search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரனூர் சுங்கச்சாவடி"

    • நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருகிறது.
    • நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

    செங்கல்பட்டு:

    பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருகிறது. இதைத்தொடர்ந்து விடுமுறை மற்றும் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட் டங்களை சேர்ந்தவர்கள் நேற்று முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதனால் நேற்று மாலை முதல் சென்னை-திருச்சி மார்க்கத்தில் கார் மற்றும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. பஸ்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதையடுத்து நேற்று மாலை செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி மற்றும் இருகுன்ற பள்ளி அருகே உள்ள பாலாறு மேம்பாலத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

    இன்று காலையும் வழக்கத்தை விட வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. செங்கல்பட்டு தாலுக்கா மற்றும் பட்டாளம் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சரிசெய்தனர். கடும் நெரிசல் காரணமாக பாலாற்று பாலத்தில் வாகனங்கள் எறும்பு போல் ஊர்ந்து செல்கின்றன.

    • புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • சாகசம் செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை மறைமலை நகரை சேர்ந்தவர் கோகுல் (வயது21). தனியார் நிறு வனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் 'வீலிங்' சாகசத்தில் ஈடுபட்டார். அவர் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

    இதுகுறித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட கோகுலை கைது செய்தனர். அவர் சாகசம் செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதுபோல் மோட்டார்சைக்கிளில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் டிரைவிங் லைசென்சை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
    • பரனூர் சுங்கச்சாவடி பகுதி நள்ளிரவில் பரபரப்பாக காணப்பட்டது.

    செங்கல்பட்டு:

    சமவேலைக்கு சம ஊதி யம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களும், முழுநேர ஆசிரியர் பணி மற்றும் பணி நிரந்தரம் கோரி பகுதி நேர சிறப்பாசிரியர்களும், வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்யக்கோரி டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் தமிழகம் முழு வதும் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1600 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். திருமணமண்டபம் மற்றும் சமுதாயநலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்ட அவர்கள் பின்னர் இரவு விடுவிக்கப்பட்டனர். சொந்த ஊர்களுக்கு செல்ல அவர்கள் அனை வரும் மொத்தமாக ஒரே இடத்திற்கு சென்றால் மீண்டும் போராட்டத்தில ஈடுபடலாம் என்பதால் போலீசார் முன்ஏற்பாடாக ஆசிரியர்கள் அனைவரையும் தனித்தனியாக பிரித்து பஸ்களில் அனுப்பி வைத்தனர்.

    இதில் தனியார் பஸ்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாடிக்கு நேற்று நள்ளிரவு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    போலீஸ்சூப்பிரண்டு சாய்பிரனீத் மேற்பார்வை யில், டி.எஸ்.பி பரத் மற்றும் போலீசார் அங்கிருந்து ஆசிரி யர்களை தனித் தனியாக அவர்களது சொந்த ஊர்களுக்கு அனு ப்பி வைத்தனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடி பகுதி நள்ளிரவில் பரபரப்பாக காணப்பட்டது.

    • சுங்கக்கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படக் கூடாது.
    • முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளை அடையாளம் கண்டு அவற்றில் சுங்கக்கட்டணத்தை நீக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்து உள்ளது.

    தென் மாநிலங்களில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகளில் இருந்து மட்டும் ரூ.132 கோடி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

    அரசு நிறுவனமே விதிகளை மதிக்காமல் அப்பாவி மக்களிடம் சுங்கக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

    செங்கல்பட்டு சுங்கச்சாவடியையும், திண்டிவனம் சுங்கச்சாவடியையும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1.20 லட்சம் வாகனங்கள் கடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இவ்வளவு வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் ஒரு நாளைக்கு ரூ.11 லட்சம் மட்டுமே கட்டணமாக வசூலாவதாக கணக்கு காட்டப்பட்டால், அதில் எந்த அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள முடியும்.

    செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் சுங்கச்சாவடிகளில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே சுங்கச் சாவடிகளின் கட்டண வசூல்கள் இப்படித் தான் பராமரிக்கப்படுகின்றன. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தில் பாதியாவது கணக்கில் காட்டப்படுமா? என்பதே ஐயமாகத் தான் இருக்கிறது.

    சுங்கச்சாவடிகளும், அவற்றில் வசூலிக்கப்படும் கட்டணங்களும் மர்மமாகவே நீடிப்பதை அனுமதிக்க முடியாது. சுங்கக்கட்டண கணக்கு மேலாண்மை என்பது வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். சுங்கக்கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படக் கூடாது.

    எனவே, பரனூர் சுங்கச்சாவடியில் தொடங்கி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும்.

    அதன்மூலம் முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளை அடையாளம் கண்டு அவற்றில் சுங்கக்கட்டணத்தை நீக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுங்கச்சாவடியில் எப்போதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.
    • சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது.

    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களும், சென்னை நகருக்குள் செல்லும் வாகனங்களுக்கும் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி முக்கிய இடமாக உள்ளது. இதனால் இந்த சுங்கச்சாவடியில் எப்போதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.

    சுங்கச்சாவடிகளில் போதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    இந்த நிலையில் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது.

    இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க வரியை வசூலிப்பதில் உள்ள வீடுகளை முறையாக கடைபிடிக்காமல் வாகன ஓட்டிகளிடம் அதிகப்படியான கட்டணங்களைச் வசூல் செய்து இருப்பது தெரிந்தது.

    நான்கு வழிச்சாலையை மேம்படுத்தும் போது கட்டணத்தை மாற்றி அமைக்காமல் கட்டணத்தில் 75 சதவீதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    ஆனால் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 5 சுங்கச்சாவடிகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    பரனூர் சுங்கச்சாவடியில் நான்கு வழிச்சாலையை 8 வழிச்சாலையாக இரண்டு பிரிவுகளாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. இதில் முதல் திட்டப்பணி இரும்புலியூர் முதல் வண்டலூர்வரை 2.3 கி.மீட்டர் வரையும், இரண்டாம் திட்டப்பணி கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் முதல் வண்டலூர் முதல் கூடுவாஞ்சேரி வரை 5.3 கி.மீ வரையும் நடைபெற்றது.

    இதில் முதல் திட்டப்பணி கடந்த 2020-ம் ஆண்டு முடிந்தது. 2-ம் திட்டப்பணி மார்ச் 2021-ம் ஆண்டும் தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் இந்த பாதையில் சுங்கக்கட்டணத்தை 75 சதவீதமாகக் சுங்ச்சாவடி குறைக்கவில்லை.

    இதனால் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.6.54 கோடி அளவுக்கு அதிகமான சுங்கச் வசூல் செய்து உள்ளது.

    இதேபோல் 1956-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்திற்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விதியில் உள்ளது. ஆனால் பரனூர் சுங்கச்சாவடியி 1954 -ம் ஆண்டு கட்டப்பட்ட பாலத்திற்கும் கூடுதலாக கட்டணம் வசூலித்து இருக்கிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021 வரை பரனூர் சுங்கச்சாடியில் விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் ரூ. 22 கோடி கூடுதல் சுங்கக் கட்டணத்தை வசூலித்து இருப்பது மத்திய தணிக்கை அறிக்கையில் தெரியவந்து உள்ளது.

    இதேபோல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இருபுறங்களிலும் கழிவறை கட்டப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால் 41 சுங்கச்சாவடிகளில் பரனூர், கொடைரோடு உள்ளிட்ட 13 சுங்கச்சாவடிகளில் ஒரு புறத்தில் மட்டும் கழிவறை கட்டப்பட்டு உள்ளது. மேலும் 3 சுங்கச்சாவடிகளில் கழிவறைகள் கட்டப்பட்டு இருந்தாலும் அவை முறையாக பராமரிக்கப்பட வில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • சென்னையின் நுழைவு வாயிலாக உள்ள செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் அதிகாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • சுங்ககட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன.

    செங்கல்பட்டு:

    பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்களுக்கு வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. இதன் மூலம் ஏறத்தாழ 5 லட்சம் பேர் வரை தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்று இருந்தனர்.

    இதேபோல் சென்னையில் இருந்து ஆம்னி பஸ்கள் மூலமும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்கு சென்று உள்ளனர். இந்த நிலையில் சொந்த ஊர் சென்றவர்கள் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிட வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 16-ந் தேதி முதல் இன்று வரை 3 நாட்களுக்கு வழக்கமான பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் என மொத்தம் 15,619 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று பள்ளி கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலை நாள் என்பதால் நேற்று மாலை முதல் ஏராளமானோர் குடும்பத்துடன் சென்னை நோக்கி திரும்பி வரத்தொடங்கினர். இன்று அதிகாலை முதல் ஏராளமான பஸ், கார்கள் சென்னை நோக்கி வரத்தொடங்கியதால் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    நேரம் செல்ல செல்ல சென்னை நோக்கி ஏராளமான வாகனங்கள் வரத் தொடங்கின.

    சென்னையின் நுழைவு வாயிலாக உள்ள செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் அதிகாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுங்ககட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அணி வகுத்து நின்றன.

    இதைத்தொடர்ந்து சுங்கக்கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதன்பின்னர் போக்குவரத்து நெரிசல் மெல்ல மெல்ல சீரானது. தொடர்ந்து அதிகமான வாகனங்கள் சென்னை நகர் நோக்கி வந்து கொண்டு இருப்பதால் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.பரத் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் அதிகாலை முதல் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    வெளியூர்களில் இருந்து வரும் ஆம்னி பஸ்கள் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அரசு பஸ்கள் மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்றன. ஆம்னி பஸ்கள் சில வண்டலூரிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அங்கிருந்து நகருக்கு மாற்று பஸ்சில் வர சிரமப்பட்டனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில இடங்களில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளில் பெரும்பாலானோர் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பஸ்நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் இறங்கி மற்ற இடங்களுக்கு செல்வது வழக்கம். இதைத்தொடர்ந்து பயணிகள் வசதிக்காக தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் கூடுதலாக மநகர பஸ்கள் இயக்கப்பட்டன. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்ட நெரிசலை தடுத்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் அதிகப்படியான கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் டி.எஸ்.பி. மணிமேகலை அறிவுறுத்தலின் படி ஆத்தூர் சுங்கச்சாவடியில் கூடுதலான சுங்க கட்டணம் வசூலிக்கின்ற மையங்கள் திறக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் விரைவாக சென்றன. நேற்று மாலை 3 மணி முதல் வாகனங்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது.

    கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்பதால் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கோயம்பேடு மார்கெட் அருகே உள்ள "ஏ" மற்றும் "சி" சாலை, காளியம்மன் கோவில் சாலை, மெட்டுக்குளம் சந்திப்பு, பள்ளிகூட தெரு சந்திப்பு, நூறடி சாலையில் உள்ள கேம்ஸ் வில்லேஜ் சந்திப்பு, பஸ் நிலைய நுழைவு வாயில் ஆகிய முக்கிய இடங்களில் 6 இன்ஸ்பெக்டர்கள், 8 சப்-இன்ஸ்பெக்டர்கள், 30 போலீஸ்காரர்கள் என சுமார் 50 போக்குவரத்து போலீசார் அதிகாலை 4 மணி முதலே போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது பெரிதும் தவிர்க்கப்பட்டது.

    மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் தங்களது பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டு செல்லும் வகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

    • செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    • சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நேற்றுமுன்தினம் ஆயுத பூஜை, நேற்று விஜய தசமி பண்டிகை என அடுத்தடுத்து அரசு விடுமுறை நாட்கள் ஆகும்.

    தொடர் பண்டிகை விடுமுறையையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கடந்த 30-ந்தேதி முதலே தங்களது சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர்.

    அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 30-ந்தேதி மற்றும் 1-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதன்மூலம் சென்னையில் இருந்து சுமார் 6 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    இந்த நிலையில் இன்று வேலை நாள் என்பதால் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்புபவர்களுக்கு வசதியாக நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து நேற்று மாலை முதலே சென்னை நோக்கி ஏராளமானோர் தங்களது சொந்த வாகனங்களில் திரும்ப தொடங்கினர். இதனால் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதே போல் இன்று காலை அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் சொந்த வாகனங்களில் ஏராளமானோர் சென்னை நோக்கி வந்ததால் 2-வது நாளாக பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    அதிகாலையில் சுங்கச்சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. நீண்ட நேரம் காத்திருந்து வாகனங்கள் அணிவகுத்து சென்றன. காலை 8 மணிவரை போக்குவரத்து நெரிசல் இருந்தது.

    சென்னையின் நுழைவு வாயிலான பெருங்களத்தூர், தாம்பரம் பகுதியிலும் அதிகாலையில் போக்குவரத்து நெரிசல் இருந்தது. போலீசார் வாகன நெரிசலை சரிசெய்து அனுப்பினர். அதிகாலையில் மழை பெய்ததால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் அனைத்து இடங்களிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.

    கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு இன்று அதிகாலை முதல் பயணிகள் அதிக அளவில் அரசு பஸ் மூலம் சென்னை திரும்பி வந்தனர். இதன் காரணமாக அசோக் நகர், வடபழனி நூறடி சாலை சந்திப்பு, கோயம்பேடு பஸ் நிலைய சந்திப்பு, மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் சீரமைக்கும் பணியில் 5 போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் 20க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக பெய்து வரும் மழையால் பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    மேலும் சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பல சாலைகள் மூடப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி ஆட்டோ மற்றும் கார்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தனர். அலுவலகம் மற்றும் கல்லூரிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதால் பயணிகள் வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தி புறப்பட்டு சென்றனர்.

    • ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
    • தாம்பரத்தில் அதிகாலையில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    செங்கல்பட்டு:

    கடந்த13-ந்தேதி முதல் நேற்றுவரை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

    சென்னையில் இருந்து மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை முதலே கார், ரெயில், அரசு மற்றும் ஆம்னி பஸ் மூலம் சென்று இருந்தனர். இதற்காக சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் விடுமுறை முடிந்து நேற்று மாலை முதலே வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்பி வரத்தொடங்கினர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் நள்ளிரவில் சென்னை நோக்கி ஒரே நேரத்தில் வந்ததால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இன்று அதிகாலை சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் அதிகாலை 3 மணிமுதல் காலை 7 மணிவரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்பினர். இதனால் நெரிசல் தவிர்க்கப்பட்டது. தாம்பரத்தில் அதிகாலையில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் வாகன போக்குவரத்தை சரி செய்தனர்.

    கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் கோயம்பேடு பஸ் நிலையத்தை சுற்றி உள்ள முக்கிய சாலைகளில் 3 போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் , 8 சப்- இன்ஸ்பெக்டர்கள், 15 போலீசார் என 30க்கும் மேற்பட்டோர் அதிகாலை 4மணி முதல் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் காரணமாக தேவையற்ற வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலும் குறைந்தது.

    ×