search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scythe cut"

    • பஸ்நிறுத்தத்தில் நின்ற பயணிகள் அலறல்
    • இதற்கிடையே சந்துரு, சூலூர் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார்.

     சூலூர்,

    கோவை அருகே கோவை புதூர் அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 28). இவர் இன்று காலை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பிரிவு செல்வ ராஜா மில் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வாலிபர் ஒருவர் அரிவாளுடன் வந்தார். அவர் ஆனந்த்தை ஓட, ஓட அரிவாளால் வெட்டினார். அவரிடம் இருந்து தப்பிக்க ஆனந்த் ஓட்டம் பிடித்தார். இருந்தாலும் தொடர்ந்து விரட்டிச் சென்று ஆனந்த்தை அந்த வாலிபர் வெட்டினார்.

    இதில் ஆனந்த்துக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கழுத்துப்பகுதியில் மற்றொரு வெட்டு விழுந்தது.

    பஸ் நிறுத்தத்தில் பயணிகள் இந்த சம்பவத்தை பார்த்து அலறி அடித்து ஓடினர். சிலர் ஆனந்த்தை வெட்டிய வாலிபரை கண்டித்து அவரை தடுத்தனர். கூட்டம் அதிகமாக திரண்டதால் அந்த வாலிபர் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து சர்வசா தாரணமாக தப்பிச்செ ன்றார்.

    ஆனந்த்தை பார்த்து உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கூறியபடியே அந்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    காயம் அடைந்த ஆனந்த்தை பொதுமக்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

    விசார ணையில் ஆன ந்தை வெட்டியது கோவை ப்புதூரைச் சேர்ந்த சந்துரு என்பது தெரியவந்தது. கள்ளக்காதல் விவகார த்தில் ஆனந்த்தை அந்த நபர் வெட்டிய விவரம் தெரிய வந்தது. இதற்கிடையே சந்துரு, சூலூர் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  

    • மதன்குமார் அரிவாளை எடுத்து சார்லஸ் மரிய ஜான் தலையில் வெட்டினார்.
    • போத்தனூர் போலீசார் மதன்குமாரை கைது செய்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் சாரதா மில் ரோட்டை சேர்ந்தவர் ஜெரால்டு. இவரது மகன் சார்லஸ் மரிய ஜான் (வயது 22). இவர் பீளமேட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் காந்திஜி ரோட்டை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

    இளம்பெண்ணுக்கு ஒரு தங்கை உள்ளார். அவரை அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மதன்குமார் (28) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். இவர் அடிக்கடி பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்தார்.

    இது குறித்து அவர் தனது அக்காவிடம் தெரிவித்தார். அவர் தனது காதலன் சார்லஸ் மரிய ஜானிடம் கூறினார். இதனையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் மதன்குமாரை சந்தித்து எனது காதலியின் தங்கைக்கு உன்னை பிடிக்கவில்லை.

    எனவே அவள் பின்னால் சுற்றுவதை நிறுத்தி கொள்ளவும் என கூறினார்.சம்பவத்தன்று சார்லஸ் மரிய ஜான் தனது மோட்டார் சைக்கிளில் சுந்தராபுரம் ஆசிரியர் காலனி வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அரிவாளுடன் அங்கு நின்று கொண்டு இருந்த மதன்குமார் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார். பின்னர் நீ மட்டும் அக்காவை காதலிக்கலாம், நான் அவரது தங்கையை காதலிக்க கூடாதா என கூறி தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த மதன்குமார் அரிவாளை எடுத்து சார்லஸ் மரிய ஜான் தலையில் வெட்டினார். பின்னர் கையில் குத்தி கிழித்தார்.

    பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் தகராறில் ஐ.டி. ஊழியரை வெட்டிய மதன்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • திருமணமான பெண் ஒருவருக்கும், சுரேந்தருக்கும் பழக்கம் இருந்துள்ளது
    • சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சதீஷ் சேர்க்கப்பட்டார்.

    நெல்லை:

    பாளை படப்பக்குறிச்சியை சேர்ந்தவர் சுரேந்தர்(வயது 30). நெல்லை ராமையன்பட்டி வட்டக்கிணறு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(28). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். தினமும் ஒன்றாக கூலி வேலைக்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் பாளை மூளிக்குளம் பகுதியை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும், சுரேந்தருக்கும் கடந்த 8 வருடங்களாக பழக்கம் இருந்துள்ளது. சமீபத்தில் சுரேந்தர் வேலைக்காக சென்னைக்கு சென்றுள்ளார். அதை பயன்படுத்தி அந்த பெண்ணுக்கு சதீஷ் பாலியல் தொல்லை கொடுத்த தாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று சென்னையில் இருந்து வந்த சுரேந்தரிடம், அந்த பெண் நடந்த சம்பவங்களை கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் சதீசை மூளிக்குளம் பகுதிக்கு அழைத்துள்ளார்.

    அங்கு வந்த சதீசை அரிவாளால் சுரேந்தர் வெட்டி உள்ளார். இதில் காயம் அடைந்த சதீஷ் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேந்தரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் கவிபாரதி புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரத்தை சேர்ந்தவர் கவிபாரதி(28). சம்பவத்தன்று இவர் ஆமத்தூரில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். பின்னர் வெளியே வந்தபோது அங்கு நின்றிருந்த 2 பேர் அவருடன் தகராறு செய்தனர். இதில் இருதரப்புக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் கவிபாரதியை அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் கவிபாரதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிய 5 பேரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை நெல்லையப்ப புரத்தைச் சேர்ந்தவர் அருள் (41). இவர் தனக்கன்குளம் இறைச்சி கடையில் இருந்தார். அங்கு வந்த 5 பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.

    இது தொடர்பாக திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் அருளிடம் இதே பகுதியில் வசிக்கும் மாணிக்கம் என்பவர் செல்போனை வாங்கி யுள்ளார். இதனை அவர் திருப்பி தரவில்லை.

    அருள் செல்போனை கேட்டு நெருக்கடி கொடுத்தார். ஆத்திரமடைந்த மாணிக்கம், கூட்டாளிகளான மணிமாறன், சதீஷ், அன்புராஜூடன் சேர்ந்து அருளை தாக்கியது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமைறைவான கீழக்குயில்குடி தெற்கு தெரு முருகேசன் மகன் அன்புராஜ் (19), சிவபாரதி என்ற கலியா உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

    அனுப்பானடி பொண்ணு பிள்ளை தோப்பு, மச்சக்காளை மகன் ஆனந்தபாண்டி (21). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது.

    சம்பவத்தன்று காலை ஆனந்த பாண்டி அனுப்பானடி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது அவரை 5 பேர் கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது.

    இது குறித்த புகாரின்பேரில் தெப்பக்கு ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதே பகுதியில் வசிக்கும் கலை யரசன், கூட்டாளிகளான மதுசூதனன், தனசேகரன், வேல்பிரதாப், ஐராவத நல்லூர், பாபு நகர், வேலவன் தெரு பூமிநாதன் ஆகிய 5 பேரை தேடி வருகின்றனர்.

    • முத்துக்குமார் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
    • இசக்கிபாண்டி, பரமசிவன் ஆகியோர் முத்துக்குமாரை அரிவாளால் வெட்டினர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மலையடி இந்திரா நகரை சேர்ந்தவர் செல்லபாண்டி மகன் முத்துக்குமார் (வயது 33). இவர் நெல்லையில் உள்ள தனியார் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    முன்விரோதம்

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மலையடியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது. அப்போது கீழச்சடையமான்குளத்தை சேர்ந்த பரமசிவன் என்ற சிவாவும்(30), அவரது நண்பரான மேலகாடு வெட்டியை சேர்ந்த இசக்கிபாண்டியும் (32) விசில் அடித்து தகராறு செய்தனர். இதை முத்துக்குமார் தட்டிக் கேட்டதால் அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முத்துக்குமாரின் சகோதரி நதியா மற்றும் அண்ணன் மகள் உமாபிரியா ஆகியோர் காடுவெட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பரமசிவன், இசக்கி பாண்டி ஆகியோர் அவர்கள் மீது மோதுவது போல் வந்துள்ளனர்.

    அரிவாள் வெட்டு

    இதையறிந்த நதியா, உமாபிரியாவின் உறவினர்கள் சுபாஷ், செல்வம் ஆகியோர் இசக்கிபாண்டி வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டனர். அப்போது முத்துக்குமாரும் சென்றார். இதையடுத்து இசக்கிபாண்டி, பரமசிவன் ஆகியோர் முத்துக்குமாரை அவதூறாக பேசி, அரிவாளால் வெட்டினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இதனால் காயமடைந்த அவர் களக்காடு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொ டர்பாக பரமசிவன், இசக்கிப்பாண்டியை தேடி வருகின்றனர்.

    • ஜெபஸ்டீபன் கடைக்கு கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுந்தரபாண்டி என்பவர் பழம் வாங்கி சென்றார்.
    • அப்போது ஜெபஸ்டீபனுக்கும், சுந்தரபாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் ஜெப ஸ்டீபன் (வயது38). இவர் 2-ம் கேட் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருடன் அவரது உறவி னரான கன்னிமுத்து (59) என்பவரும் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இவரது கடைக்கு கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுந்தரபாண்டி என்பவர் பழம் வாங்கி சென்றார். பின்னர் திரும்பி வந்து வாங்கி பழங்கள் சரியில்லை என கூறியுள்ளார். அப்போது ஜெப ஸ்டீபனு க்கும், சுந்தரபாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த சுந்தரபாண்டி அரிவாளால் வெட்ட முயன்றார். இதனைப்பார்த்த கன்னிமுத்து அதனை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • ஆலங்குடி அருகே உறவினர்களுக்குள் தகராறில் அரிவாள் வெட்டில் துண்டான விரல்கள்
    • ஐஸ்பெட்டியில் மதுரைக்கு அனுப்பப்பட்டது

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதியை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் ரெங்கதுரை (வயது 45). இவரின் உறவினரான ரெங்கசாமி மகன் கருப்பையா (வயது 25) என்பவரும் அருகருகே வசித்து வருகின்றனர். கருப்பையாவுக்கும், ரெங்க துரை தந்தை ரெங்சாமிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதுஇதனை ரெங்கதுரை தட்டி கேட்டதால் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானநிலையில் கருப்பையா அரிவாளை எடுத்து வந்து கருப்பையாவை சரமாரியாக வெட்டி உள்ளார்.

    இதில் ரெங்கதுரைக்கு வலது கையில் இரண்டு விரல்கள் துண்டாகியுள்ளது. மேலும் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மயங்கிய நிலையல் கிடந்த ரெங்கதுரையை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.அங்கு ரெங்கதுரைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் துண்டான விரல்களை தனி ஐஸ்பெட்டியில் அடைத்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அரிவாளால் வெட்டிய கருப்பையாவை ஆலங்குடி போலீசார் கைது செய்து வழக்கு பதிந்து, ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்று ம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


    • வெங்கடேஷ் அவரது மனைவியை அழைத்து வர புதிய பஸ்நிலையம் அருகே காத்திருந்தார்.
    • அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கும், இங்கும் சுற்றி கொண்டிந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கூட்டாம் புளி வேதக்கோவில் தெரு வை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது44). பம்ப் ஆப்பரேட்டர். இவரது மனைவி ஜெர்லின் கிருத்திகா. இவர் வெளியூருக்கு சென்று விட்டு நேற்று மாலை ஊர் திரும்புவதாக கூறியிருந்தார். அவரை அழைத்து வர வெங்கடேஷ் புதிய பஸ்நிலையம் அருகே காத்திருந்தார்.

    அரிவாள் வெட்டு

    அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கும், இங்கும் சுற்றி கொண்டிந்தனர். இதனை வெங்கடேஷ் தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்கி டையே வாக்குவாதம் ஏறபட்டது. இதில் ஆத்திரமடை ந்தவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பலத்த காயமடைந்த வெங்கடேஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    2 பேர் கைது

    இது குறித்து புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி திரு.வி.க. நகரை சேர்ந்த காளியப்பன் (22) மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த மாதேஷ்வரன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் மீது புதுக்கோட்டை, தென்பாகம் மற்றும் பாளை போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார்.
    • செந்தில் தூக்குப்போட்ட நிலையில் தோட்டத்தில் பிணமாக தொங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 40). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

    மனைவி பிரிந்து சென்றார்

    வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் கிருபாகரன் (40). இவர்கள் 2 பேரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகினர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக செந்திலை பிரிந்து அவரது மனைவி குமரி மாவட்டம் பால் குளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    அரிவாள்வெட்டு

    இதற்கு கிருபாகரன் தான் காரணம் என்று நினைத்து செந்தில் ஆத்திரத்தில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அவரை ஓட ஓட அரிவாளால் வெட்டினர். இந்த அரிவாள் வெட்டு தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வைரலாக பரவின.

    இதில் படுகாயம் அடைந்த கிருபாகரன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்கொலை

    இந்நிலையில் நேற்று இரவு செந்திலை திடீரென காணவில்லை. அவரது உறவினர்கள் அவரை தேடிப் பார்த்தபோது அங்குள்ள தோட்டத்தில் செந்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

    சம்பவ இடத்திற்கு கூடங்குளம் போலீசார் விரைந்து சென்று செந்தில் உடலை மீட்டு நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் செந்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.இது தொடர்பாக போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • சம்பவத்தன்று சுப்பிரமணியன் மலையடிபுதூர் அய்யா கோவில் தெருவில் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
    • ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், அரிவாளால் சுப்பிரமணியனை சரமாரியாக வெட்டினார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது62). விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தளவாய் பாண்டியன் மகன் வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக இடப்பிரச்சினை இருந்து வருகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று சுப்பிரமணியன் மலையடிபுதூர் அய்யா கோவில் தெருவில் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கடேஷ் அவரை வழிமறித்து மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கு மிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், அரிவாளால் சுப்பிரமணியனை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு கழுத்து, உதடு, இடது கை மணிக்கட்டு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது.

    இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை, உறவினர்கள் மீட்டு, களக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அவரது மருமகன் முருகன் (34) திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, திருக்குறுங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சுப்பு ராம கிருஷ்ணன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வெங்கடேசை தேடி வருகின்றனர்.

    • சரவணகுமார் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார்.
    • 20 பேர் கொண்ட கும்பல் வெறிசெயலில் ஈடுபட்டது.

    கணபதி,

    கோவை சரவணம்பட்டி சிவனந்தாபுரம் ஜனதா நகரை சேர்ந்தவர் மணிகண்டன்.

    இவரது மகன் சரவணகுமார்(வயது23). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார்.

    நேற்று இரவு அவரது வீட்டில் உறவினர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டி ருந்தனர். இரவு 11 மணியளவில் வீட்டிற்குள் 20 பேர் கொண்ட கும்பல் அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.

    அவர்கள் சரவணகுமாரிடம் காமராஜ பு ரத்தை சேர்ந்த ஒரு வா லிபர் குறித்து கேட்டனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை ஆயுதங்களால் அடித்து உடைத்து சூறையாடினர்.

    பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி கல்லூரி மாணவர் சரவ ணகுமாரை அரிவாளால் வெட்டினர்.

    இதில் அவருக்கு தலை மற்றும் நெற்றியில் வெட்டு காயம் விழுந்தது. இதனை பார்த்து தடுக்க முயன்ற அவரது மாமா பாலசுப்ரமணியத்தையும் அரிவாளால் வெட்டினர்.

    இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. பின்னர் அந்த கும்பல் அவர்களை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதையடுத்து உறவினர்கள் பலத்த காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×