search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training course"

    போட்டித் தேர்வுக ளுக்கான பயிற்சிவகுப்புகள் நடத்திய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு பயிற்றுநர் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2023-ம் ஆண்டு திட்ட நிரலில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 2222 காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு 7.1.2024 நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் பி.எட் படித்திருக்க வேண்டும். மேலும், டெட் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

    கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 17.11.2023 அன்று முதல் நடைபெற்று வருகிறது.இப்பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு அனுபவமிக்க சிறந்த வல்லுநர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பு எடுக்கும் பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 ஆகும். இப்பயிற்சி வகுப்பிற்கு மாதிரி வினாத்தாட்கள் தயார் செய்து தர வேண்டும்.

    போட்டித் தேர்வுக ளுக்கான பயிற்சிவகுப்புகள் நடத்திய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு பயிற்றுநர் தகுதி பெற்றிருக்க வேண்டும். பயிற்றுநர்கள் நேர்காணலுக்கு அழைக்கும் போது தயார் செய்த பாடக்குறிப்பு, மாதிரி வினா மற்றும் தொடர்புடைய பாடத்தின் உடன் எடுத்து வர வேண்டும். மேலும், 10-15 நிமிடங்கள் வரை தொடர்புடைய பாடத்தில் ஏதேனும் ஒரு தலைப்பிலும் மாதிரி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.மேற்கண்ட நிபந்தனை களுக்குட்பட்டு, விருப்பமும் தகுதியும் உள்ள பயிற்றுநர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுயவிவரகுறிப்பு மற்றும் கல்விசான்று நகல்களுடன் 22.11.2023 மற்றும் 23.11.2023 ஆகிய 2 நாட்களில் அலுவலக நேரத்தில் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எஸ்.எஸ்.எல்.சி. தனி தேர்வருக்கு கல்விதுறை அறிவுறுத்தல்
    • அனைத்து தனித் தேர்வர்களும் வருகிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற கல்வியாண்டுக் கான 10-ம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பிக்க நேரடி தனி தேர்வர்கள், அறிவியல் பாடத்தில் தோல்வியடை ந்தவர்கள், அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்யலாம்.

    அனைத்து தனித் தேர்வர்களும் வருகிற 6-ந் தேதி முதல் 10-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். ஆண்கள் வில்லியனூர் ஐடியல் மேல்நிலைப்பள்ளி யிலும், பெண்கள் புதுவை இமாகுலேட் பள்ளியிலும் பதிவு செய்யலாம். இதற்கான படிவத்தை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சேவை மையங்களில் ஒப்படை த்து அங்கு தரப்படும் ஒப்புகை சீட்டின் எண் மூலம் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

    இதன்பின் மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அந்த மையங்களில் நடத்தப்ப டும் பயிற்சி வகுப்பில் 80 சதவீத வருகை பதிவு உள்ளவர்கள் மட்டுமே பொது தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

    செய்முறை பயிற்சி பெற்றவர்கள் செய்முறை தேர்வு எழுத வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • ஆசிரியர்களுக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பள்ளி தலைமை மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் மகாபாரதி குத்துவிளக்கு ஏற்றிவைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனத்துடன் இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம் என்கிற திட்டத்தினை கடந்த 2022 - 2023 ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

    தமிழக முதல்வர், செப்டம்பர் 16-2022 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டமானது, பள்ளிக்கல்வி துறையின் முழு ஒத்துழை ப்புடன் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்ப ள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு (2022-23) இத்திட்டமானது தமிழ்நாட்டில் 38 மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 4356 மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த ப்பட்டது.

    சுமார் 4.78 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

    இந்த செயல்பாடுகளினால் மாணவர்களிடையே தலைமைத்துவம் மற்றும் பிரச்சனைகளைகையாளுதல், பிரச்சனைகளுக்கு புத்தாக தீர்வு காணுதல் உட்பட 21-ம் நூற்றாண்டு திறன்கள் உருவாக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜ்கமல் மற்றும் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார்.

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
    • தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள், தற்போது நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.

    தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள், தற்போது நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர். குரூப் 4 தேர்வில் 17 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாகியுள்ளனர்.

    மேலும், 2022-ல், சீருடைப்பணியாளர்கள் எஸ்.ஐ., தேர்வில் 5 பேர், போலீஸ் தேர்வில் 17 பேர் என, மொத்தம் 22 பேர் தேர்ச்சி பெற்று, தற்போது பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, டி.என்.பி.எஸ்.சி, குரூப் 1, 2, 4 தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்து வகுப்பை தொடங்கி வைத்தார்.

    இப்பயிற்சி வகுப்பில், மாவட்டம் முழுவதும் இருந்து, 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப் பித்திருந்தனர். முதல் நாளான நேற்று 73 பேர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா கூறியதாவது:

    டி.என்.பி.எஸ்.சி, குரூப் 1, 2, 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தற்போது தொடங்கி உள்ளது. 6 மாதத்துக்கு தொடர்ந்து இப்பயிற்சி வகுப்பு நடைபெறும்.

    இந்த இலவச நேரடி பயிற்சி வகுப்பு, தினமும் காலை 10.30 முதல், மதியம் 1.30 மணி வரை நடக்கும். ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுனர்களைக் கொண்டு இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    வாரம் தோறும், செவ்வாய், வெள்ளிக் கிழமை மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். தினமும், பயிற்சி தாள் வழங்கப்படும். இவற்றை சிறந்த முறையில் பயன்படுத்தி பயிற்சி செய்தால், போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம் என கூறினார். 

    • விருதுநகரில் அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • நல்ல முறையில் பயிற்சி பெற்று வெற்றியடைய வேண்டும் என்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நூலக அலுவலக கூட்ட ரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒருங்கி ணைந்த ஒன்றிய அரசுப் பணிக்கான போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது. இதனை கலெக்டர் ஜெயசீலன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில், இந்த பயிற்சி வகுப்பானது, விருதுநகர் மாவட்ட நூலக அலுவலத்திலும், சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சுமார் 170 போட்டித்தேர்வு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்களை எளிய முறையில் போட்டி தேர்வை எப்படி அனுகுவது, விடா முயற்சி, போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்கான நுணுக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளையும், போட்டி தேர்வு குறித்து அவரது அனுபகங்களுடன் கூடிய ஊக்க உரைகளை வழங்கினர். எனவே தமிழக அரசு வழங்கும் இந்த திட்டத்தினை பயன்படுத்தி, நல்ல முறையில் பயிற்சி பெற்று வெற்றியடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஞானபிரபா, பிரியதர்சினி (தொழில்நெறி வழிகாட்டி), மாவட்ட நூலக அலுவலர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் போட்டி தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.
    • பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் இயங்கி வருகிறது. இதன் வாயிலாக பல்வேறு வகையான போட்டி தேர்வு களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணை யத்தால் வெளியிடப் பட்டுள்ள சார்பு ஆய்வாளர் (Sub-Inspectors of Police (Taluk, Armed Reserve, TSP & Station Officer 2023) பணிக்காலியிட அறிவிக்கை வெளியிடப்பட்டு 743 பணிக்காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 1.7.2023 தேதியில் குறைந்த பட்சம் 20 வயது அதிகபட்சம் பொதுப் போட்டியினருக்கு 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 32 வயது வரையிலும், பட்டியல் மற்றும் பழங்கு டியினர், திருநங்கைகளுக்கு 35 வயது வரையிலும், ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது வரையிலும், முன்னாள் படைவீரர்க ளுக்கு 47 வயது வரையிலும் இருக்க வேண்டும்.

    இந்த தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகட்டணம் ரூ.500 ஆகும்.

    இப்போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

    இதில் கலந்து கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அலுவலக தொலைபேசி எண் 04567-230160 மூலமாகவோ, 78670 80168 என்ற அலைபேசிக்கு வாட்ஸ்-அப் வாயிலாக வோ, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரடியாகவோ தொடர்பு கொண்டு இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போட்டி தேர்வர்களுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
    • தொலைபேசி எண் 04567-230160ல் தொடர்பு கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ''நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் மத்திய அரசு பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளான பணியாளர் தேர்வாணையம் (SSC), ெரயில்வே தேர்வு வாரியம் (RRB), வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (IBPS) உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வெற்றிபெற தேவையான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    மேற்கண்ட மத்திய அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை தமிழகத்தைச் சேர்ந்த போட்டித்தேர்வர்கள் பெருமளவில் பங்கு கொண்டு வெற்றிபெறும் நோக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு 100 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பட்டப்படிப்பு முடித்த 21 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் தங்களது பெயரை ஆன்லைனில் கீழ்கண்ட லிங்கின் வாயிலாக https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX தவறாது பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இது குறித்த முழு விவரங்களை https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண் 04567-230160 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது.
    • விவசாயிகள் நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரில் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது.

    இங்கு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் உள் வளாக பயிற்சி நடைபெற உள்ளது. விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2248524 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

    • போட்டி தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் இயங்கி வருகிறது.

    இத்தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தற்போது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் பணிக்காலியிட அறிவிக்கை வெளியிடப்பட்டு 615 பணிக்காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதற்கான தேர்வுகட்டணம் ரூ.500- ஆகும்.

    இந்த போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக 17.5.2023 முதல் தொடங்கப்பட உள்ளது.

    இதில் கலந்து கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தொலைபேசி எண் 04567-230160 வாயிலாகவும் அல்லது 78670 80168 என்ற அலைபேசிக்கு வாட்ஸ்-அப் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரடியாகவோ தொடர்பு கொண்டு பங்கேற்கலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்

    • புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
    • கிராம கணக்குகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கி எடுத்துரைக்கப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட 116 கிராம உதவியாளர்க ளுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெய சீலன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    தமிழ்நாடு அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் கிராம உதவி யாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

    அவர்களுக்கான அடிப்ப டை பயிற்சி வகுப்பு இன்று தொடங்க ப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பு 30 நாட்களுக்கு நடைபெறும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் 3 நாட்கள் ஒருங்கிணைப்பு பயிற்சியும், 27 நாட்கள் அந்தந்த வட்டாரங்களில் பல்வேறு அலுவலர்கள் மூலமும் பயிற்சி அளிக்கப்படும்.

    இந்த பயிற்சி வகுப்பில் கிராம உதவியாளர்களின் பணிகள், வருவாய்த்துறை யின் கிராம அளவிலான திட்டங்களை செயல் படுத்துதல், கிராம நிர்வாக அலுவலருக்கு உதவி செய்தல், கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு தொ டர்பாக பிரச்சனைகளை ஆரம்ப கால கட்டங்களின் கண்டறிந்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்தல், கிராம கணக்குகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கி எடுத்துரைக்கப்படும்.

    இந்த பயிற்சி வகுப்பினை கிராம உதவியாளர்கள் முழு ஈடுபாட்டுடன் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கிராமங்க ளில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு, அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடைவதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர்(பொது) சிவகுமார், 116 கிராம உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல் முறையாக தேர்வாணையம் இத்தேர்வினை தமிழ் வழியிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது- கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கல்வித் தகுதி10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். மேலும் முதல் முறையாக தேர்வாணையம் இத்தேர்வினை தமிழ் வழியிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காலி யிடங்களுக்கு தேர்வாணைய இணையதளம் வாயிலாக 17.02.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

    இத்தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப தாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 07.02.2023 அன்று தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடத்தப்படும். எனவே இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 9499055908 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தினை இயக்குவதற்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் தெரிந்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
    • வாக்குச்சாவடிக்குச் செல்லக்கூடிய வழியில் உள்ள சாலைகளின் ஆறு, வாய்க்கால் மற்றும் பாலங்கள் உள்ளதா? என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    ஈரோடு

    ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 20 மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள் ஆகியோர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

    தங்கள் மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் பல்வேறு வழிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் விரைந்து வாக்குச்சாவடிகளுக்குச் செல்லக்கூடிய வழிகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

    வாக்குச்சாவடிக்குச் செல்லக்கூடிய வழியில் உள்ள சாலைகளின் ஆறு, வாய்க்கால் மற்றும் பாலங்கள் உள்ளதா? என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் தணிக்கை செய்து வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்தின் நிலை, வாக்குச்சாவடிக்கட்டிடம், தளவாடங்கள், அடிப்படை வசதிகள் (குடிநீர் வசதி, சாய்வுதளவசதி, மின் வசதி, கழிப்பறை வசதி, தொலைபேசி வசதி) மற்றும் பாதுகா ப்பு தொடர்பான வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    பிரச்சினைக்குரிய மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழக்கூடிய வாக்குச்சாவடிகள் இருப்பின் அது குறித்து ஆய்வு செய்து முந்தைய காலத்தில் ஏதாவது சம்பவங்கள் நடந்துள்ளதா என்பது குறித்தும், ஜாதி, இன கலவரங்கள் நடந்துள்ளதா என்பது குறித்தும்,

    தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் நடைபெற்று ள்ளதா என்பது குறித்தும் விபரங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    மண்டல அலுவலர் மற்றும் உதவி மண்டல அலுவலர் ஆகியோர் மின்ன ணு வாக்குப்பதிவு எந்திரத்தை எவ்வாறு இயக்குவது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை

    தங்களது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இணைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் இது குறித்து விரிவான விளம்பரத்தை அந்தப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மூலம் ஏற்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிகளில் பணிபுரிகின்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கத்தக்க வகையில் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முழுமையாக விபரங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    வாக்குப்பதியும் நாளுக்கு முந்தைய நாளில் செய்ய வேண்டியவை தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் உரியஅனைத்து படிவங்கள், கவர்கள், இதரபொருட்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பச்சைநிற முத்திரைத் தாள்கள உலோக முத்திரை அழியாமைக்குப்பிகள் வாக்காளர் பட்டியல்கள், தேவையான அளவு உபரி படிவங்கள், கவர்கள், பொருட்கள் ஆகியவற்றை கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.

    அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று உரிய பொருட்களை கொடுத்த பின்னர் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் வருகை புரிந்து உள்ளார்களா என்பதை சரிபார்த்து கொள்ளவேண்டும்.

    அலுவலர்கள் பணிக்கு வராத நேர்வுகளில் மாற்று ஏற்பாடு உடனே செய்யப்பட வேண்டும். இதற்கு வசதியாக தேவை யான அளவு ரிசர்வ் வாக்குப்பதிவு அலுவலர்களை நீங்கள் கைவசம் வைத்திருப்பது அவசியம்.

    தாலூகா வட்டார தலைமையிடத்தில் இருந்து தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகள் அடங்கிய மண்டல அலுவலர்கள் கட்டாயம் ரிசர்வ் பணியாளர்களை தேவையான அளவு தங்களது வாகனத்தில் அழைத்து செல்ல வேண்டும்.

    தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி களுக்கும் 100 மீட்டர்சுற்று எல்லைக்குள் எவ்வித சின்னங்கள், கட்சி தொடர்பான விளம்பரங்கள் இருக்கக்கூடாது என்பதும், வேட்பாளர்களின் தேர்தல் சாவடிகள் 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் அமைக்கப்பட வேண்டும்.

    மேலும் வாக்குச்சாவடி அமையப்பெற்றுள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் சின்னங்கள், கட்சி தொடர்பான விளம்பரங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினருக்கு உடனே தகவல் தெரிவித்து மேற்படி இனங்களை உடனடியாக அகற்றுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தினை இயக்குவதற்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் தெரிந்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எவ்வாறு இயக்குவதுஎன்பதை அவர்களை செய்து காட்டச் சொல்ல வேண்டும்.

    வாக்குப்பதிவு நாளன்று செய்ய வேண்டியவை காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி அதனை உடனே தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தொலைபேசி மூலமாக தெரிவிக்க வேண்டும்.

    மாதிரி வாக்குப்பதிவு தேர்தல் மின்னணுவாக்குப்பதிவு எந்திரத்தில் ஏஜெண்ட்டுகளுக்கு செய்து காட்டப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    ஏதாவதொரு வாக்குச்சாவடியில் தாமதம் காணப்பட்டால் வாக்குச்சாவடி அலுவலருக்கு உரிய உதவிகள் செய்து, வாக்குப்பதிவினை தாமதம் இன்றி ஆரம்பித்து வைக்கஆவண செய்ய வேண்டும்.

    வாக்குச்சாவடிகளில் இருப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்க ப்பட்ட நபர்களை தவிரவேறு எவரும் வாக்குச்சாவடிகளில் இருப்பார்களே யானால் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

    வாக்குப்பதிவு நாளன்று குறைந்தபட்சம் 3 தடவையாவது ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் பார்வையிட வேண்டும். 2 மணிக்கொரு ஒருமுறை பதிவான வாக்குகளின் சதவீதத்தை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

    வாக்குப்பதிவு முடியற்ற பின்பு பட்டியலில் கண்டமுறைப்படி தேர்தல் பொருட்களை வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடமிருந்து பெற்று, அவருக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பு, வாக்குச்சீட்டுகணக்கு, பேப்பர்சீல் கணக்கு மற்றும் டிக்ளரேசன் ஆகியவற்றை தனியாகப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்ட ல அலுவலர்களுக்கு மின்ன ணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது தொ டர்பான செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரங்கநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன், ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி, மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×