search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் 3 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் 3 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

    • மாவட்டம் முழுவதும் கடந்த ஏப்ரல் 21, 25, 27 ஆகிய 3 நாட்கள் கூட்டாய்வுகளில் ஈடுபட்டனா்.
    • 3 மோட்டார் வாகன பழுதுநீக்கும் கடைகளில் பணியமா்த்தப்பட்டிருந்த 3 குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.

    திருப்பூா் :

    திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) பொறுப்பு க.செந்தில்குமரன் தலைமையில் வருவாய்த் துறையினா், குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டுலைன் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வா ளா்களுடன் இணைந்து மாவட்டம் முழுவதும் கடந்த ஏப்ரல் 21, 25, 27 ஆகிய 3 நாட்கள் கூட்டாய்வுகளில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 3 மோட்டார் வாகன பழுதுநீக்கும் கடைகளில் பணியமா்த்தப்பட்டிருந்த 3 குழந்தை தொழிலாளா்கள் மீட்கப்பட்டனா்.

    மேலும், குழந்தை தொழிலாளா்களை பணியில் அமா்த்திய கடைகளின் உரிமையா ளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளா்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    Next Story
    ×