search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்க்கனவு நிகழ்ச்சி"

    • வருகிற 6-ந் தேதி நடக்கிற தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
    • இந்த நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரு கின்ற 6-ந் தேதி காலை 9 மணிக்கு மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெறு கிறது. இந்த நிகழ்ச்சியில் சைலேந்திரபாபு பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.

    இதில் மாணவ, மாணவி கள் பயன்பெறும் வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் தொழில் பயிற்சிக்கான வழிகாட்டி கையேடுகள், தொழில் முனைவோர் மற்றும் உயர் கல்விக்கான கடன் திட்ட உதவிகள் பெறுவது குறித்து வங்கியாளர்களின் ஆலோ சனை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறையின் ஆலோ சனை மற்றும் உயர்கல்வி ஆலோசனை வழங்கப்பட வுள்ளது.

    மேலும் இக்கருத்தரங் களில் மாணவ, மாணவிகளி டம் எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்து அதற் கேற்ப உரிய விளக்கங்களை அளிப்பதற்கும் மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளதால் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக் கான விளக்கங்களை கேட் டறிந்து பயன்பெற வேண் டும் என அவர் கூறியுள்ளார்.

    • சிறந்த தொழில் முனைவோராக வருவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
    • புத்தக வாசிப்பு என்பது, மாணவர்கள் மத்தியில் குறைந்து விட்டது.

    திருப்பூர் :

    தமிழக அரசின் 'தமிழ்க் கனவு' நிகழ்ச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர், காங்கயம் ரோடு புனித ஜோசப் மகளிர் கல்லூரி கலையரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் குழந்தை தெரஸ் தலைமை வகித்தார். சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் பேசுகை யில், மாணவ, மாணவிகள், பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில், இலக்கியம், பாரம்பரியம், கலை, அறிவியல்போன்வற்றை கற்றுக் கொள்ள வேண்டும். அரசு பணி தொடர்பான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும். சிறந்த தொழில் முனைவோராக வருவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.இதற்கெல்லாம் மேலாக சமூக நீதி, சமத்துவ பண்பு களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    கலெக்டர் வினீத் பேசுகை யில்,மாணவ ர்களின் எதிர்கா லம் சிறக்க, அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.தனியார் நிறுவனங்களில் அதிகளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்க ப்படுகின்றன. கலாசாரம், பண்பாடு குறித்து மாண வர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எம்.பி., திருச்சி சிவா, படிப்போம் நிறைய என்ற தலைப்பில் பேசியதாவது:- இன்றைய சூழலில் இ-மெயில், இன்டர்நெட், வாட்ஸ் ஆப் என சமூக ஊடகங்கள் வாயிலாக அனைத்து தகவல்களையும் தெரிந்துக்கொள்ள முடி கிறது. இதனால், புத்தக வாசிப்பு என்பது, மாணவர்கள் மத்தியில் குறைந்து விட்டது. குறிப்பா க,நூலகங்களுக்கு சென்று படிப்பது வெகுவாக குறைந்து விட்டது.நூலகம் சென்று புத்தகங்களை படிப்பது என்பது, அங்கு, ஆயிரக்கணக்கான அறி ஞர்கள் அமர்ந்திருப்பதாக அர்த்தம். படிக்க, படிக்க அறிவு பெருகும். சிந்தனை வளரும். பாடத்தி ட்டத்தோடு நின்றுவிடாமல், அதைத்தா ண்டி நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஈரோடு, மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டா லின் குணசேகரன், பேசி னார். முன்னதாக, போதை தவிர்ப்பு உறுதிமொழியை மாணவ, மாணவிகள் ஏற்றனர். நிகழ்ச்சியில் மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட திறன் பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

    • தமிழ் கனவு என்றபெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்வுகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
    • 13-ந் தேதி அன்று திருப்பூர் புனித வளனார் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

    திருப்பூர் :

    தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்றபெயரிலான பண்பாட்டு பரப்புரை நிக ழ்வுகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பா ட்டின் செழுமையையும், சமூகசமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டு க்கான வாய்ப்புகளையும் இளம்தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில் இந்த பரப்புரை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின்கீழ் தமிழ் மரபும் - நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப்பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல்ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில்மு னைவுக்கான வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் கல்விப் புரட்சி ஆகிய தலைப்புகளின் கீழ்சொற்பொழிவுகள் நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் பண்பாட்டு பரப்புரை நிகழ்வு 13-ந்தேதி அன்று திருப்பூர் புனித வளனார் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் படிப்போம் நிறைய ! என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா , கற்சிலையும் கட்டடக் கலையும் என்ற தலைப்பில் மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஈரோடு த.ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் சிறப்புவி ருந்தினர்களாக கலந்து கொண்டு கருத்துரை ஆற்ற உள்ளனர். எனவே திருப்பூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்கனவு என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தஅனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு கேட்டு க்கொள்ளப்பட்டுள்ளது.

    ×