search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்

    • சாலை விரிவாக்கத்திற்காக உயரழுத்த மின்பாதையில் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நாளை நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

    திருப்பூர் :

    அவினாசி மின்–சார வாரிய செயற்பொறியாளர் பி.பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    அனுப்பர்பாளையம் பிரதான சாலையில் வேலம்பாளையம் பிரிவு அருகில் சாலை விரிவாக்கத்திற்காக உயரழுத்த மின்பாதையில் மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே 11 கே.வி. சோளிபாளையம் மின்பாதை மற்றும் 11 கே.வி. வேலம்பாளையம் மின்பாதை ஆகியவற்றிற்குட்பட்ட காசிக்காடு, டி.டி.பி.மில், பி.டி.ஆர்.நகர், சிறுபூலுவப்பட்டி, சொர்ணபுரி, அம்மன் நகர், திலகர் நகர், புதுக்காலனி, மற்றும் வேலம்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் குன்னத்தூர் 16 வேலம் பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குன்னத்தூர், ஆதியூர், தாளபதி, கருமஞ்சிறை, வெள்ளிரவெளி, சின்னியம்பாளையம், கணபதிபாளையம், வேலம்பாளையம், நவக்காடு, செட்டி குட்டை, எடைய பாளையம், கம்மாள குட்டை, சொக்கனூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை பெருந்துறை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசர கால பராமரிப்புப் பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கயம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர், அரசம்பாளையம், கீரனூர், மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம், நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி முத்தூர் துணை மின் நிலையத்திற்குப்பட்ட முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இந்த தகவலை தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் வெ.கணேஷ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×