என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாலிபரை ஓட, ஓட விரட்டி வெட்டிய நபர்
- பஸ்நிறுத்தத்தில் நின்ற பயணிகள் அலறல்
- இதற்கிடையே சந்துரு, சூலூர் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார்.
சூலூர்,
கோவை அருகே கோவை புதூர் அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (வயது 28). இவர் இன்று காலை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பிரிவு செல்வ ராஜா மில் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வாலிபர் ஒருவர் அரிவாளுடன் வந்தார். அவர் ஆனந்த்தை ஓட, ஓட அரிவாளால் வெட்டினார். அவரிடம் இருந்து தப்பிக்க ஆனந்த் ஓட்டம் பிடித்தார். இருந்தாலும் தொடர்ந்து விரட்டிச் சென்று ஆனந்த்தை அந்த வாலிபர் வெட்டினார்.
இதில் ஆனந்த்துக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கழுத்துப்பகுதியில் மற்றொரு வெட்டு விழுந்தது.
பஸ் நிறுத்தத்தில் பயணிகள் இந்த சம்பவத்தை பார்த்து அலறி அடித்து ஓடினர். சிலர் ஆனந்த்தை வெட்டிய வாலிபரை கண்டித்து அவரை தடுத்தனர். கூட்டம் அதிகமாக திரண்டதால் அந்த வாலிபர் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து சர்வசா தாரணமாக தப்பிச்செ ன்றார்.
ஆனந்த்தை பார்த்து உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கூறியபடியே அந்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
காயம் அடைந்த ஆனந்த்தை பொதுமக்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.
விசார ணையில் ஆன ந்தை வெட்டியது கோவை ப்புதூரைச் சேர்ந்த சந்துரு என்பது தெரியவந்தது. கள்ளக்காதல் விவகார த்தில் ஆனந்த்தை அந்த நபர் வெட்டிய விவரம் தெரிய வந்தது. இதற்கிடையே சந்துரு, சூலூர் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்