search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teachers"

    • அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பில், "ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும்" என தெரிவித்திருந்தார்.
    • பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் அறிவிப்பு.

    ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்த வலியுறுத்தி ஆசிரியர் பணிக்கு பயிற்சி பெற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கோரிக்கையை முன்வைத்தனர்.

    இதைதொடர்ந்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பில், "ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும்" என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆசிரியர் பணியில் சேர பொதுப்பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 53-ஆகவும், இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 58-ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பல்லாயிரக்கணக்கான பள்ளிகளுக்கு தொடர் தற்காலிக அங்கீகாரம் வழங்குவதற்கு கூட லஞ்ச பணம் கேட்கும் சூழ்நிலையை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்.
    • விண்ணப்பித்து காத்துள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் எந்தவித நிபந்தனையும் நிர்பந்தமும் இல்லாமல் உடனடி அங்கீகாரம் வழங்கிட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் சங்க தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் அரசுக்கு கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளை ஒருங்கிணைத்து ஒழுங்குமுறைபடுத்தும் வகையில், தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம் அமைக்கப்பட வேண்டும் தனியார் பள்ளி சங்கங்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    பணி பாதுகாப்பு இல்லாமல், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக உயர்ந்த கல்வி கற்று, ஆனால் மிகப் குறைந்த சம்பளத்தில் தன்னிகரில்லாத கல்வி சேவை ஆற்றி வரும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களின் நலத்தைப் பேணும் வகையில் நாட்டிற்கு வழிகாட்டி வரும் அவர்களின் வாழ்வு மேம்பட தனியார் பள்ளி ஆசிரியர் நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மற்றும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள், பெற்றோர் , ஆசிரியர்களின் நலன் மற்றும் பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் கல்வித் திறனை மேம்படுத்துதில் அக்கறை காட்டக் கூடிய பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் அனைத்து பள்ளிகளிலும் அமைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பள்ளி நிர்வாகிகள் மிகுந்த மனவேதனையோடு தங்களின் நியாயமான கோரிக்கைகளை, பள்ளிக் கல்வித் துறையில் வாங்க வேண்டிய பல்வேறு அரசு அனுமதிகளை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தான் பெற வேண்டும் என்ற சூழ்நிலையில் இருந்து துன்பப்படுகிறார்கள். தங்கள் நியாயமான கோரிக்கைகளை செயல்படுத்தாத பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை கண்டித்து அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களைப் போல தாங்களும் தெருவில் இறங்கிப் போராடுவது நீதிமன்றங்களில் வழக்கு வழக்கு கொடுத்து தங்கள் உரிமைகளின் நிலைநாட்டுவது என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

    தனியார் பள்ளி சங்கங்களின் கோரிக்கைகள், உரிமைகள் மீட்டெடுக்க பள்ளிகளை, பள்ளி நிர்வாகிகளை பாதுகாத்திட தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம் அமைத்து தனியார் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம் அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான பள்ளிகளுக்கு தொடர் தற்காலிக அங்கீகாரம் வழங்குவதற்கு கூட லஞ்ச பணம் கேட்கும் சூழ்நிலையை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்.

    2011-ம் ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட பழைய பள்ளி கட்டிடங்களுக்கு டி.டி.சி.பி. /சி.எம்.டி.ஏ. கட்டிட அனுமதி வேண்டாம் என்று உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும், கல்வித்துறை அதிகாரிகள் போட்ட ஆணை இருந்தும் மீண்டும் மீண்டும் கட்டிட அனுமதி இருந்தால் தான் அங்கீகாரம் இல்லையென்றால் அனுமதி இல்லை என்று அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி லஞ்சம் கொடுக்கும் பள்ளிகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கும் சூழ்நிலையை மாற்றி நீதிமன்ற ஆணைப்படி தமிழக கல்வித்துறையின் உத்தரவுகளின் படி செயல்பட தமிழக அரசு பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    ஆர்.டி.இ. 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கையை குறைப்பது. சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஆர்.டி.இ கல்வி கட்டணத்தை ரூ 6000 ஆக குறைத்துள்ளதை தமிழகஅரசு மறு பரிசீலனை செய்து நியாயமான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து, அந்தந்த ஆண்டுக்குரிய கல்விக் கட்டணத்தை பள்ளிகளுக்கு உடனே அனுப்பிட வேண்டும்.

    தனியார் பள்ளிகளுக்கான சொத்து வரி மின் கட்டண உயர்வு பள்ளி வாகனங்களின் சாலை வரியை இந்த மாதம் முதல் 100 சதவீதம் உயர்த்தியுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.

    விண்ணப்பித்து காத்துள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் எந்தவித நிபந்தனையும் நிர்பந்தமும் இல்லாமல் உடனடி அங்கீகாரம் வழங்கிட வேண்டும். தனியார் பள்ளிகள் மட்டும் பணம் கொடுத்தும் தமிழ்நாடு பாடநூல் கழகத்திலிருந்து புத்தகங்கள் வாங்கும் போதுள்ள புத்தக தட்டுப்பாட்டை உடனடியாக போக்க வேண்டும்.

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் ஆசிரி யர்களையும் பாதுகாப்பதற்காக. மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பு சட்டம் உள்ளது போல் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறை வேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • ஆசிரியர்களுக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பள்ளி தலைமை மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் மகாபாரதி குத்துவிளக்கு ஏற்றிவைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனத்துடன் இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம் என்கிற திட்டத்தினை கடந்த 2022 - 2023 ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

    தமிழக முதல்வர், செப்டம்பர் 16-2022 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டமானது, பள்ளிக்கல்வி துறையின் முழு ஒத்துழை ப்புடன் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்ப ள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு (2022-23) இத்திட்டமானது தமிழ்நாட்டில் 38 மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 4356 மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த ப்பட்டது.

    சுமார் 4.78 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

    இந்த செயல்பாடுகளினால் மாணவர்களிடையே தலைமைத்துவம் மற்றும் பிரச்சனைகளைகையாளுதல், பிரச்சனைகளுக்கு புத்தாக தீர்வு காணுதல் உட்பட 21-ம் நூற்றாண்டு திறன்கள் உருவாக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜ்கமல் மற்றும் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார்.

    • கல்விச் செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழ வேண்டும்.
    • ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள்.

    நாம் பிறக்கையில் எதையும் கொண்டு வருவது இல்லை. இறக்கையில் கொண்டு போவதும் இல்லை. வாழும் வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் கல்வி செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழ வேண்டும். மாணவர்களை தன்பிள்ளை என எண்ணி எப்போதும் காத்திருக்கும் ஆசிரியர் உறவே முக்கியமான, முதன்மையான உறவு. ஒவ்வொரு ஆசிரியரின் குறிக்கோள், மாணவர்கள் நல்லறிவுடனும் சமுதாயத்தில் வளமுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். மாணவர்களின் வெற்றியே ஆசிரியரின் வெற்றி. இவர்களை விடவும் குழந்தைகள் மீது அக்கறை கொள்பவர் வேறு எவரும் இருக்க முடியாது. கடவுள் தன்னால் எல்லா இடங்களிலும் இருந்து கவனிக்க முடியாது என்பதினால் தான் ஆசிரியரை படைத்தார் என்று கூட கூறலாம்.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். அதில் `ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி' என்பன மனித வரலாற்றில் வழிவழி வந்த மணிமொழியாக போற்றி பாராட்டினர். குருவாகிய ஆசிரியர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கி அறிவையும், ஆற்றலையும் மாணவர்களுக்கு அளித்து தெய்வத்தை உணரவைப்பார்கள் ஆசிரிய பெருமக்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் முன் எப்போதையும் விட இப்போது மாணவர்களை பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள். அதனால் ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலக்கி வைக்காமல் அவர்களின் திறமைகளை தனித்தன்மைகளை காட்ட வழிவகுக்கின்றனர். இதற்கென கட்டுப்பாடுகளை தளர்த்தி, சுதந்திர சுயசிந்தனையால் மாணவர்கள் வளர அவர்களுக்கு பாதையமைத்து கொடுக்கின்றனர்.

    மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடிபோல் வான் உயரப் பறந்து வெற்றி சாதனைப் படைக்கின்றனர். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியர்களின் கையில் நூல் இருக்குமே தவிர அதுவே அவர்கள் விண்ணோட்டத்திற்கு தடையாக அமைந்து விடாது.

    மாணவர்கள் தங்கள் வாழ்க்கையிலும், கல்வியிலும், உணவு-உறக்கம் மறந்து உழைத்த உழைப்பையும், சந்தித்த சோதனைகளையும், அடைந்த இழப்புகளையும் பெற்ற வேதனைகளையும் பார்த்தால் அவனால் சாதனையாளனாக வர வாய்ப்பில்லாமல் போகலாம். தடைக்கல்லே உனக்கோர் படிக்கல் என்ற ஊக்கத்தையும், உணர்வுகளையும் ஆசிரியர் ஊட்டுவதினாலேயே மாணவர்கள் சாதனையாளர்களாக மாறுகின்றனர். ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் ஆசிரியர்களின் பங்கு ஒருவிதத்தில் ஒளிந்திருக்கிறது.

    உழைத்து வளர்த்த திறமையை, தகுதியை தக்க தருணத்தில் வெளிக்கொணர்ந்து வாய்ப்புகள் அளித்து வழிகாட்டி மேம்படுத்துபவர் ஆசிரியர். மாணவர்களுக்கு குண நலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், சுயகட்டுப்பாடு, பொது நலம், தலைமைத்தகுதி, நல்லொழுக்கம், நாட்டுப்பற்று போன்றவற்றை கற்பிக்க ஒரு உந்துதலாக ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். ஒவ்வொரு மாணவனின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள். நாட்டின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மரபு, நாகரிகம் போன்ற அனைத்தும் இக்காலக்கட்டத்தில் குழித்தோண்டி புதைக்கக்கூடிய அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இன்று, குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எடுத்து சொல்ல கூட்டுக்குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. தாய் ஊட்டாத பாலை பசு ஊட்டும் என்பதுப்போல, இல்லம் புகட்டாத இயல்பை ஆசிரியர் புகட்டுவார்.

    இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். நன்கு படித்து நன்மதிப்பெண் பெற்றிருந்தும் வாழ்க்கை சிக்கலுக்கு தீர்வுகாண முடியாமல் திணறுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கை திறமைக்குரிய தைரியத்தையும், தன்னம்பிக்கையும் ஊட்டும் ஆசனாக ஆசிரிய பெருமக்கள் விளங்குகின்றனர்.

    ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல, தொண்டு. மாணவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியையும் ஆராய கூடியவர்கள் மற்ற துறையினர் செய்யும் தவறுகள் அந்தத் துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தை சீரழித்து விடும். சேவை என கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திற்கும் முதன்மையானதாகவும், சிறப்பித்து போற்றப்படுவதுமான ஆசிரிய பணியே மிகச்சிறந்த பணி.

    • பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
    • பரனூர் சுங்கச்சாவடி பகுதி நள்ளிரவில் பரபரப்பாக காணப்பட்டது.

    செங்கல்பட்டு:

    சமவேலைக்கு சம ஊதி யம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களும், முழுநேர ஆசிரியர் பணி மற்றும் பணி நிரந்தரம் கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்களும், வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்யக்கோரி டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் தமிழகம் முழு வதும் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1600 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். திருமணமண்டபம் மற்றும் சமுதாயநலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் இரவு விடுவிக்கப்பட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்ல அவர்கள் அனை வரும் மொத்தமாக ஒரே இடத்திற்கு சென்றால் மீண்டும் போராட்டத்தில ஈடுபடலாம் என்பதால் போலீசார் முன்ஏற்பாடாக ஆசிரியர்கள் அனைவரையும் தனித்தனியாக பிரித்து பஸ்களில் அனுப்பி வைத்தனர்.

    இதில் தனியார் பஸ்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாடிக்கு நேற்று நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    போலீஸ்சூப்பிரண்டு சாய்பிரனீத் மேற்பார்வை யில், டி.எஸ்.பி பரத் மற்றும் போலீசார் அங்கிருந்து ஆசிரி யர்களை தனித் தனியாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனு ப்பி வைத்தனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடி பகுதி நள்ளிரவில் பரபரப்பாக காணப்பட்டது.

    • ஆசிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் இன்று நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித் துறை அறிவித்தி ருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி இன்று நடந்தது.

    இந்த நிலையில் விருது நகர் மாவட்ட பள்ளி ஆசிரி யர்களுக்கு விருது நகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இன்று காலை பயிற்சி நடைபெறும் கல்லூரிக்கு வந்த

    200-க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததால் அதிருப்தியடைந்தனர். அவர்கள் பயிற்சியை புறக்கணித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போதிய அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாத கல்லூரியில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மையத்திற்கு வந்து செல்வது மற்றும் பயிற்சியில் பங்கேற்பது சிரமமாக உள்ளதாகவும், இதனால் பயிற்சியை வேறு மையத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் அப்போது அவர்கள் கூறினர்.

    போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அங்கிருந்த கலைந்து செல்ல மறுத்த ஆசிரியர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

    • நெல்லை மாவட்ட ஆசிரியர்களுக்கான 2 நாட்கள் கணினி பயிற்சி முகாம் பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
    • பயிற்சியில் சுமார் 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பமன்றம் மற்றும் டெல்லி தேசிய அறிவியல் தொழில்நுட்ப மன்றம் இணைந்து நெல்லை மாவட்ட ஆசிரியர் களுக்கான 2 நாட்கள் கணினி பயிற்சி முகாம் பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

    கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோல்டன் எபநேசர் ஜெபமணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சின்னராசு தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் சவுந்திரபாண்டியன், முதல்வர் உஷா காட்வின் மற்றும் துணை முதல்வர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முகாம் குறித்து விளக்கினர். இப்பயிற்சி முகாமை கல்லூரியின் விலங்கியல் துறைத்தலைவர் ஜெயபிரபா ஒருங்கிணைந்து நடத்தினார்.

    இப்பயிற்சியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த சுமார் 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் வேதியியல்துறை உதவி பேராசிரியை ஷகினா நன்றி கூறினார். மேலும் இந்த பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், 2 நாட்கள் பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என தெரிவித்தனர்.

    • ஆசிரியர்கள் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் மதிப்பெண்கள் போட மாட்டோம் என்று மிரட்டி வருகின்றனர்.
    • கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் வேலை சரியாக வழங்கப்பட வில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தச்சநல்லூர் கரையிருப்பு அய்யாசாமி பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மாணவன் மீது தாக்குதல்

    எனது குழந்தைகள் தச்சநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். எனது மகன் 8-ம் வகுப்பு படிக்கிறான். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அந்த பள்ளியில் படிக்கும் குழந்தை களிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும், மன உளைச்சலை ஏற்படுத்தியும், தேர்வில் மதிப்பெண்கள் போட மாட்டோம் என்று மிரட்டியும் வருகின்றனர்.

    கடந்த 8-ந்தேதி எனது மகனை அந்த பள்ளி ஆசிரியர் புத்தகத்தை கொண்டு தாக்கியதில் அவனது காதில் வலி ஏற்பட்டு காயம் இருந்து வருகிறது. இது தொடர்பாக எனது மகன் எங்களிடம் வந்து தெரிவித்த போது நாங்கள் தட்டி கேட்கின்றோம் என்றோம்.

    அப்போது அவன், தட்டிக் கேட்டால் ஆசிரியர்கள் பெயில் ஆக்கி விடுவார்கள் என்று மிரட்டியதாக தெரிவித்தான். விசாரித்து பார்த்ததில் அந்த பள்ளியில் ஏராள மான மாணவர்களை ஆசிரியர்கள் இதுபோன்று நடத்தி வருவது தெரிய வந்துள்ளது. எனவே அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு கூறி இருந்தனர்.

    மணல் திருட்டு

    களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் முத்துவளவன் தலைமையில் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    களக்காடு பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற ங்களுக்கு உட்பட்ட கிராம ங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் வேலை சரியாக வழங்கப்பட வில்லை. இந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    ஆனால் இங்கு சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த பகுதியில் குடிநீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. இங்குள்ள பச்சையாற்றின் படுகையில் மணல் திருட்டு தாராளமாக நடைபெறுகிறது. மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடி க்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
    • பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்.

    சென்னை:

    தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை கல்லூரி சாலையில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

    மாநில தலைவர் சேசுராஜா, மாநில செயலாளர் ராஜா தேவகாந்த், மாநில பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலையில் தொடர் உண்ணாவிரதம் நடந்தது.

    தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    உடற்கல்வி, தையல், இசை, ஓவியம், தோட்டக்கலை, உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 12 ஆண்டுகளாக 16,459 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம்.

    பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த காலங்களில் முதல்வர், கல்வி அமைச்சர் கவனத்தை பெற கவன ஈர்ப்பு, காத்திருப்பு போராட்டம் நடைபெற்றும் எந்த பலனும் இல்லை. 12 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் எங்களின் ஒற்றை கோரிக்கையான பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதம் இருக்கிறோம். பணி நிரந்தரம் அறிவிப்பு வெளியிடும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தொண்டி அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.
    • மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவா டானை பஞ்சாயத்து யூனி யன் மேற்கு தொடக்கப் பள்ளியானது தூய்மைக்கான மாநில அரசின் விருது பெற்ற பள்ளியாகும். இந்த பள்ளியின் தலைமையாசி ரியர் நல்லாசிரியர் விருது பெற்றவர்.

    இந்த நிலையில் இப் பள்ளியில் எண்ணும், எழுத்தும், காலை உணவு திட்டம் போன்ற கல்வி சம்பந்தமான அரசின் திட்டங்களை நிறைவேற்ற ஆசிரியர்களுடன் இணைந்து பெற்றோர்-ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு தயாராக உள்ள நிலையில், கடந்த 3 ஆண்டு களுக்கும் மேலாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

    இந்த பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை 250 மாணவ-, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு 8 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற் போது 4 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ள னர். இதனால் மாணவ-மாணவிகள் சிரமமடைந்துள்ளனர்.

    தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்த வசதியில்லாத மாணவ-மாணவிகள் அரசு பள்ளியை நம்பி வருகின்ற னர். இந்த நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை யால் முழுமையாக கல்வியை பெற முடி யவில்லை. ஆனால் அதிகாரி கள் இதுகுறித்து பாராமுக மாக இருப்பதாக கூறப்படு கிறது.

    காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவ தில் அக்கறையுடன் செயல் படவில்லை என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி குறித்த அறிக்கைகளை மாதந்தோறும் பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள் அதில் கூறப்பட்டுள்ள குறைகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் மாணவ-மாணவகளின் எதிர்காலம் கேள்வி குறியாகும் அபாயம் உள்ளது.

    இந்த நிலையில் மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    சுவாமிமலை:

    பள்ளிகளில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் படி ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் பணிகளை, ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவிடைமருதூர் வட்டார கிளை சார்பில் திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு டாக்டர். லாடமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார செயலாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாவட்ட பொருளாளர் நாகராஜன், சங்க ஆலோசகர் மறைமணி, வட்டார பொருளாளர் சுரேஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மாநில அளவிலான வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    விழுப்புரம்:

    வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். செயலாளர் சந்தியா காப்பர் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் அன்புமணி விளக்க உரையாற்றினார். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மேற்கொள்ளும் பணிகளை ஆசிரியர் பயிற்சி மாணவர்களைக் கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல்,மரக்காணத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அளவிலான வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 

    ×