search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madha"

    • திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 27-ந்தேதி தேர்ப்பவனி நடக்கிறது.

    அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் கன்னங்குளத்தில் 171 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித உபகார மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, மிக்கேல் அதிதூதர் சப்பர பவனி, மாலை 6 மணிக்கு புதிய மாதா கெபி அர்ச்சிப்பு, புதிய இல்லம் திறப்பு விழா, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்குகிறார். மண்ணின் மைந்தர் அருட்பணியாளர் தேவநவமணி முன்னிலை வகிக்கிறார்.

    இரவு 8.30 மணிக்கு நற்பணி சபை பொன்விழா மலர் வெளியீடு நடக்கிறது. நிகழ்ச்சியில் மாதா கெபி, புதிய இல்லம் கட்ட முயற்சி எடுத்த தொழில் அதிபர் த.ஜான்சனை ஆயர் ஸ்டீபன் அந்தோணி பாராட்டி கவுரவிக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, தொழில் அதிபர் எஸ்.டி. வேலு, வள்ளியூர் ஒன்றிய தலைவர் சேவியர் செல்வராஜா, தி.மு.க. பிரமுகர் அலெக்ஸ் அப்பாவு, லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மணிவர்ண பெருமாள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரவு 9 மணிக்கு சமபந்தி விருந்து நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    ஒன்பதாம் திருவிழாவான 27-ந் தேதி இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 28-ந் தேதி அதிகாைல 5.30 மணிக்கு ஜெபமாலை, திருவிழா கூட்டுத்திருப்பலி, மதியம் 2 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு சமபந்தி விருந்து, 8 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்குதல் ஆகியவை நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தையர்கள் மரிய ஆல்பின் லியோன், பாலன் மற்றும் அருட்சகோதரிகள், ஆலய நிர்வாக குழுவினர், பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.

    கல்யாண் மேற்கு, ரைத்தாவில் தாபோர் அன்னை ஆலயம் உள்ளது. இதன் 17-ம் ஆண்டு திருவிழா மற்றும் தேர் பவனி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
    கல்யாண் மேற்கு, ரைத்தாவில் தாபோர் அன்னை ஆலயம் உள்ளது. இதன் 17-ம் ஆண்டு திருவிழா மற்றும் தேர் பவனி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. திருவிழாவையொட்டி காலை 9 மணி முதல் சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    மாலை 7 மணியளவில் தாபோர் அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது. திருவிழாவில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் மறைமாவட்ட ஆயர் ரத்தின சபாபதி கலந்து கொண்டு திருப்பலியை நிறைவேற்றுகிறார்.
    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலயத்தின் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய பெருவிழா ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மே மாதம் 1-ந் தேதி பூண்டிமாதா பேராலய பங்குத்தந்தை பாக்கியசாமி தலைமையில் கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது.

    தொடர்ந்து ஆலயத்தில் தினசரி அருட்தந்தையர்கள் அருண்பேட்ரிக் மரிய ஜோமிக்ஸ் சாவியோ, யூஜின்டோனி, தங்கசாமி சுவக்கின் தலைமையில் நவநாள் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடந்தது. நேற்று காலை 8 மணியளவில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    தொடர்ந்து பகல் 12 மணிக்கு கிராம பொதுமக்களின் சார்பில் செண்டைமேள முழக்கத்துடன் புனித அன்னாள் சொரூபம் தாங்கிய ஆடம்பர பெரிய தேரோட்டம் நடைபெற்றது. மாலை 6.30மணியளவில் திவ்விய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. விழாவில் புள்ளம்பாடி, கோவண்டாகுறிச்சி, புதூர்பாளையம், வெள்ளனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித அன்னாள் அருள்பெற்று சென்றனர். விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    ஆங்காங்கு பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மறைவட்ட முதன்மைகுரு ஹென்றிபுஷ்பராஜ், உதவி பங்குதந்தை சதீஸ்ஏசுதாஸ், பட்டையதாரர்கள் மற்றும் அருட்சகோதரிகள் செய்திருந்தனர். விழாவையொட்டி லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மாலை 5.30 மணியளவில் புனித அன்னாளின் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும். 
    சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை சந்திப்பு சகாயபுரத்தில் உள்ள இடைவிடா சகாய அன்னை ஆலய திருவிழா நாளை ( வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
    சுசீந்திரம் அருகே வழுக்கம்பாறை சந்திப்பு சகாயபுரத்தில் இடைவிடா சகாய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். விழாவுக்கு அருட்பணியாளர் ஞானசேகரன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ஜான் பெனிட்டோ மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு நற்செய்தி கூட்டம் நடக்கிறது.

    திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலி, நற்செய்தி கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    13-ந் தேதி மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    19-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் டயனீஷியஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஜான்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 20-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு, முதல்திருப்பலி நடைபெறும். தொடர்ந்து காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி, முதல் திருவிருந்து வழங்குதல் ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்குகிறார். மாலை 6 மணிக்கு திருப்பலி, தொடர்ந்து கலை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் கென்னடி, இணை பங்குத்தந்தை நியுமேன் மற்றும் பங்குபேரவை நிர்வாகிகள், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள். 
    ×