    அந்த ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் யாரும் இல்லை. மருத்துவமனைக்கு வரும் டாக்டர்கள் குறித்த எந்தவித விவரமும் இல்லை.

    ஆஸ்பத்திரியில் நர்சிங் படிப்பை பாதியில் கைவிட்ட பெண் உள்பட 2 பேர் டாக்டர் பெயரில் மருந்துகளை பரிந்துரைத்ததும், நோயாளிகளுக்கு ஊசி செலுத்தியதும் தெரியவந்தது. அவர்கள் யாரோ ஒரு டாக்டரிடம் வீடியோ கால் மூலம் பேசி சிகிச்சை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறையினர் சூலூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுபற்றி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் (ெபாறுப்பு) மீரா கூறியதாவது:-

    மயிலம்பட்டி பகுதியில் 24 மணி நேர மருத்துவமனை என்ற பெயரில் தனியார் மருத்துவமனை செயல்பட்டது. இந்த மருத்துவமனை மீது பொதுமக்கள் புகார் அளித்ததின் பேரில் அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து விசாரித்த பின் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    வழக்குப்பதிந்த பின் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
    • சீர்காழி நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது,

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலச்சாலை பகுதியை சேர்ந்த 20 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர் சென்னையி லிருந்து வருகை புரிந்தார். தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் இருந்ததால் சீர்காழி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது டெங்கு அறிகுறிப்பது தெரிய வந்தது.

    இதனை அடுத்து அரசு மருத்துவ மனை டெங்கு சிகிச்சை வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் பெங்களூரில் இருந்து வருகை புரிந்தவருக்கும், சீர்காழி சேர்ந்த மற்றொருவருக்கும் டெங்கு பாதிப்பு இருந்தததை அடுத்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சீர்காழி அரசு மருத்துவம னையில் டெங்கு பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்க ப்பட்டுள்ளது.

    டெங்கு பாதிப்பு அடுத்து சீர்காழி நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது, பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுற்றி உள்ள பகுதிகளில் தேவையில்லாத தூக்கி எறியப்பட்ட டயர்கள் தேங்காய் ஓடுகள் , பழைய பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவற்றில் தண்ணீர் தே ங்காதவாறு கண்காணித்து அதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் அறிவுறு த்தியுள்ளது.

    ×