search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடை அருகே ஆஸ்பத்திரியில் நர்சுகளிடம் தகராறு
    X

    கோப்பு படம் 

    புதுக்கடை அருகே ஆஸ்பத்திரியில் நர்சுகளிடம் தகராறு

    • தட்டி கேட்டவருக்கு அடி-உதை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே வெள்ளை யம்பலம் பகுதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. சம்பவ தினம் இரவு இங்கு ஐரேனி புரம் எட்வின் ஜேக்கப் (வயது 32) என்பவர் பணி யில் இருந்துள்ளார்.

    அப்போது முஞ்சிறை பகுதி ராஜு மகன் ரீகன், அவரது சகோதரர் ரெஜின், நெடுமானி வயலங்கரை பாபு மகன் மனோஜ் உள்பட 4 பேர் உடல் நிலை பாதித்த ரீகனின் தாயாரை மருந்து வாங்க அழைத்து சென்றுள்ளனர்.

    அப்போது அங்குள்ள நர்சு களிடம் தகாத வார்த்தைகள் பேசியதாகவும் இதை தட்டிக் கேட்ட எட்வின் ஜேக்கப்பை ரீகன், ரெஜின், பாபு உள்ளிட்ட 4 பேரும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் அதே மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்குப்பதிவு செய்த னர்.

    இது போன்று ரெஜின் அளித்துள்ள புகாரில் உடல் நிலை பாதித்த எனது தாயாரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது, அங்குள்ள பணியாளர் எட்வின் ஜேக்கப் மற்றும் மேலும் 3 பேர் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி உள்ளார்.

    இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×