search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் பூஞ்சோலை திட்ட ஆயத்த பணிகள் தீவிரம்
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் பூஞ்சோலை திட்ட ஆயத்த பணிகள் தீவிரம்

    • 17 ஆயிரம் கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • 2.47 ஏக்கர் நிலத்தில் பூஞ்சோலை உருவாக்கப்படும்.

    பெருமாநல்லூர் :

    தொழில் வளம் பெருக, பெருக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று தான். இருப்பினும், சுற்றுச்சூழல் மாசுபடாமல் தவிர்க்க மரம், செடி, கொடிகளை வளர்க்கும் சோலை காடுகளை ஏற்படுத்த வேண்டியதும் காலத்தின் அவசியமாக மாறிப்போயிருக்கிறது. இதை நோக்கமாக கொண்டே மாநில அரசு அமெரிக்கா நிதியுதவி திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 17 ஆயிரம் கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி ஒவ்வொரு வனச்சரகத்துக்கு உட்பட்டு ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு ஒரு ெஹக்டர் அதாவது 2.47 ஏக்கர் நிலத்தில் பூஞ்சோலை உருவாக்கப்படும். அங்கு, பழம் தரம் மரங்கள், நிழல் தரும் மரங்கள், மலர் தரும் செடிகள் ஆகியவற்றை நட்டு வளர்த்து, வனத்துறை சார்பில் பூங்கா அமைக்கப்படும்.

    அந்த பூஞ்சோலைக்குள் நடைபயிற்சி மேற்கொள்ள பிரத்யேக தளம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.பின் அதை பராமரிக்கும் பொறுப்பு அந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்படும். திருப்பூர் வனச்சரகத்தில் மரகத பூஞ்சோலை திட்டத்தில் தகுதியுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அரசின் அனுமதி கிடைத்தவுடன்தான் தேர்வு செய்யப்பட்ட இடம் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×