search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதா"

    • கல்விச் செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழ வேண்டும்.
    • ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள்.

    நாம் பிறக்கையில் எதையும் கொண்டு வருவது இல்லை. இறக்கையில் கொண்டு போவதும் இல்லை. வாழும் வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் கல்வி செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழ வேண்டும். மாணவர்களை தன்பிள்ளை என எண்ணி எப்போதும் காத்திருக்கும் ஆசிரியர் உறவே முக்கியமான, முதன்மையான உறவு. ஒவ்வொரு ஆசிரியரின் குறிக்கோள், மாணவர்கள் நல்லறிவுடனும் சமுதாயத்தில் வளமுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். மாணவர்களின் வெற்றியே ஆசிரியரின் வெற்றி. இவர்களை விடவும் குழந்தைகள் மீது அக்கறை கொள்பவர் வேறு எவரும் இருக்க முடியாது. கடவுள் தன்னால் எல்லா இடங்களிலும் இருந்து கவனிக்க முடியாது என்பதினால் தான் ஆசிரியரை படைத்தார் என்று கூட கூறலாம்.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். அதில் `ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி' என்பன மனித வரலாற்றில் வழிவழி வந்த மணிமொழியாக போற்றி பாராட்டினர். குருவாகிய ஆசிரியர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கி அறிவையும், ஆற்றலையும் மாணவர்களுக்கு அளித்து தெய்வத்தை உணரவைப்பார்கள் ஆசிரிய பெருமக்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் முன் எப்போதையும் விட இப்போது மாணவர்களை பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள். அதனால் ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலக்கி வைக்காமல் அவர்களின் திறமைகளை தனித்தன்மைகளை காட்ட வழிவகுக்கின்றனர். இதற்கென கட்டுப்பாடுகளை தளர்த்தி, சுதந்திர சுயசிந்தனையால் மாணவர்கள் வளர அவர்களுக்கு பாதையமைத்து கொடுக்கின்றனர்.

    மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடிபோல் வான் உயரப் பறந்து வெற்றி சாதனைப் படைக்கின்றனர். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியர்களின் கையில் நூல் இருக்குமே தவிர அதுவே அவர்கள் விண்ணோட்டத்திற்கு தடையாக அமைந்து விடாது.

    மாணவர்கள் தங்கள் வாழ்க்கையிலும், கல்வியிலும், உணவு-உறக்கம் மறந்து உழைத்த உழைப்பையும், சந்தித்த சோதனைகளையும், அடைந்த இழப்புகளையும் பெற்ற வேதனைகளையும் பார்த்தால் அவனால் சாதனையாளனாக வர வாய்ப்பில்லாமல் போகலாம். தடைக்கல்லே உனக்கோர் படிக்கல் என்ற ஊக்கத்தையும், உணர்வுகளையும் ஆசிரியர் ஊட்டுவதினாலேயே மாணவர்கள் சாதனையாளர்களாக மாறுகின்றனர். ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் ஆசிரியர்களின் பங்கு ஒருவிதத்தில் ஒளிந்திருக்கிறது.

    உழைத்து வளர்த்த திறமையை, தகுதியை தக்க தருணத்தில் வெளிக்கொணர்ந்து வாய்ப்புகள் அளித்து வழிகாட்டி மேம்படுத்துபவர் ஆசிரியர். மாணவர்களுக்கு குண நலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், சுயகட்டுப்பாடு, பொது நலம், தலைமைத்தகுதி, நல்லொழுக்கம், நாட்டுப்பற்று போன்றவற்றை கற்பிக்க ஒரு உந்துதலாக ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். ஒவ்வொரு மாணவனின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள். நாட்டின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மரபு, நாகரிகம் போன்ற அனைத்தும் இக்காலக்கட்டத்தில் குழித்தோண்டி புதைக்கக்கூடிய அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இன்று, குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எடுத்து சொல்ல கூட்டுக்குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. தாய் ஊட்டாத பாலை பசு ஊட்டும் என்பதுப்போல, இல்லம் புகட்டாத இயல்பை ஆசிரியர் புகட்டுவார்.

    இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். நன்கு படித்து நன்மதிப்பெண் பெற்றிருந்தும் வாழ்க்கை சிக்கலுக்கு தீர்வுகாண முடியாமல் திணறுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கை திறமைக்குரிய தைரியத்தையும், தன்னம்பிக்கையும் ஊட்டும் ஆசனாக ஆசிரிய பெருமக்கள் விளங்குகின்றனர்.

    ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல, தொண்டு. மாணவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியையும் ஆராய கூடியவர்கள் மற்ற துறையினர் செய்யும் தவறுகள் அந்தத் துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தை சீரழித்து விடும். சேவை என கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திற்கும் முதன்மையானதாகவும், சிறப்பித்து போற்றப்படுவதுமான ஆசிரிய பணியே மிகச்சிறந்த பணி.

    • அருட்தந்தை ஜெயகுமார் தலைமையில் மாலை 6.15 மணிக்கு திருத்தேர்பவனி
    • தேவாலய வளாகம் வண்ண -வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு எழிலுடன் காட்சியளிக்கிறது

    அரவேணு,

    கோத்தகிரியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதையொட்டி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நேற்று மாலை 5 மணிக்கு திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.

    கோத்தகிரி ஆலய பங்கு தந்தை அமிர்தராஜ், எம ரால்டு ஆலய பங்குத்தந்தை ஞானதாஸ் ஆகியோர் தலைமையேற்று கொடியேற்றத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் மாலை 5.30 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் திருப்பலிகள் நடக்க உள்ளது.

    திருவிழாவின் முக்கிய நாளான 11-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை தமிழ், ஆங்கிலத்தில் திருப்பலியும், 8 மணிக்கு கூட்டுபாடல் திருப்பலியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அருட்தந்தை ஜெயகுமார் தலைமையில் மாலை 6.15 மணிக்கு திருத்தேர்பவனி நடக்க உள்ளது.

    அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன்னை வீற்றிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.

    தொடர்ந்து ஆலயத்தில் தேவ நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.கோத்தகிரி புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தேவாலய வளாகம் வண்ண -வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு எழிலுடன் காட்சியளிக்கிறது.

    • திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 27-ந்தேதி தேர்ப்பவனி நடக்கிறது.

    அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் கன்னங்குளத்தில் 171 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித உபகார மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, மிக்கேல் அதிதூதர் சப்பர பவனி, மாலை 6 மணிக்கு புதிய மாதா கெபி அர்ச்சிப்பு, புதிய இல்லம் திறப்பு விழா, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்குகிறார். மண்ணின் மைந்தர் அருட்பணியாளர் தேவநவமணி முன்னிலை வகிக்கிறார்.

    இரவு 8.30 மணிக்கு நற்பணி சபை பொன்விழா மலர் வெளியீடு நடக்கிறது. நிகழ்ச்சியில் மாதா கெபி, புதிய இல்லம் கட்ட முயற்சி எடுத்த தொழில் அதிபர் த.ஜான்சனை ஆயர் ஸ்டீபன் அந்தோணி பாராட்டி கவுரவிக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, தொழில் அதிபர் எஸ்.டி. வேலு, வள்ளியூர் ஒன்றிய தலைவர் சேவியர் செல்வராஜா, தி.மு.க. பிரமுகர் அலெக்ஸ் அப்பாவு, லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மணிவர்ண பெருமாள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரவு 9 மணிக்கு சமபந்தி விருந்து நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    ஒன்பதாம் திருவிழாவான 27-ந் தேதி இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 28-ந் தேதி அதிகாைல 5.30 மணிக்கு ஜெபமாலை, திருவிழா கூட்டுத்திருப்பலி, மதியம் 2 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு சமபந்தி விருந்து, 8 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்குதல் ஆகியவை நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தையர்கள் மரிய ஆல்பின் லியோன், பாலன் மற்றும் அருட்சகோதரிகள், ஆலய நிர்வாக குழுவினர், பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.

    • வழிநெடுகிலும் மக்கள் நேர்ச்சைக் கடன்கள் செலுத்தினர்.
    • கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெற்றது.

    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க ஆலயங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதிகொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து வந்த திருவிழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆராதனை, ஜெபமாலை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

    திருவிழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி, காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி போன்றவை நடந்தது.

    காலை 8 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி, 10 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி போன்றவை நடந்தது. இதில் விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாபு, தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் தாமரைபாரதி உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    காலை 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலி நடந்தது. இரு தங்கத்தேர்களும் ரத வீதிகள் வழியாக பவனி வந்த போது வழிநெடுகிலும் மக்கள் நேர்ச்சைக் கடன்கள் செலுத்தினர். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெற்றது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் மேக்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்குப் பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக் மற்றும் அருட்சகோதரிகள், அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    • நாளை மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தோ் பவனி நடக்கிறது.
    • இன்று இரவு சூசையப்பர் தங்கத்தேர்ப்பவனி நடக்கிறது.

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குதந்தை ஆன்றனி அல்காந்தர் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடந்தது. விழாவில் நேற்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு திருச்சப்பர பவனி நடந்தது.

    9-ம் நாள் விழாவான இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, மறையுரை, இரவு 9 மணிக்கு சூசையப்பர் தங்கத்தேர்ப்பவனி, 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நாளை(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி, காலை 6 மணிக்கு திருவிழா நிறைவுத்திருப்பலி, மறையுரை, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தோ் பவனி, 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு சிறப்பு திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள், பங்குதந்தை ஆன்றனி அல்காந்தா், இணை பங்கு தந்தையா்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியா் அருள்நாதன், பங்குபேரவை துணைத்தலைவா் ஜோசப், செயலா் சுமன், பொருளாளா் தீபக் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • இன்று ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது.
    • 18-ந்தேதி மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்க தேர்ப்பவனி நடக்கிறது.

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, 8 மணிக்கு முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம், திருப்பலி, மறையுரை ஆகியவை நடைபெற்றது. விழாவில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி, 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 18-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி, காலை 6 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, மறையுரை, 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்க தேர்ப்பவனி, 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு வடசேரி பங்குதந்தை புருணோ தலைமையில் திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்குப்பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக் மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    • 17-ந்தேதி சூசையப்பர் தேர்பவனி நடக்கிறது.
    • 18-ந்தேதி மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கதேர்ப்பவனி நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 9-ந்தேதி (நாளை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து குழித்துறை மறை மாவட்ட செயலாளர் அருட்பணியாளர் ரசல்ராஜ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி நடைபெறுகிறது.

    விழாவில் 17-ந் தேதி காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, வானவேடிக்கை, தொடர்ந்து சூசையப்பர் தேர்பவனி நடக்கிறது.

    10-ம் நாள் திருவிழாவான 18-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி, காலை 6 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கதேர்ப்பவனி நடக்கிறது.

    தேர்பவனியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமான இறைமக்கள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு கொடி இறக்கம், நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்கு பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணைச்செயலாளர் வினோ மற்றும் பங்கு மக்கள் பங்கு பேரவையினர், அருட் சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    • தேர் பவனி முக்கிய விதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்திற்கு வந்தது.
    • திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    ஆத்தூரை அடுத்துள்ள புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலயத்தில் 471-வது ஆண்டு பெருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுறை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

    திருவிழாவில் 8-ம்திருவிழா அன்று மாலையில் நற்கருணை பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரை வரை சென்று மீண்டும் நற்கருணை பவனி ஆலயத்தை வந்தடைந்தது.

    இந்த நற்கருணை பவனி மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு ஜான் செல்வம் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி பாத்திமா நகர் உதவி பங்கு சந்தை விமல்ஜன் அடிகளார், பெரியதாழை உதவி பங்கு தந்தை கிங்ஸிலின் அடிகளார், அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய நிர்வாகி சில்வ ஸ்டர் அடிகளார், கூட்டபனை பங்கு தந்தை லோஷன் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர். 9-ம் திருவிழா அன்று காலை 10 மணி அளவில் தூய ராஜ கன்னி மாதா சொரூபத்திற்கு மகுடம் அணிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மாலையில் திருவிழா ஆராதனை நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி இளையோர் பணிக்குழு இயக்குனர் ரஞ்சித் குமார் கருடோசா அடிகளார், குரூஸ்புரம் உதவி பங்கு சந்தை சுதர்சன அடிகளார், புன்னக்காயல் மூத்த பங்கு தந்தையும் திருச்சி தமிழ் இலக்கிய கழகத்தின் செயலாளருமான அமுதன் அடிகளார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரவு தூய ராஜகன்னி மாதா சொரூப தேர் பவனி நடைபெற்றது. திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 4 மணியளவில் அன்னையின் திருஉருவத்தேரின் முன்பு ஜான் சுரேஷ் அடிகளார் தலைமையில் திருப்பலி நடைபெற்றது..

    தொடர்ந்து காலை 7.30 மணி அளவில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. பின்னர் தேர் பவனி முக்கிய விதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்திற்கு வந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். திருவிழாவையொட்டி புன்னக்காயல் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    • 23-ம்தேதி ஜெபமாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.
    • 24-ந்தேதி திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து விழாவும் நடக்கிறது.

    கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் தமிழகத்தில் புகழ் பெற்ற கிறிஸ்தவ திருத்தலங்களில் ஒன்றாகும்.

    இந்த திருத்தலத்தில் திருவிழா முன்பு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறும். இந்த மாதத்தில் மீன் தொழில் அதிகமாக இருந்து வந்ததால் தேர்பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிரமம் இருந்து வந்தது. இதன் காரணமாக செப்டம்பர் மாதம் நடைபெற்று வந்த திருவிழா பொதுமக்களின் வசதிக்காக டிசம்பர் மாதத்துக்கு மாற்றி வைக்கப்பட்டது.

    இருப்பினும் பாரம்பரிய முறைப்படி நடந்து வந்த செப்டம்பர் மாத திருவிழாவை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 2 நாட்கள் மட்டும் 'தேதிப்படி திருவிழா' என நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேதிப்படி திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனையொட்டி அன்று மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 24-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, முதல் திருவிருந்து விழாவும் நடக்கிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனி, அதைதொடர்ந்து மறையுரை நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்தந்தை ஆன்றனி ஆல்காந்தர், பங்கு பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக் மற்றும் இணை பங்கு தந்தையர்கள், பங்கு பேரவையினர் அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

    • திருவிழா வருகிற 18-ந்தேதி வரை நடக்கிறது.
    • தினந்தோறும் காலையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    மும்பை பாந்திராவில் பிரசித்தி பெற்ற மலை மாதா ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் நடைபெறும் திருவிழாவுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மலை மாதா ஆலய திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மலை மாதா ஆலய திருவிழா தொடங்கியது.

    இதில் காலை 11.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடந்தது. திருவிழா வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு, காலை 11.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடக்கிறது.

    இதில் இன்று (திங்கள்) முதியவர்கள், நோயாளிகளுக்காக சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதேபோல நாளை கொங்கனியிலும், 14-ந் தேதி (புதன்கிழமை) மராத்தியிலும், 15-ந் தேதி (வியாழன்) தமிழிலும், 16-ந் தேதி (வெள்ளி) மலையாளத்திலும், 17-ல் குஜராத்தியிலும் திருவிழா திருப்பலி நடக்கிறது. 18-ந் தேதி அதிகாலை 5.30 மணி முதல் திருப்பலி நடக்கிறது.

    மலை மாதா ஆலய திருவிழாவில் தமிழர்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போல திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக பெஸ்ட் சார்பில் 260 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள் பாந்திரா ரெயில் நிலையம், மாகிம் சர்ச், மலை மாதா ஆலயம் இடையே இயக்கப்பட உள்ளன. மேலும் மலை மாதா ஆலய பகுதியில் போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அசாம்பாவிதங்களை தடுக்க பயங்கரவாத தடுப்பு பிரிவினர் உள்பட 400 போலீசார் ஆலயத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் சாதாரண உடைகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இருந்த நிலையிலும் அதனையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.
    • மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் பகுதிகளில் இருந்து நடை பயணமாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உலக புகழ் பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு தினமும் வருவர்.

    இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. 8-ந் தேதி மாதாவின் பிறப்பு பெருவிழா நடைபெற உள்ளது.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் தங்கள் பகுதிகளில் இருந்து நடை பயணமாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அதன்படி கடந்த சில நாட்களாக திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தஞ்சை வழியாக வேளாங்கண்ணிக்கு நடை பயணமாக சென்று வருகின்றனர்.

    சிறிய மற்றும் பெரிய அளவில் சப்பரங்களை இழுத்துக் கொண்டு பின்னால் மினி லாரியில் ஒலிபெருக்கியில் மாதாவின் பாடல்களை ஒலிக்க விட்டவாறு செல்கின்றனர்.

    தஞ்சையில் மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக மாறி மாறி பருவநிலை காணப்படுகிறது.

    இருந்த நிலையிலும் அதனையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நடை பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். 

    • அலங்கார மாதாவின் திருஉருவ பவனி ஆலயத்தை சுற்றி வலம் வந்தது.
    • பரமக்குடி புனித அலங்கார அன்னை ஆலய பெருவிழாவின் தேர் பவனி 27-ந்தேதி நடக்கிறது.

    பரமக்குடி புனித அலங்கார அன்னை ஆலய பெருவிழாவின் தேர் பவனி 27-ந் தேதி நடக்கிறது. அதையொட்டி விழாவின் கொடியேற்று விழா நடந்தது. இதற்கு வட்டார அதிபரும் பங்கு பணியாளருமான திரவியம் முன்னிலையில் மதுரை ஜெபமாலை அன்னை ஆலயம் வட்டார அனைத்து பங்கு பணியாளர் ஆனந்தம் கொடியை அர்ச்சித்து ஏற்றி வைத்தார்.

    இதில் உதவி பங்கு பணியாளர் பிரான்சிஸ் பிரசாந்த், பிரிட்டோ ஜெயபால் மற்றும் இறை மக்கள் கலந்துகொண்டு அருள் பெற்றனர். அலங்கார மாதாவின் திருஉருவ பவனி ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. பின்னர் திருப்பலி நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை பங்கு பேரவையினர், பொறுப்பாளர்கள், பணி குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    ×