search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பரனூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் ரூ.28 கோடி கூடுதல் கட்டணம் வசூல்- மத்திய தணிக்கை அறிக்கையில் தகவல்
    X

    பரனூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் ரூ.28 கோடி கூடுதல் கட்டணம் வசூல்- மத்திய தணிக்கை அறிக்கையில் தகவல்

    • சுங்கச்சாவடியில் எப்போதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.
    • சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது.

    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களும், சென்னை நகருக்குள் செல்லும் வாகனங்களுக்கும் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி முக்கிய இடமாக உள்ளது. இதனால் இந்த சுங்கச்சாவடியில் எப்போதும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.

    சுங்கச்சாவடிகளில் போதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    இந்த நிலையில் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து மத்திய தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது.

    இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்க வரியை வசூலிப்பதில் உள்ள வீடுகளை முறையாக கடைபிடிக்காமல் வாகன ஓட்டிகளிடம் அதிகப்படியான கட்டணங்களைச் வசூல் செய்து இருப்பது தெரிந்தது.

    நான்கு வழிச்சாலையை மேம்படுத்தும் போது கட்டணத்தை மாற்றி அமைக்காமல் கட்டணத்தில் 75 சதவீதத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

    ஆனால் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் 5 சுங்கச்சாவடிகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    பரனூர் சுங்கச்சாவடியில் நான்கு வழிச்சாலையை 8 வழிச்சாலையாக இரண்டு பிரிவுகளாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. இதில் முதல் திட்டப்பணி இரும்புலியூர் முதல் வண்டலூர்வரை 2.3 கி.மீட்டர் வரையும், இரண்டாம் திட்டப்பணி கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் முதல் வண்டலூர் முதல் கூடுவாஞ்சேரி வரை 5.3 கி.மீ வரையும் நடைபெற்றது.

    இதில் முதல் திட்டப்பணி கடந்த 2020-ம் ஆண்டு முடிந்தது. 2-ம் திட்டப்பணி மார்ச் 2021-ம் ஆண்டும் தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் இந்த பாதையில் சுங்கக்கட்டணத்தை 75 சதவீதமாகக் சுங்ச்சாவடி குறைக்கவில்லை.

    இதனால் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.6.54 கோடி அளவுக்கு அதிகமான சுங்கச் வசூல் செய்து உள்ளது.

    இதேபோல் 1956-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்திற்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விதியில் உள்ளது. ஆனால் பரனூர் சுங்கச்சாவடியி 1954 -ம் ஆண்டு கட்டப்பட்ட பாலத்திற்கும் கூடுதலாக கட்டணம் வசூலித்து இருக்கிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021 வரை பரனூர் சுங்கச்சாடியில் விதிகளை மீறி வாகன ஓட்டிகளிடம் ரூ. 22 கோடி கூடுதல் சுங்கக் கட்டணத்தை வசூலித்து இருப்பது மத்திய தணிக்கை அறிக்கையில் தெரியவந்து உள்ளது.

    இதேபோல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இருபுறங்களிலும் கழிவறை கட்டப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால் 41 சுங்கச்சாவடிகளில் பரனூர், கொடைரோடு உள்ளிட்ட 13 சுங்கச்சாவடிகளில் ஒரு புறத்தில் மட்டும் கழிவறை கட்டப்பட்டு உள்ளது. மேலும் 3 சுங்கச்சாவடிகளில் கழிவறைகள் கட்டப்பட்டு இருந்தாலும் அவை முறையாக பராமரிக்கப்பட வில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×