search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "'NEET' practice"

    • மாலை 3.15 மணிக்கு பயிற்சி மையத்தில் ஒரு தேர்வை எழுதிய பிறகு அவர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.
    • 2 மாணவர்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.

    கோட்டா:

    மகாராஷ்டிர மாநிலம் லட்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அவீஷ்கர் சாம்பாஜி கஸ்லே. இவர் கடந்த 3 ஆண்டுகளாக நீட் இளநிலை மருத்துவ நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.

    இவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தங்கி நீட் பயிற்சி பெற்று வந்தார். தனது தாய்வழி தாத்தா, பாட்டியுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் அவீஷ்கர் பயிற்சி மையத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மாலை 3.15 மணிக்கு பயிற்சி மையத்தில் ஒரு தேர்வை எழுதிய பிறகு அவர் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். பயிற்சி மைய ஊழியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவரின் உயிர் பிரிந்தது.

    அவீஷ்கர் தற்கொலை செய்து கொண்ட 4 மணி நேரத்தில் மற்றொரு நீட் பயிற்சி மாணவரான ஆதர்ஷ் ராஜ் என்பவரும் தற்கொலை செய்து கொண்டார்.

    பீகாரை சேர்ந்த அவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும் பயிற்சி மையத்தில் நேற்று மதியம் தேர்வு எழுதிவிட்டு திரும்பினார். இரவு 7 மணியளவில் தற்கொலை செய்து கொண்டார். இவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே இறந்தார்.

    2 மாணவர்கள் தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.

    கோட்டாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். கோட்டா நகரில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களும் 3 லட்சம் மாணவர்கள் நீட், ஐ.ஐ.டி. மற்றும் ஜே.இ.இ. உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    • முன்னாள் எம்.பி ராமதாஸ் வலியுறுத்தல்
    • 910 இடங்களில் 18 அரசு பள்ளி மாணவர்கள்தான் நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகள் புதுவை கல்வித்துறையை மதிப்பீடு செய்ய வாய்ப்பளித்துள்ளது. இந்த ஆண்டு புதுவையில் நீட் தேர்வு எழுதிய 5,714 மாணவர்களில் 3,140 பேர் தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 54.9 இது கடந்த ஆண்டைவிட 2.11 சதவீதம் அதிகம்.

    புதுவையின் தேர்ச்சி சதவீதம் தேசிய சதவீதமான 56.2 சதவீதத்தைவிட 1.3 சதவீதம் குறைவாக உள்ளது. தேசியளவில் புதுவை குறைந்த தேர்ச்சி சதவீதத்தையே பெற்றுள்ளது. புதுவை கல்வித்துறையின் செயல்பாடு சரியில்லாமல் குறைவாக உள்ளதையே இது காட்டுகிறது கடந்த 3 ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவ இடங்களான 910 இடங்களில் 18 அரசு பள்ளி மாணவர்கள்தான் நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

    தனியார் பள்ளிகளில் இருந்து 818 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு ஒரு தனியார் பள்ளியில் இருந்து மட்டும் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 177 பேர் 450-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். தனியார் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும்போதே நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுகின்றனர். இந்த சாதகமான சூழ்நிலை புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு இல்லாததால் சாதிக்க முடியவில்லை.

    தனியார் பள்ளிகள் மேற்கொள்ளும் சிறந்த நடைமுறைகளை புதுவை அரசு பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பிளஸ்-2 மாணவா்கள் பொதுத் தோ்வுக்கு தயாராக ஏதுவாக வரும் வாரத்தில் திருப்புதல் தோ்வுகள் தொடங்கவுள்ளது.
    • திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 19 மையங்களில் 1,700 போ் இப்பயிற்சி பெற்று வருகின்றனா்.

    திருப்பூர் :

    பிளஸ்-2 மாணவா்கள் பொதுத் தோ்வுக்கு தயாராக ஏதுவாக வரும் வாரத்தில் திருப்புதல் தோ்வுகள் தொடங்கவுள்ளதால் திருப்பூரில் 'நீட்' பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் கூறியதாவது:- மருத்துவக் கல்வி பெற விரும்பும் மாணவா்களைத் தயாா்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை சாா்பில் பிளஸ் 2 மாணவா்களுக்கு இலவச 'நீட்' பயிற்சி அளிக்கப்படுகிறது.

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 19 மையங்களில் 1,700 போ் இப்பயிற்சி பெற்று வருகின்றனா்.பயிற்சியானது கடந்த டிசம்பா் மாதம் முதல் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மாா்ச் முதல் வாரம் பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கவுள்ளது. ஆகவே, பொதுத் தோ்வுக்கு மாணவா்களைத் தயாா்படுத்த ஏதுவாக வரும் வாரத்தில் அந்தந்த பள்ளி அளவில் திருப்புதல் தோ்வுகள் தொடங்குகின்றன.மேலும் பிப்ரவரி மாதம் திருப்புதல் தோ்வும், மாா்ச் 1 ந் தேதி செய்முறை தோ்வும் நடைபெற உள்ளது.எனவே பிளஸ் 2 மாணவா்களுக்கு அளிக்கப்படும் 'நீட்' பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது என்றாா்.அதேவேளையில் இந்தப் பயிற்சியானது தோ்வு முடிந்த மறுநாளில் இருந்து மீண்டும் தொடங்கும் என்றாா்.

    ×