search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
    X

    தூத்துக்குடியில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

    • ஜெபஸ்டீபன் கடைக்கு கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுந்தரபாண்டி என்பவர் பழம் வாங்கி சென்றார்.
    • அப்போது ஜெபஸ்டீபனுக்கும், சுந்தரபாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கால்டுவெல் காலனியை சேர்ந்தவர் ஜெப ஸ்டீபன் (வயது38). இவர் 2-ம் கேட் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருடன் அவரது உறவி னரான கன்னிமுத்து (59) என்பவரும் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இவரது கடைக்கு கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சுந்தரபாண்டி என்பவர் பழம் வாங்கி சென்றார். பின்னர் திரும்பி வந்து வாங்கி பழங்கள் சரியில்லை என கூறியுள்ளார். அப்போது ஜெப ஸ்டீபனு க்கும், சுந்தரபாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த சுந்தரபாண்டி அரிவாளால் வெட்ட முயன்றார். இதனைப்பார்த்த கன்னிமுத்து அதனை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×