search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய மக்கள் நீதிமன்றம்"

    • டிசம்பர் மாதம் 9-ந் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
    • மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்கு களுக்கு மேல்முறையீடு கிடையாது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரு மான குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி நாமக்கல் - திருச்செங்கோடு ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பரமத்தி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சேந்தமங்கலம் நீதிமன்றம் மற்றும் குமார பாளையம் நீதிமன்றத்திலும் வருகிற டிசம்பர் மாதம் 9-ந் தேதி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

    ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் சமரசம் செய்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவகாரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள் போன்ற வழக்குகள் இந்த கோர்ட்டில் விசாரிக்கப்படும்.

    மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்கு களுக்கு மேல்முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள், நீதிமன்றத்தில் மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால் மக்கள் நீதிமன்றம் மூலம் சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • மக்கள் நீதிமன்றத்தில் முடித்து கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது.
    • மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் செப்டம்பர் 8 -ந் தேதி வரை சிறப்பு அமர்வுகள் நடைபெறும்.

    கோவை,

    கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் வருகிற 9-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது.

    இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செப்டம்பர் 9-ந் தேதி (சனிக்கிழமை) கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதி மன்றம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, குலூர், மதுக்கரை, அன்னூர் நீதி மன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

    இதில், நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், பாகப் பிரிவினை, வாடகை விவகாரங்கள், நிலம் ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கிக் கடன், கல்விக்கடன் தொடர்பான வழக்குகள், விவகாரத்து தவிர மற்ற குடும்ப பிரச்சினை வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சினைகள் மற்றும் நிலுவையில் இல்லாத வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.

    மக்கள் நீதிமன்றத்தில் முடித்து கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது. மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பித் தரப்படும் வாய்ப்பு உள்ளது.

    எனவே, யாருக்காவது நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தால் சட்ட ரீதியாக தீர்வுகாணலாம்.

    மேலும், இந்த வழக்குகளுக்குத் தீர்வுகாண்பதற்காக கோவை சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் செப்டம்பர் 8 -ந் தேதி வரை சிறப்பு அமர்வுகள் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தமிழக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்த லின்படி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வருகிற 10-ந் தேதி, சிறப்பு மக்கள் நீதிமன்றம் (தேசிய லோக் அதலாத்) நடைபெற உள்ளது.
    • மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியு மான குணசேகரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழக மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்த லின்படி, நாமக்கல் ஒருங்கி ணைந்த நீதிமன்றத்தில், வருகிற 10-ந் தேதி, சிறப்பு மக்கள் நீதிமன்றம் (தேசிய லோக் அதலாத்) நடைபெற உள்ளது.

    இந்த மக்கள் நீதிமன்றத் தில், சிறப்பு வழக்காக அறிவுசார் சொத்துரிமை, நுகர்வோர் வழக்குகள், ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு களில், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்ற வியல் வழக்குகள், காசோலை, வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து, விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரசினைகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை, வருமானம் மற்றும் சொத்து வரி பிரச்சினைகள் போன்ற வழக்குகள் விசாரிக்கப்படும்.

    மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறை யீடு கிடையாது. மேலும், இம்மன்றம் மூலம் முடித்துக் கொள்ளப்படும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம், முழு மையாக திருப்பி தரப்படும் வாய்ப்பும் உள்ளது. பொதுமக்கள் யாருக்காவது நீதிமன்றத்தில், மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால் அவர்கள், சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காண மக்கள் நீதிமன்றத்தை அனுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • மொத்தம் 3494 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1281 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீர்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இந்நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் தலைமை வகித்தார்.கூடுதல் சார்பு நீதிபதி முருகன், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதி, வழக்குரைஞர் முல்லை ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வில் உரிமையியல் மற்றும் குடும்ப நல வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.மோட்டார் வாகன வழக்குகளுக்கான சிறப்பு சார்பு நீதிபதி தங்கமணி, குற்றவியல் நீதித்துறை நடுவர் முருகேசன், வழக்குரைஞர் மகா சண்முகம் ஆகியோர் கொண்ட இரண்டாவது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டது.இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்டச் சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது.

    இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 3494 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 1281 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, ரூ. 4 கோடியே 23 லட்சத்து 52 ஆயிரத்து 902 அளவுக்கு இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடி களுக்கு பெற்றுத் தரப்ப ட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2,286 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • ஆணைக்குழு ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி திலகம் தலைமையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (ேலாக் அதாலத்) நடந்தது.

    விருதநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட கோர்ட்டு மற்றும் விருதுநகர், அருப்புக் கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூர், ராஜ பாயைம் ட்ட சட்டப்பணிக் குழுக்கள் சார்பில் கோர்ட்டு வளாகங்களிலும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது.

    இதில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி வாராக்கடன்கள் மற்றும் சிறு வழக்குகள் உட்பட 5 ஆயிரத்து 921 வழக்குகள் பரிசிலினைக்கு எடுக்கப்பட்டது. அதில் சுமார் 2 ஆயிரத்து 286 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.5 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரத்து 903 பயானளிகளுக்கு கிடைத்தது.

    இதில் வழக்கறிஞர்கள். நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வ சட்டப்பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், அரசு எலும்பு முறிவு மருத்துவர், வங்கி மேலா ளர்கள், இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து கேட்ட கணவன்-மனைவி சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர்.
    • ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 800 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கிணங்க முதுகுளத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் சார்பு நீதிபதி டி.ராஜகுமார் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் குணசேகர பாண்டியன் அமர்வு வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் வங்கியில் வாரா கடனாக நிலுவையில் இருந்த 4 வழக்குகளில் சமரசம் முறையில் தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ. 2 லட்சத்து 29 ஆயிரத்து 252 வழங்க உத்தரவிடப்பட்டது. வாகன் விபத்து இழப்பீட்டு வழக்கில் 9 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு இழப்பீட்டுத்தொகையாக ரூ. 38 லட்சத்து 55 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. சிவில் வழக்குகளில் 9 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ. 13 லட்சத்து 53 ஆயிரத்து 546 என அறிவிக்கப்பட்டது.

    ஒரு விவகாரத்து வழக்கு விசாரணை முடிவில் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதனால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சிறு குற்ற வழக்குகளில் 21 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 800 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

    • சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,120 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • இதற்கான ஏற்பாடு களை மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.

    சிவகங்கை

    தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 10 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

    தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்/சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி இன்பகார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், குற்றவியல் நீதிதுறை நடுவர்கள் அனிதா கிறிஸ்டி, சத்திய நாராயணன், கூடுதல் மகிளா குற்றவியல் நீதிதுறை நடுவர் ஆப்ரின் பேகம் மற்றும் வழக்கறிஞர்கள் வழக்குகளை விசாரித்தனர்.

    இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 100 குற்றவியல் வழக்குகளும், 164 காசோலை மோசடி வழக்குகளும், 185 வங்கிக் கடன் வழக்குகளும், 112 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 86 குடும்பப் பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 405 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 991 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 2,043 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

    இதில் 1060 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.2 கோடியே 99 லட்சத்து 34 ஆயிரத்து 270 வரை வழக்காடிகளுக்கு கிடைத்தது. அதேபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்கு களில் 850 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப் பட்டது. இதில் 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மூலம் ரூ.78 லட்சத்து 14 ஆயிரத்து 850 வரை வங்கிகளுக்கு வரவானது.

    இதற்கான ஏற்பாடு களை மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழு பணியாளர்கள்

    செய்திருந்தனர்.

    • தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.
    • தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2010 வழக்குகளில் ரூ.4,14,05,240-க்கு தீர்வு காணப்பட்டது.

    தேனி:

    நாடு முழுவதும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற லோக்அதாலத் நடைபெற்றது. தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தேனி மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி திலகம் தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன் முன்னிலை வகித்தார்.

    தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோபிநாதன், சார்பு நீதிபதி சுந்தரி, நீதித்துறை நடுவர் லலிதாராணி, கூடுதல் மகிளா நீதிபதி ரமேஷ், வக்கீல்கள் காண்டீபன், பாலாஜி, பிரபாகர், குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெரியகுளத்தில் சார்பு நீதிபதி மாரியப்பன்,நீதித்துறை நடுவர் சர்மிளா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உத்தமபாளையத்தில் சார்பு நீதிபதி சுரேஷ்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி சரவண செந்தில்குமார், நீதித்துறை நடுவர்கள் ராமநாதன், ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஆண்டிபட்டியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், நீதித்துறை நடுவர் பிச்சைராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

    போடியில் நீதித்துறை நடுவர் வேலுமயில் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் நிலுவையில் இருந்த வழக்குகள் மற்றும் வங்கிகளின் வாரக்கடன்களுக்காக நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 2010 வழக்குகளில் ரூ.4,14,05,240-க்கு தீர்வு காணப்பட்டது.

    • கரூரில் 11-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது
    • மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்டசட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தொலைபேசி எண்ணில் (0432438670) தொடர்பு கொள்ளலாம்.
    கரூர்:


    கரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கரூர் மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 11ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. அதன்படி கரூர் மாவட்டத்திலும் அன்றைய தினம் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதால் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அல்லது கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிலோ தெரிவிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்டசட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தொலைபேசி எண்ணில் (0432438670) தொடர்பு கொள்ளலாம். இதுதவிர, மண வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள். காசோலை மோசடி வழக்குகள், கடன் தொழிலாளர் நல வழக்குகள் உட்பட அனைத்து வழக்குகளும் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்படும் என்று அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


    • 11-ந் தேதி நடக்கிறது.
    • உடனடி தீா்வினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொ ள்ளப்படுகிறது.

    கோவை

    கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) பிப்ரவரி 11-ந் தேதி நடைபெறுகிறது.

    இது குறித்து கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டு தலின்படியும், கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வருகிற பிப்ரவரி 11-ந் தேதி (சனிக்கிழமை) கோவை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்திலும் மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூா், மதுக்கரை கோர்ட்டு வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.

    இந்த மக்கள் நீதிமன்றம் மூலம், நிலுவையிலுள்ள சமரசம் செய்யக்கூடிய, வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள் மற்றும் தொழிலாளா் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் இல்லாத வழக்குகள் போன்ற வழக்குகளுக்கு உடனடியாக தீா்வு பெற்றுக் கொள்ளலாம்.

    எனவே மேற்கண்ட வழக்குகளுக்கு தீா்வு காண்பதற்காக, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் உள்ள கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வரும் பிப்ரவரி 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சிறப்பு அமா்வுகள் நடைபெற உள்ளன.

    எனவே வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு உடனடி தீா்வினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொ ள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    • 1,307 வழக்குகளில் ரூ.10 கோடியே 82 லட்சத்து 76 ஆயிரத்து 850 க்கு தீர்வு காணப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றங்க ளில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக நேஷனல் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களி லும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு கூடுதல் மாவட்ட நீதிபதி, தாமோதரன் தலைமை தாங்கினார்.

    நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் வேல்முருகன், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வம், விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுதா, தலைமை குற்றவியல் நடுவர் ராஜ சிம்மவர்மன், முதன்மை சார்பு நீதிபதி லீலா, கூடுதல் சார்பு நீதிபதி செந்தில்குமார் ராஜவேல், கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி. கோவிந்தராஜூலு, சங்க செயலாளர் ராஜா விஸ்வநாத் மற்றும் வழக்குகளை நடத்துபவர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 அமர்வுகள் அமைக்கப்பட்டு 6430 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 1,307 வழக்குகளில் ரூ.10 கோடியே 82 லட்சத்து 76 ஆயிரத்து 850 க்கு தீர்வு காணப்பட்டது.

    இதில் முக்கியமாக சாலை விபத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்திருந்த பல மனுதாரர்கள் இடைவிடாது பெய்த மழையிலும் தங்கள் வழக்கறிஞர்களுடன் விசாரணைக்காக ஆஜராகி சமரசமாக வழக்குகளில் இழப்பீடு பெற்றுச் சென்றனர்.

    • திருப்பூா் மாவட்டத்தில் 20 அமா்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • 4,942 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    திருப்பூர் :

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சொா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்படி திருப்பூா் மாவட்டத்தில் 20 அமா்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

    இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சமரசத்துக்கு உரிய வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள் என மொத்தம் 4,942 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில், 1,952 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. இதன் தீா்வுத் தொகை ரூ.39.12 கோடியாகும்.  

    ×