search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    116 கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பு
    X

    புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    116 கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பு

    • புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
    • கிராம கணக்குகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கி எடுத்துரைக்கப்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டங்கில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட 116 கிராம உதவியாளர்க ளுக்கான அடிப்படை பயிற்சி வகுப்பை கலெக்டர் ஜெய சீலன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    தமிழ்நாடு அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கும் வகையில் கிராம உதவி யாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

    அவர்களுக்கான அடிப்ப டை பயிற்சி வகுப்பு இன்று தொடங்க ப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பு 30 நாட்களுக்கு நடைபெறும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல் 3 நாட்கள் ஒருங்கிணைப்பு பயிற்சியும், 27 நாட்கள் அந்தந்த வட்டாரங்களில் பல்வேறு அலுவலர்கள் மூலமும் பயிற்சி அளிக்கப்படும்.

    இந்த பயிற்சி வகுப்பில் கிராம உதவியாளர்களின் பணிகள், வருவாய்த்துறை யின் கிராம அளவிலான திட்டங்களை செயல் படுத்துதல், கிராம நிர்வாக அலுவலருக்கு உதவி செய்தல், கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு தொ டர்பாக பிரச்சனைகளை ஆரம்ப கால கட்டங்களின் கண்டறிந்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவித்தல், கிராம கணக்குகளை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விளக்கி எடுத்துரைக்கப்படும்.

    இந்த பயிற்சி வகுப்பினை கிராம உதவியாளர்கள் முழு ஈடுபாட்டுடன் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கிராமங்க ளில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு, அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடைவதற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர்(பொது) சிவகுமார், 116 கிராம உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×