search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு
    X

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு

    • முதல் முறையாக தேர்வாணையம் இத்தேர்வினை தமிழ் வழியிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது- கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கல்வித் தகுதி10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். மேலும் முதல் முறையாக தேர்வாணையம் இத்தேர்வினை தமிழ் வழியிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காலி யிடங்களுக்கு தேர்வாணைய இணையதளம் வாயிலாக 17.02.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

    இத்தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப தாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 07.02.2023 அன்று தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை நடத்தப்படும். எனவே இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது விவரத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 9499055908 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    Next Story
    ×