search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய தேரோட்டம்
    X

    புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய தேரோட்டம்

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலயத்தின் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய பெருவிழா ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மே மாதம் 1-ந் தேதி பூண்டிமாதா பேராலய பங்குத்தந்தை பாக்கியசாமி தலைமையில் கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது.

    தொடர்ந்து ஆலயத்தில் தினசரி அருட்தந்தையர்கள் அருண்பேட்ரிக் மரிய ஜோமிக்ஸ் சாவியோ, யூஜின்டோனி, தங்கசாமி சுவக்கின் தலைமையில் நவநாள் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடந்தது. நேற்று காலை 8 மணியளவில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    தொடர்ந்து பகல் 12 மணிக்கு கிராம பொதுமக்களின் சார்பில் செண்டைமேள முழக்கத்துடன் புனித அன்னாள் சொரூபம் தாங்கிய ஆடம்பர பெரிய தேரோட்டம் நடைபெற்றது. மாலை 6.30மணியளவில் திவ்விய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. விழாவில் புள்ளம்பாடி, கோவண்டாகுறிச்சி, புதூர்பாளையம், வெள்ளனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித அன்னாள் அருள்பெற்று சென்றனர். விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    ஆங்காங்கு பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மறைவட்ட முதன்மைகுரு ஹென்றிபுஷ்பராஜ், உதவி பங்குதந்தை சதீஸ்ஏசுதாஸ், பட்டையதாரர்கள் மற்றும் அருட்சகோதரிகள் செய்திருந்தனர். விழாவையொட்டி லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று மாலை 5.30 மணியளவில் புனித அன்னாளின் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுபெறும். 
    Next Story
    ×