search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • இன்று ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது.
    • 18-ந்தேதி மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்க தேர்ப்பவனி நடக்கிறது.

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி, 8 மணிக்கு முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம், திருப்பலி, மறையுரை ஆகியவை நடைபெற்றது. விழாவில் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலி, 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 9 மணிக்கு பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 18-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேரில் திருப்பலி, காலை 6 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி, 8 மணிக்கு ஆங்கில திருப்பலி, மறையுரை, 9 மணிக்கு மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்க தேர்ப்பவனி, 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, பகல் 12 மணிக்கு வடசேரி பங்குதந்தை புருணோ தலைமையில் திருப்பலி, மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆன்றனி அல்காந்தர், இணை பங்கு தந்தையர்கள் சகாய வினட் மேக்ஸ்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன், பங்குப்பேரவை துணைத்தலைவர் ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக் மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×