search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
    X

    தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

    • திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    சுவாமிமலை:

    பள்ளிகளில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் படி ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் பணிகளை, ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவிடைமருதூர் வட்டார கிளை சார்பில் திருவிடைமருதூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு டாக்டர். லாடமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் வட்டார செயலாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாவட்ட பொருளாளர் நாகராஜன், சங்க ஆலோசகர் மறைமணி, வட்டார பொருளாளர் சுரேஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×