search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur"

    • பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம்.
    • 228 பள்ளிகளில் நாளை காலை 10 மணிக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக குலுக்ல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 013-2014-ம் கல்வி ஆண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

    மேலும் 2023-2024ம் கல்வி ஆண்டிற்கு இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள 228 பள்ளிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விண்ணப்பித்த பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும்.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின் நிலைய பகுதியில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கயம் துணை மின் நிலையத்திற்குப்பட்ட காங்கயம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்–மங்காளிபாளையம், அர்த்தநாரிப்பாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர்.

    சிவன்மலை துணை மின் நிலையத்திற்குப்பட்ட சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோடடம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம். ஆலாம்பாடி துணை மின் நிலையத்திற்குப்பட்ட நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம் நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி.

    முத்தூர் துணை மின் நிலையத்திற்குப்பட்ட முத்தூர்,வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தாராபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை தாராபுரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட தாராபுரம், வீராட்சி மங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார் டேம், பஞ்சப்பட்டி, சின்னபுத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இதனை சார்ந்த பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்லடம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி, அம்மாபாளையம், கள்ளக்கிணறு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் வருகிற 18-ந்தேதி மட்டும் பையனூர் வரை இயக்கப்படும்.
    • கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு அகல்யாநகரி எக்ஸ்பிரஸ் (எண்:22646) வாரந்தோறும் இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    நீண்ட தூரம் பயணிக்க கூடிய அகல்யாநகரி, ஸ்வர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ெரயில்கள், பயணிகள் பாதுகாப்பு கருதி எல்.எச்.பி., பெட்டிகள் கொண்டதாக மாற்றப்படுகிறது.கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு அகல்யாநகரி எக்ஸ்பிரஸ் (எண்:22646) வாரந்தோறும் இயக்கப்படுகிறது.

    கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி , நிஜாமுதீனுக்கு ஸ்வர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் (எண்:12643) வாராந்திர சிறப்பு ெரயிலாக இயக்கப்படுகிறது.கொச்சுவேலி ெரயிலில் வருகிற செப்டம்பர் 9ம் தேதி முதலும், நிஜாமுதீன் ெரயிலில் செப்டம்பர் 5-ந்தேதி முதலும் எல்.எச்.பி., பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

    இது குறித்து ெரயில்வே பொறியியல் பிரிவினர் கூறியதாவது:-

    அகல்யா நகரி, ஸ்வர்ண ஜெயந்தி ெரயில்கள் நீண்ட தூரம் பயணிக்க கூடிய ெரயில்களின் பட்டியலில் உள்ளதால் பாதுகாப்பு, பயணிகள் சவுகரியம் கருதி எல்.எச்.பி., பெட்டிகள் கொண்டதாக மாற்றப்படுகிறது.நவீன தொழில்நுட்பத்தை கொண்ட எல்.எச்.பி., பெட்டிகளை பொருத்துவதால் அதிவேகத்தில் ெரயில்கள் பயணிக்கும் போதும் அதிர்வுகள் பெரிய அளவில் உணரப்படாது. கூடுதல் இடவசதி, பயோடாய்லெட் வசதி கொண்ட இப்பெட்டிகள் விபத்தின் போது எளிதில் கவிழாத வகையில் பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    கோவை- மங்களூர் இடையே இயக்கப்படும் ெரயில், பராமரிப்பு பணி காரணமாக பகுதியாக ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ெரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி கோவை - மங்களூர் (22610) ெரயில், காலை 6 மணிக்கு புறப்படுகிறது. பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் வருகிற 18-ந்தேதி மட்டும் பையனூர் வரை இயக்கப்படும்.

    அதே போல், கோவை - மங்களூர் (16323) ெரயில், கோவையிலிருந்து காலை 7:50 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் 18-ந் தேதி சர்வாத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

    அரக்கோணம்- காட்பாடி ெரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ெரயில் தண்டவாளத்தில் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், ெரயில் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    தெற்கு ெரயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

    கோவை சந்திப்பு - எம்.ஜி.ஆர்., சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 12680), கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். அதே போன்று சென்னை சென்ட்ரல் ெரயில் நிலையத்தில் இருந்து கோவை சந்திப்பு வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 12679) காட்பாடியில் இருந்து தான், கோவை புறப்படும்.இந்த மாற்றம் நாளை 9 மற்றும் 10 -ந்தேதிகளில் அமலில் இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்டம் முழுவதும் கடந்த ஏப்ரல் 21, 25, 27 ஆகிய 3 நாட்கள் கூட்டாய்வுகளில் ஈடுபட்டனா்.
    • 3 மோட்டார் வாகன பழுதுநீக்கும் கடைகளில் பணியமா்த்தப்பட்டிருந்த 3 குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.

    திருப்பூா் :

    திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பொறுப்பு க.செந்தில்குமரன் தலைமையில் வருவாய்த் துறையினா், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வா ளா்களுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் கடந்த ஏப்ரல் 21, 25, 27 ஆகிய 3 நாட்கள் கூட்டாய்வுகளில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 3 மோட்டார் வாகன பழுதுநீக்கும் கடைகளில் பணியமா்த்தப்பட்டிருந்த 3 குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.

    மேலும், குழந்தை தொழிலாளா்களை பணியில் அமா்த்திய கடைகளின் உரிமையா ளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளா்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் ஜூன் மாதம் 28-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
    • சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

     திருப்பூர் :

    கோடை கால விடுமுறையில் பயணிகளின் வசதிக்காக திருவனந்தபுரம்-சென்னை இடையே திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் விடப்படுகிறது. அதன்படி திருவனந்தபுரத்தில் அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் ஜூன் மாதம் 28-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வருகிற 3-ந் தேதி இரவு 7.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு செல்கிறது. 9 நடைகள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 4.12 மணிக்கும், திருப்பூருக்கு 5.05 மணிக்கும், ஈரோட்டுக்கு 5.50 மணிக்கும், சேலத்துக்கு 6.55 மணிக்கும் சென்றடையும்.

    இதுபோல் சென்னை எழும்பூரில் இருந்து 4-ந் தேதி மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். ஜூன் மாதம் 29-ந்தேதி வரை 9 நடைகள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சேலத்துக்கு 7.22 மணிக்கும், ஈரோட்டுக்கு 8.20 மணிக்கும், திருப்பூருக்கு 9.15 மணிக்கும், கோவைக்கு 10.15 மணிக்கும் சென்றடையும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • 5-வது அமைப்புத்தேர்தல் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

     திருப்பூர் :

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கான 5-வது அமைப்புத்தேர்தல் திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக ம.தி.மு.க.தேர்தல் பணி துணைச்செயலாளர் அ.சேதுபதி, துணை ஆணையாளர்களாக கோவை மாநகர இளைஞரணி துணை செயலாளர் தங்கவேல், கோவை பகுதி செயலாளர் விஸ்வராஜ் ஆகியோர் செயல்பட்டனர்.

    இதில் மாநகர் மாவட்ட செயலாளராக ஆர்.நாகராஜ் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி மாநகர் மாவட்ட அவைத்தலைவராக நேமிநாதன், மாநகர் மாவட்ட செயலாளராக ஆர்.நாகராஜ், பொருளாளராக நல்லூர் மணி என்ற சண்முகசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினராக சக்திவேல், துணை செயலாளர்களாக குமார், தாமோதரன், வழக்கறிஞர் தமயந்தி கந்தசாமி, பூபதி, பொதுக்குழு உறுப்பினர்களாக சதீஷ்குமார், ராமசாமி, கவுரிசங்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமையில் புதிய நிர்வாகிகள் உள்பட கட்சி நிர்வாகிகள் அனைவரும் ரெயில்நிலையம் அருகே உள்ள அண்ணா, பெரியார் சிலைகளுக்கு சென்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள். இதில் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.மணி, பல்லடம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், மாநில மகளிரணி துணை செயலாளர் சாந்தாமணி உள்பட மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறந்த தொழில் முனைவோராக வருவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
    • புத்தக வாசிப்பு என்பது, மாணவர்கள் மத்தியில் குறைந்து விட்டது.

    திருப்பூர் :

    தமிழக அரசின் 'தமிழ்க் கனவு' நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர், காங்கயம் ரோடு புனித ஜோசப் மகளிர் கல்லூரி கலையரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் குழந்தை தெரஸ் தலைமை வகித்தார். சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் பேசுகை யில், மாணவ, மாணவிகள், பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில், இலக்கியம், பாரம்பரியம், கலை, அறிவியல்போன்வற்றை கற்றுக் கொள்ள வேண்டும். அரசு பணி தொடர்பான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும். சிறந்த தொழில் முனைவோராக வருவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.இதற்கெல்லாம் மேலாக சமூக நீதி, சமத்துவ பண்பு களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    கலெக்டர் வினீத் பேசுகை யில்,மாணவ ர்களின் எதிர்கா லம் சிறக்க, அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.தனியார் நிறுவனங்களில் அதிகளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்க ப்படுகின்றன. கலாசாரம், பண்பாடு குறித்து மாண வர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எம்.பி., திருச்சி சிவா, படிப்போம் நிறைய என்ற தலைப்பில் பேசியதாவது:- இன்றைய சூழலில் இ-மெயில், இன்டர்நெட், வாட்ஸ் ஆப் என சமூக ஊடகங்கள் வாயிலாக அனைத்து தகவல்களையும் தெரிந்துக்கொள்ள முடி கிறது. இதனால், புத்தக வாசிப்பு என்பது, மாணவர்கள் மத்தியில் குறைந்து விட்டது. குறிப்பா க,நூலகங்களுக்கு சென்று படிப்பது வெகுவாக குறைந்து விட்டது.நூலகம் சென்று புத்தகங்களை படிப்பது என்பது, அங்கு, ஆயிரக்கணக்கான அறி ஞர்கள் அமர்ந்திருப்பதாக அர்த்தம். படிக்க, படிக்க அறிவு பெருகும். சிந்தனை வளரும். பாடத்தி ட்டத்தோடு நின்றுவிடாமல், அதைத்தா ண்டி நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஈரோடு, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டா லின் குணசேகரன், பேசி னார். முன்னதாக, போதை தவிர்ப்பு உறுதிமொழியை மாணவ, மாணவிகள் ஏற்றனர். நிகழ்ச்சியில் மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட திறன் பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

    • மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய உத்தரவிட ப்பட்டுள்ளது.
    • மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கிவரும் மதுபான க்கடைகள் அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூ டங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூ டங்கள் ஆகியவை 4-ந் தேதி அன்று நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய உத்தரவிட ப்பட்டுள்ளது.

    தவறும் பட்சத்தில் தொடர்பு டையவர்கள் மீது உரிய சட்டப்பிரி வுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்து ள்ளார்.

    • 9 மாதங்களில் 53 ஆயிரத்து 586 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது.
    • 6,325 கோடி ரூபாய் அளவுக்கு டீ-சர்ட் ஏற்றுமதி நடந்துள்ளது.

    திருப்பூர் :

    இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 55 சதவீதத்துக்கும் அதிகம். குறிப்பாக பருத்தி நூலிழையில் தயாரான பின்னலாடைகள் உற்பத்தியில், திருப்பூர் முன்னிலை வகிக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற வளர்ந்த நாடுகளில் திருப்பூரில் உற்பத்தியாகும் பருத்திநூலிழை ஆடைகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

    ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் திருப்பூரில் இருந்தே உற்பத்தி செய்து பெறப்படுகின்றன. நம் நாட்டின் நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் 53 ஆயிரத்து 586 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது.திருப்பூரில் இருந்து மட்டும் 29 ஆயிரத்து 643 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஜனவரி மாதம் 3,383 கோடி ரூபாய்க்கு பின்னலாடைகள் ஏற்றுமதியாகியுள்ளன. திருப்பூரில் இருந்து நடந்த மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் டாப்- 10 ஆடை விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 6,325 கோடி ரூபாய் அளவுக்கு டீ-சர்ட் ஏற்றுமதி நடந்துள்ளது.

    பருத்தி நூலிழையில் தயாரித்த குழந்தைகளுக்கான பின்னலாடைகள் ரூ.2,998 கோடி , செயற்கை நூலிழை டீ-சர்ட் வகைகள் ரூ.1,866 கோடி, பருத்திநூலிழையில் தயாரித்த பைஜாமா மற்றும் இரவு ஆடைகள் ரூ.1,427 கோடி, இரவு நேர ஆடை மற்றும் பைஜாமா ரூ. 1,038 கோடி.

    பின்னலாடை சட்டை மற்றும் சில ஆடைகள் ரூ.821 கோடி, உல்லன் நூல் குழந்தைகள் பின்னலாடைகள் ரூ. 675 கோடி, பருத்தி நூலிழை டிராயர்கள், அரைக்கால் சட்டை ரூ. 619 கோடி. செயற்கை நூலிழை டிராயர் உள்ளிட்ட ஆடைகள் ரூ. 521 கோடி உட்பட 16 ஆயிரத்து 831 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகள் டாப் 10 ஏற்றுமதி ரகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    இது குறித்து ஏற்றுமதியாளர்கள் சிலர் கூறியதாவது:-

    திருப்பூரின் மொத்த ஏற்றுமதி 28 ஆயிரத்து 237 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது. இதில் டாப் 10 ஆடை ரகங்கள் மட்டும் 16 ஆயிரத்து 831 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளது. திருப்பூரில் உற்பத்தியாகும் மிக தரம் வாய்ந்த டீ-சர்ட்டுகள், குழந்தைகள் ஆடைகள் மற்றும் இரவு நேர ஆடைகளையே அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டினர் பெரிதும் விரும்புகின்றனர். கோடை கால ஆர்டர்களுக்கு ஈடாக குளிர்கால ஆர்டர்களையும், செயற்கை நூலிழைகளை கொண்டு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தென்னிந்திய மில்கள் சங்க (சைமா) தலைவர் ரவிசாம் மற்றும் இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு (சிட்டி) தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட ஜவுளித் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:

    கடந்த 2007 பிப்ரவரி முதல் பருத்தி அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் இருந்து நீக்கிய பிறகு, இந்திய ஜவுளித்தொழில் சவால்களை சந்தித்து வருகிறது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (எம்.சி.எக்ஸ்.,) தளத்தில் நடைபெறும் முன்பேர பருத்தி வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளாக ஜவுளித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், சுரேஷ் கோடக் என்பவர் தலைமையில் ஒரு ஜவுளி ஆலோசனைக் குழுவை அமைத்தது.

    இக்குழு இதுவரை 5 கூட்டங்களை நடத்தியுள்ளது. மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பருத்தி சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க தீவிரமாக முயற்சி எடுத்தார். இதன்விளைவாக பருத்தி ஆலோசனைக் குழுவானது முழு ஜவுளி மதிப்பு சங்கிலியை உள்ளடக்கி மறுசீரமைப்பு செய்துள்ளது.

    பருத்தி ஆலோசனைக் குழு மற்றும் செபியின் ஒப்புதலின்பேரில் எம்.சி.எக்ஸ்., கடந்த 13ந் தேதி புதிய ஒப்பந்தத்தை அறிமுகம் செய்தது. இந்த ஒப்பந்தம், ஆயத்த ஆடைகள் உட்பட முழு ஜவுளி மதிப்புச் சங்கிலியில் உள்ள விவசாயிகள், விசைத்தறியாளர்கள், வணிகர்கள், நூற்பாலைகள் மற்றும் இதர ஜவுளிப் பிரிவினருக்கும் பலன் அளிக்கும் வகையில் உள்ளது.

    நாட்டின் பருத்தி நுகர்வு 320 லட்சம் பேல்கள் வரையிலும், உற்பத்தி 360 லட்சம் பேல்கள் வரையிலும் உள்ளது. அதேசமயம் எம்.சி.எக்ஸ்., தளத்தில் பருத்தி வணிகம் 3 லட்சம் பேல்கள் என்ற அளவில்தான் உள்ளது. எம்.சி.எக்ஸ்.,ன் புதிய ஒப்பந்தம் அதிக பருத்தியை வர்த்தகத்துக்கு கொண்டு வரும். இது பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.

    ஜவுளி மதிப்பு சங்கிலியில் உள்ள அனைத்து பங்குதாரர்களும், எம்.சி.எக்ஸ்., தளத்தில் பருத்தியின் எதிர்கால வர்த்தகத்தில் பங்கு பெறுவது அவசியம். இதுதொடர்பாக ஜவுளித்துறை சார்ந்தவர்களுக்கு விழிப்புணர்வு பயிலரங்கு நடக்கிறது.

    இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.

    சர்வதேச பருத்தி ஆலோசனை குழு அறிவிப்பின்படி சர்வதேச அளவில் பருத்தி நுகர்வின் அளவு 23 மில்லியன் டன்களாகும். அமெரிக்கா வேளாண் துறையின் அறிக்கையின்படி 2023-24 ம் ஆண்டில் உலக பருத்தி உற்பத்தி 24.9 மில்லியன் டன்களாக இருக்குமெனவும், இதில் சீனாவும்- இந்தியாவும் இணைந்து உற்பத்தியில் பாதிக்கு மேல் பங்கு வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத வரி காரணமாக இந்தியாவில் இறக்குமதி 10 லட்சம் பொதிகளாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 9 சதவீதம் குறைவாகும். இந்தியா பருத்தியை வங்கதேசம், சீனா, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

    இந்திய பருத்தி கழகத்தின் தகவல்படி இந்தியாவில் பருத்தி உற்பத்தி 2020 -21ம் ஆண்டில் 352 லட்சம் பொதிகளிலிருந்து, 2021-22 ஆண்டு பருத்தி பருவத்தில், (அக்டோபர் - செப்டம்பர்) 315 லட்சம் பொதிகளாக குறைந்துள்ளது. தமிழகத்தில் பருத்தி முக்கியமாக மாசிப்பட்டம், ஆடிப்பட்டம், கார்த்திகைபட்டம் ஆகிய பருவங்களில் விதைக்கப்படுகிறது.

    தற்போது ஆடிப்பட்டம் முடியும் தருவாயில் மாசிப்பட்டம் விதைப்பு துவங்கியுள்ளது. கடந்த 2021-22ம் ஆண்டில் 1.48 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு 3.6 லட்சம் பொதிகள் உற்பத்தி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் பரப்பில் 7. 5 சதவீதமும், உற்பத்தியில் 6 சதவீதமும் அதிகமாகும்.

    விவசாயிகள் விதைப்பு மற்றும் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 26 ஆண்டுகளாக வேளாண் பல்கலை விலை முன்னறிவிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தியின் விலை மற்றும் சந்தை நிலவரம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுகளின் படி, பருத்தியின் சராசரி பண்ணை விலை மார்ச் முதல் ஜூன் வரை குவிண்டாலுக்கு 7000 - 7500 ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை படி விதைப்பு முடிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.திருப்பூரில் உற்பத்தியாகும்

    பருத்தி நூலிழை ஆடைகளுக்கு அதிகரிக்கும் மவுசு 

    • 17 ஆயிரம் கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • 2.47 ஏக்கர் நிலத்தில் பூஞ்சோலை உருவாக்கப்படும்.

    பெருமாநல்லூர் :

    தொழில் வளம் பெருக, பெருக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று தான். இருப்பினும், சுற்றுச்சூழல் மாசுபடாமல் தவிர்க்க மரம், செடி, கொடிகளை வளர்க்கும் சோலை காடுகளை ஏற்படுத்த வேண்டியதும் காலத்தின் அவசியமாக மாறிப்போயிருக்கிறது. இதை நோக்கமாக கொண்டே மாநில அரசு அமெரிக்கா நிதியுதவி திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 17 ஆயிரம் கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி ஒவ்வொரு வனச்சரகத்துக்கு உட்பட்டு ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு ஒரு ெஹக்டர் அதாவது 2.47 ஏக்கர் நிலத்தில் பூஞ்சோலை உருவாக்கப்படும். அங்கு, பழம் தரம் மரங்கள், நிழல் தரும் மரங்கள், மலர் தரும் செடிகள் ஆகியவற்றை நட்டு வளர்த்து, வனத்துறை சார்பில் பூங்கா அமைக்கப்படும்.

    அந்த பூஞ்சோலைக்குள் நடைபயிற்சி மேற்கொள்ள பிரத்யேக தளம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.பின் அதை பராமரிக்கும் பொறுப்பு அந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்படும். திருப்பூர் வனச்சரகத்தில் மரகத பூஞ்சோலை திட்டத்தில் தகுதியுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அரசின் அனுமதி கிடைத்தவுடன்தான் தேர்வு செய்யப்பட்ட இடம் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • பிளஸ்-2 மாணவா்கள் பொதுத் தோ்வுக்கு தயாராக ஏதுவாக வரும் வாரத்தில் திருப்புதல் தோ்வுகள் தொடங்கவுள்ளது.
    • திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 19 மையங்களில் 1,700 போ் இப்பயிற்சி பெற்று வருகின்றனா்.

    திருப்பூர் :

    பிளஸ்-2 மாணவா்கள் பொதுத் தோ்வுக்கு தயாராக ஏதுவாக வரும் வாரத்தில் திருப்புதல் தோ்வுகள் தொடங்கவுள்ளதால் திருப்பூரில் 'நீட்' பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் கூறியதாவது:- மருத்துவக் கல்வி பெற விரும்பும் மாணவா்களைத் தயாா்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை சாா்பில் பிளஸ் 2 மாணவா்களுக்கு இலவச 'நீட்' பயிற்சி அளிக்கப்படுகிறது.

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 19 மையங்களில் 1,700 போ் இப்பயிற்சி பெற்று வருகின்றனா்.பயிற்சியானது கடந்த டிசம்பா் மாதம் முதல் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மாா்ச் முதல் வாரம் பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கவுள்ளது. ஆகவே, பொதுத் தோ்வுக்கு மாணவா்களைத் தயாா்படுத்த ஏதுவாக வரும் வாரத்தில் அந்தந்த பள்ளி அளவில் திருப்புதல் தோ்வுகள் தொடங்குகின்றன.மேலும் பிப்ரவரி மாதம் திருப்புதல் தோ்வும், மாா்ச் 1 ந் தேதி செய்முறை தோ்வும் நடைபெற உள்ளது.எனவே பிளஸ் 2 மாணவா்களுக்கு அளிக்கப்படும் 'நீட்' பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது என்றாா்.அதேவேளையில் இந்தப் பயிற்சியானது தோ்வு முடிந்த மறுநாளில் இருந்து மீண்டும் தொடங்கும் என்றாா்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
    • காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    காங்கயம் :

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 23-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா். மின்தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:- ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு.

    பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம். காடையூா் துணை மின் நிலையம்: காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், பொன்னங்காளிவலசு ஆகிய பகுதிகள் ஆகும்.

    உடுமலையை அடுத்துள்ள பூளவாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பொம்மநாயக்கன்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், ஆ. அம்மாபட்டி, தொட்டியன் துறை, மானூா்பாளையம், பெரியகுமாரபாளையம், முன்டுவேலாம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்காரமுடக்கு, முத்து சமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதூா்.

    ×