search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scythe cut"

    • நேற்று பெருமாள் அங்குள்ள ரைஸ்மில் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சிறுவன் அவரை அரிவாளால் வெட்டினார்.
    • இதில் காயமடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    களக்காடு:

    நாங்குநேரி சந்திகிணறு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது37). இவர் லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 1 வாரத்திற்கு முன்பு நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பெருமாளிடம் லோடு ஏற்றி செல்ல ஆட்டோவை கொண்டு வருமாறு கூறினார். அதற்கு பெருமாள் சவாரி உள்ளதால் வர முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் நேற்று பெருமாள் அங்குள்ள ரைஸ்மில் அருகே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சிறுவன் அவரை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிறுவனை கைது செய்தனர்.

    • இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து 5 பேர் கொண்ட கும்பல், இதயத்துல்லா உசேனை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர்.
    • இந்நிலையில் காயம் அடைந்த இதயத்துல்லா உசேனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஏரல் சேதுவாய்க்காலை சேர்ந்தவர் இதயத்துல்லா உசேன் (வயது 51).

    லாரி டிரைவரான இவர் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே 4-ம் கேட்டு அருகே மீளவிட்டான் சாலையில் உள்ள லாரி செட்டில் இவருடைய லாரியை நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து 5 பேர் கொண்ட கும்பல், இதயத்துல்லா உசேனை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் அந்த கும்பல் இதயத்துல்லா உசேனை அரிவாளால் வெட்டினர்.

    தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ. 4 ஆயிரம் பணம், செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இந்நிலையில் காயம் அடைந்த இதயத்துல்லா உசேனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட அந்த கும்பலை வலைவீசி தேடி வருகிறார்.

    • அஜித் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு வேலை முடிந்து டி.சவரியார்புரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வரும் போது, அவரை வழி மறித்த மர்ம நபர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
    • காயம்அடைந்த அஜித் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் டி.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 30). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு வேலை முடிந்து டி.சவரியார்புரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வரும் போது, அவரை வழி மறித்த மர்ம நபர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். அஜித்திடம் பணம் இல்லாததால் அவரது செல்போனை பறித்துக்கொண்டு அஜித்தின் முதுகில் அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம நபர் தப்பி ஓடினார். காயம்அடைந்த அஜித் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இசக்கியப்பனுக்கும்,முருகனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
    • காயமடைந்த இசக்கியப்பன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் இசக்கியப்பன் (39). விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் முருகனுக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், இசக்கியப்பனை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த இசக்கியப்பன் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, முருகனை தேடி வருகின்றனர்.

    • மார்சலும், விகுபாயும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    களக்காடு:

    வள்ளியூர் அருகே உள்ள மேலசண்முகபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வின் மகன் மார்சல் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவரும், அதே ஊரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் விகுபாய் (25) என்பவரும் ஏர்வாடி அருகே உள்ள ஆவரந்தலையில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்றனர்.

    அப்போது இவர்களுக்கும், பொத்தையடியை பகுதியை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மார்சலும், விகுபாயும் மோட்டார் சைக்கிளில் ராஜபுதூர்-வள்ளியூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அங்குள்ள சாஸ்தா கோவில் ஆர்ச் அருகே சென்ற போது, பொத்தை யடியை சேர்ந்த முத்துக்கு மார் மகன் வைகுண்டராஜா, பெருமாள் மகன் மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து மார்சலையும், விகுபாயையும் வழிமறித்து, அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினர்.

    இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இது தொடர்பாக வைகுண்ட ராஜா, மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.

    • கோவில் விழாவில் மோதலில் வாலிபருக்கு அரிவாளால் தாக்கியுள்ளனர்
    • போலீசார் தலைமறைவான ராஜேஷை தேடி வருகின்றனர்

    திருச்சி,

    திருச்சி தாயனூர் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் பக்தர்களுக்கு இடையூறாக நடனம் ஆடினர். அப்போது தாயனூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (வயது 35) அந்த வாலிபர்களை தட்டி கேட்டார். இதில் நடனமாடிய தாயனூர் மேலத்தெரு செல்வம் மகன் விக்னேஷ் (20) என்பவருடன் மூர்த்திக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் தனது அண்ணன் லோகேஷ், தம்பி ராஜேஷ் ஆகியவருடன் சேர்ந்து மூர்த்தியை அரிவாளால் வெட்டினர்.

    இதில் அவரது தலை மற்றும் முகத்தில் வெட்டு காயம் விழுந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் விக்னேஷ், லோகேஷ் ஆகிய இருவரையும் சோமரசம்பேட்டை போலீசார் கைது செய்தனர். போலீசார் தலைமறைவான ராஜேஷை தேடி வருகின்றனர். கோவில் விழாவில் ஏற்பட்ட மோதலில் வாலிபரை கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நட்பை துண்டித்ததால் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி விஜயலட்சுமி காலனியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது26). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்ட பெருமாள். இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையால் மணிகண்ட பெருமாளின் நட்பை மணிகண்டன் துண்டித்து கொண்டார். மணிகண்டபெருமாள் பலமுறை பேச முயன்றும் மணிகண்டன் அதை தவிர்த்து விட்டார். இதுகுறித்து மணிகண்டபெருமாள் அவரது சகோதரர் பாண்டியிடம் தெரிவித்தார். அவர்கள் இருவரும் மணிகண்டனை சந்திப்பதற்காக வந்தனர். அப்போது மணிகண்ட பெருமாளிடம் ஏன் பேசுவதில்லை என மணிகண்டனிடம் பாண்டி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த பாண்டி மற்றும் மணிகண்டபெருமாள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மணிகண்டனை வெட்டினர். இதில் அவருக்கு உச்சந்தலையில் காயம் ஏற்பட்டது. அவரது கூச்சல் கேட்டு அருகில் இருந்தவர்கள் திரண்டதால் மணிகண்டபெருமாளும், பாண்டியும் தப்பி சென்றனர். மணிகண்டன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோழவந்தான் அருகே தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இதுகுறித்த புகாரின்பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்லம் புதுப்பட்டியை சேர்ந்தவர் முத்து. இவர் மனைவி உமாதேவி, மகன் செல்லப்பா ண்டியுடன் (27) வசித்து வந்தார். திருமணமாகாத இவர் பெயிண்டராக வேலை பார்த்தார். மதுபோதையில் தாய் உமாதேவியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது இதே ஊரை சேர்ந்த செந்தில்(50) தட்டிகேட்டார். இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில் செல்லப்பாண்டி மற்றும் உமாதேவியை அரிவாளால் வெட்டினார். காயமடைந்த இருவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவுசெய்து செந்திலை கைது செய்தனர்.

    • சிறுவன்- வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • வெட்டு விழுந்து விரல்கள் துண்டானது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் வீரவேல். குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி புவனேசுவரி மகன் லிவின்ஷாவுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். சம்பவத்தன்று அங்கு வந்த வீரவேல் மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த வீரவேல் அரிவாளால் மனைவியை வெட்ட வந்தார். அப்போது அங்கிருந்து மகன் லிவின்ஷா, புவனேசுவரியின் சகோதரர் ஆகியோர் தடுத்தனர். இதில் 2 பேருக்கும் வெட்டு விழுந்து விரல்கள் துண்டானது. இது தொடர்பாக பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரவேலை தேடி வருகின்றனர்.

    • உத்தரபிரேதச மாநிலம், அசோஹா உன்னா மாவட்டம், குசாலிகெராவை சேர்ந்தவர் விஜய் ஷியாம் மகன் நீரஜ் (வயது26).
    • இவர் ஏர்வாடி அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்து குல்பி ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார்.

    களக்காடு:

    உத்தரபிரேதச மாநிலம், அசோஹா உன்னா மாவட்டம், குசாலிகெராவை சேர்ந்தவர் விஜய் ஷியாம் மகன் நீரஜ் (வயது26).

    இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏர்வாடி அருகே உள்ள பெரிய நாயகிபுரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து குல்பி ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள தெரு நல்லியில் குல்பி ஐஸ் வைக்கும் பாத்திரத்தை கழுவினார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செந்தில்வேல் (50) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த செந்தில்வேல், நீரஜை ஆபாசமாக பேசி, தலையில் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த நீரஜை அக்கம், பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செந்தில்வேலை கைது செய்தனர்.

    • சுப்பிரமணி நெல்லை சந்திப்பு பகுதியில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்தார்.
    • காயம் அடைந்த சுப்பிரமணியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது21), தனியார் பஸ் கண்டக்டர். சுத்தமல்லி மேலத்தெருவை சேர்ந்தவர் தாமரை கண்ணன் என்ற மதன் (27). இவரும் தனியார் பஸ் கண்டக்டராக உள்ளார். இவர்கள் இருவரு க்கும் இடையே பயணிகளை ஏற்றுவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று சுப்பிரமணி நெல்லை சந்திப்பு பகுதியில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தாமரை கண்ணன் மற்றும் அவரது நண்பரான நம்பிராஜன் என்ற சுந்தர் ஆகிய 2 பேர் சுப்பிரமணியை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினர்.

    சத்தம் கேட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தலைமை காவலர் முருகன் ஓடி வந்தார். உடனே தாமரை கண்ணன், நம்பிராஜன் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த சுப்பிரமணியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் தாமரைக்கண்ணன், நம்பிராஜன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    பட்டுக்கோட்டை அருகே தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த அணைக்காடு தெற்கு தெருவை  சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50). விவசாயக் கூலித் தொழிலாளி.இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது.

    இந்நிலையில் பட்டுக்கோட்டை அடுத்த செட்டியக்காடு அருகில் உள்ள சாலமன் தோப்பு பகுதியில் வசித்து வரும் மல்லிகா என்பவருடன் செல்வராஜீக்கு பழக்கம் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் செல்வராஜ் கூலி வேலை செய்த பணத்தை கேட்பதற்காக அப்பகுதியில் உள்ள சாலமன் என்பவர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் அவருடைய வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
     
    அப்போது அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் மைக்கேல் துரையரசன்ஆகியோர், மல்லிகா குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் வாய் தகராறு ஏற்பட்டதில் பாஸ்கர், மைக்கேல் துரையரசன் ஆகியோர்  ஆத்திரம் அடைந்து செல்வராஜை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தினர்.

    இந்த தாக்குதலில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து செல்வராஜ் மகன் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மைக்கேல் துரையரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாஸ்கரை தேடி வருகின்றனர்.
    ×