search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scythe cut"

    • பால்துரையின் கோழி ஆனந்த் என்பவரது வீட்டில் மேய்ந்தது.
    • காயம் அடைந்த பொன்செல்வி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள புதூர் ஆற்றாங்கரை தெற்கு தெருவை சேர்ந்தவர் பால்துரை. சம்பவத்தன்று இவரது கோழி பக்கத்து வீடான ஆனந்த் (40) என்பவரது வீட்டில் மேய்ந்தது. இதையடுத்து கோழி மீது ஆனந்த் கல்லை வீசினார். இதைப்பார்த்த பால்துரையின் மகள் பொன்செல்வி (28) தட்டிக் கேட்டார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆனந்த், பொன்செல்வியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த பொன்செல்வி நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆனந்தை கைது செய்தனர்.

    • சங்கர் குரு (22). இவரது நண்பர் பொன்னம் மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (27). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சன்னியாசிகுண்டு பகுதிக்கு சென்றனர்.
    • 5 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சங்கர்குரு, பிரகாஷ் ஆகியோரை தலையில் வெட்டினர்.

    சேலம்:

    சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன் சங்கர் குரு (22). இவரது நண்பர் பொன்னம் மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (27). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சன்னியாசிகுண்டு பகுதிக்கு சென்றனர். அங்கு மது குடித்து விட்டு நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 5 பேர் கும்பலுக்கும், சங்கர்குரு, பிரகாஷ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம்அடைந்த 5 பேர் கும்பல் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சங்கர்குரு, பிரகாஷ் ஆகியோரை தலையில் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர்கள் 2 பேரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். இதையடுத்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.

    சிகிச்சை

    பின்னர் இது குறித்து பொதுமக்கள் கிச்சிப்பா ளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அரிவாள் வெட்டில் காயம்அடைந்த 2 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெட்டி விட்டு தப்பி ஓடிய கும்பலை தேடி வருகி றார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • முத்துராஜ் அதே ஊரை சேர்ந்த பேச்சிமுத்து என்பவருக்கு 2 மாதத்திற்கு முன்பு கடனாக ரூ. 5 ஆயிரம் கொடுத்துள்ளார்.
    • கடந்த 4-ந்தேதி கணேசன் வேலை செய்யும் ஏரலில் உள்ள கடையில் வைத்து பணத்தை கேட்டுள்ளார். அதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தெற்கு ஆத்தூர் நரசன்விளையை சேர்ந்த ராமசாமி மகன் முத்துராஜ் (வயது28). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர்.

    ரூ. 5 ஆயிரம் கடன்

    இவர் அதே ஊரை சேர்ந்த கணேசன் மகன் பேச்சிமுத்து (25) என்பவருக்கு 2 மாதத்திற்கு முன்பு கடனாக ரூ. 5 ஆயிரம் கொடுத்துள்ளார். அதனை பலமுறை திருப்பி கேட்டும் அவர் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த 4-ந்தேதி கணேசன் வேலை செய்யும் ஏரலில் உள்ள கடையில் வைத்து பணத்தை கேட்டுள்ளார். அதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் இரவு முத்துராஜ் நரசன்விளை அம்மன் கோவில் அருகே வந்த போது அங்கு வந்த பேச்சிமுத்து, அவரது தம்பி இசக்கி ராஜா ஆகியோர் பணம் கேட்டு வேலை செய்யும் கடைக்கு எப்படி வரலாம் என தகராறு செய்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    அரிவாள் வெட்டு

    இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பேச்சிமுத்து அரிவாளை எடுத்து முத்துராஜை வெட்டிவிட்டு சென்றுவிட்டார். காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மில்லில் பரமத்திவேலூர் அருகே வடுகபாளையத்தை சேர்ந்த ராஜேந்தி ரன் கடந்த 5 ஆண்டாக வாடிக்கையாளராக உள்ளார்.
    • ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பிரேம்குமாரின் தலையில் அரிவாளால் வெட்டினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பாப்பிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (26). இவர் புல்லாகவுண்டம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் ஆயில் மில்லில் மேலாளராக உள்ளார். இந்த மில்லில் பரமத்திவேலூர் அருகே வடுகபாளையத்தை சேர்ந்த ராஜேந்தி ரன் கடந்த 5 ஆண்டாக வாடிக்கையாளராக உள்ளார். இதனால் மில்லில் வரவு, செலவு கணக்கு வைத்திருந்தார்.

    இந்நிலையில் ராஜேந்திரன் பாக்கி கணக்கில் ரூ.12 ஆயிரம் கடனாக எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து அறிந்த ராஜேந்திரன் ஆயில் மில்லுக்கு வந்து, தகாத வார்த்தைகளால் மேலாளர் பிரேம்குமாரை திட்டி உள்ளார்.

    அரிவாள் வெட்டு

    இந்த நிலையில் பணி முடித்துவிட்டு பிரேம்குமார் ராஜேந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பிரேம்குமாரின் தலையில் அரிவாளால் வெட்டினார்.

    இதில் பலத்த காயமடைந்த பிரேம்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து பிரேம்குமார் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீடு புகுந்து ஒரு கும்பல் சின்னத்துரையை அரிவாளால் வெட்டியது.
    • சின்னத்துரையின் உறவினர் கிருஷ்ணன் என்பவர் அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

    களக்காடு:

    நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி- அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னதுரை (வயது 17). இவர் வள்ளியூர் கண்கார்டியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், அதே பள்ளியில் படித்த நாங்குநேரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே சாதி ரீதியான மோதல் ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    அரிவாள் வெட்டு

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு வீடு புகுந்து ஒரு கும்பல் சின்னத்துரையை அரிவாளால் வெட்டியது. அப்போது அதை தடுக்க சென்ற அவரது தங்கை 10-ம் வகுப்பு மாணவியான சந்திரா செல்விக்கும் கையில் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனால் அதிர்ச்சியில் சின்னத்துரையின் உறவினர் கிருஷ்ணன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் நேற்று நாங்குநேரியில் நடந்தது. அப்போது போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கிருஷ்ணனின் உடலை சாலையில் வைத்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ தலைமையில் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என உறுதி அளித்தனர். அதனை ஏற்று கிருஷ்ணனின் உடல் அங்குள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

    6 பேர் கைது

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 17 வயதுடைய பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

    • செல்வகுமார், தங்கபாண்டி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் முத்து வீட்டின் வழியாக சென்றனர்.
    • அப்போது முத்து வீட்டு முன் படுத்திருந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் நம்பி மகன் முத்து (வயது 27). பெயிண்டராக உள்ளார்.

    சம்பவத்தன்று மறுகால்குறிச்சியை சேர்ந்த ஜீவா மகன் செல்வகுமார் என்ற சைனா செல்வகுமார் (26), பெரும்பத்தை சேர்ந்த சித்திரைவேல் மகன் தங்கபாண்டி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் முத்து வீட்டின் வழியாக சென்றனர். அப்போது முத்து வீட்டு முன் படுத்திருந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.

    அப்போது செல்வகுமார், தங்கபாண்டியை பார்த்து நாய் குரைத்தது.

    இதில் முத்துவிற்கும், செல்வகுமார், தங்கபாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வகுமார், தங்கபாண்டி ஆகியோர் சேர்ந்து முத்துவை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினர்.

    இதனால் காயமடைந்த முத்து நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி செல்வ குமார், தங்கபாண்டியை தேடி வருகின்றனர்.

    • தோட்டத்தின் கதவை சுடலை திறந்ததால் கண்ணனின் நாய் ஒடி விட்டதாக கூறப்படுகிறது.
    • நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே வானுமாமலை வந்து கொண்டிருந்த போது, கண்ணன், அவரை அரிவாளால் வெட்டினார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள தம்புபுரத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் வானுமாமலை (வயது 62). விவசாயி. கடந்த 27-ந் தேதி இவரது குடும்ப கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்காக வானுமாமலையின் தம்பி ராமையா மகன் சுடலை, சின்னத்துரை மகன் செல்வம் ஆகியோர் பூசாரியை அழைப்பதற்காக அதே ஊரை சேர்ந்த நாராயணன் மகன் கண்ணன் என்ற கபாலி கண்ணனுக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றனர்.

    அப்போது தோட்டத்தின் கதவை சுடலை திறந்ததால் கண்ணனின் நாய் ஒடி விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வானுமா மலைக்கும், கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வானுமாமலை நாங்குநேரி தாலுகா அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்த போது, கண்ணன், அவரை தாக்கி, அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கண்ணனை தேடி வருகின்றனர்.

    • தூத்துக்குடி- திருச்செந்தூர் மெயின்ரோடு பகுதியில் உள்ள கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு மதுபோதையில் வந்த மர்ம நபர்கள் கிங்ஸ்வின்னிடம் தகராறு செய்து அவதூறாக பேசி அவரை அரிவாளால் தாக்கினர்.
    • உடனே அவரை வெட்டிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியை சேர்ந்தவர் கிங்ஸ்வின். (வயது 30). தொழிலாளி.

    மர்ம நபர்கள்

    இவர் தூத்துக்குடி- திருச்செந்தூர் மெயின்ரோடு பகுதியில் உள்ள கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு மதுபோதையில் வந்த மர்ம நபர்கள் கிங்ஸ்வின்னிடம் தகராறு செய்து அவதூறாக பேசி அவரை அரிவாளால் தாக்கினர். இதில் அவருக்கு கையில் வெட்டுபட்டு வலியால் அலறினார். உடனே அவரை வெட்டிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    வழக்குப்பதிவு

    இது குறித்து கிங்ஸ்வின் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாதபாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்ட னர்.

    கொலை மிரட்டல்

    இதில் தூத்துக்குடி அழகேசபுரம் சோலையப்பன் என்ற அபினாஷ் (19) மற்றும் தூத்துக்குடி சத்யாநகரை சேர்ந்த சூரியபிரகாஷ் (20) ஆகிய இருவரும் கிங்ஸ்வின்னிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • தலைமறைவான மூன்று பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ஆண்டத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தி–யப்பட்ட மறவர் பொது சபை உள்ளது. இந்த பொது சபையில் கோவிலின் புதிதாக புணரமைக்கப்பட்ட கட்டிடம் மற்றும் கும்பாபி–ஷேகம் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடை–பெற்றது.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜவேல், பாண்டியன் என்ற சிபிராஜ் பாண்டி, தங்கப்பாண்டி ஆகிய மூன்று பேரும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த விடாமல் இடையூறு செய்து வந்ததாக கூறப்படு–கிறது.

    இதை அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 55) என்பவர் கண்டித்துள்ளார். அப்பொழுது ராஜவேல் பாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக பாலசுப்பிரமணியனை வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த பாலசுப்பிரமணியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக் டர் சார்லஸ் மூன்று பேரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான மூன்று பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்ற–னர்.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் சங்கர் அரிவாளுடன் சென்று அவரது மனைவி மற்றும் மைத்துனருடன் தகராறில் ஈடுபட்டு மிரட்டி உள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாத்திமா நகரை சேர்ந்தவர் சங்கர்(வயது 37). தற்போது பிரையண்ட் நகரில் வசித்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    தகராறு

    இதனால் வெறுப்படைந்த கவுசல்யா பி அன்ட் டி காலனியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர் தனது நண்பர்களுடன் மாமியார் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது கவுசல்யாவின் தம்பி எட்வினை(24) அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

    அரிவாள் வெட்டு

    இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் சங்கர் அரிவாளுடன் சென்று அவரது மனைவி மற்றும் மைத்துனருடன் தகராறில் ஈடுபட்டு மிரட்டி உள்ளார். அப்போது வீட்டில் இருந்த எட்வின் மற்றும் அவரது உறவினர்கள் இஸ்ரவேல்(23), மதன்குமார்(18), ராபின்(19) ஆகியோர் சங்கரை எச்சரித்து அனுப்பி உள்ளனர். ஆனால் அவர் வீட்டுக்கு செல்ல மறுத்து, தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். உடனே அவர் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி சங்கரை வெட்டியுள்ளனர்.

    இதில் தலை உள்ளிட்ட உடலில் பல பாகங்களில் வெட்டு காயம் அடைந்த சங்கர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு எட்வின், இஸ்ரவேல், மதன்குமார், ராபின் ஆகிய 4 பேரையும் கைது செய்தார்.

    • சிவகங்கை அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • அருண்குமார் என்பவர் குடிபோதையில் ஆபாசமாக பேசி உள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜ கம்பீரம் காலணியை சேர்ந்தவர் ராஜா. இவரது தங்கை ரயில்வே கேட் பக்கத்தில் இயற்கை உபாதைக்கு சென்றதை அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் குடிபோதையில் ஆபாசமாக பேசி உள்ளார்.

    இதனை ராஜா தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அருண்குமார் ராஜாவை ஆபாசமாக பேசி அறிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயம் அடைந்த ராஜா சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பம் குறித்து மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

    புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கணவர் கள்ளக்காதலை கண்டித்த மனைவியை சரமாரி வெட்டினார்
    • மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்

    கீரனூர்,


    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்துள்ள புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 56).் இவரது மனைவி கலாராணி (42). இவர்களுக்கு மகேந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார். விசாயியான முருகேசன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற கட்டையன் (55)் மனைவி முத்துலட்சுமி என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 4 ஆண்டுகளாக முருகேசன் வீட்டுக்கு வராமல் செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனை அவரது மனைவி கலாராணி கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசன், முருகேசன் என்ற கட்டையன், முத்துலட்சுமி, இவரது மகன் வினோத் ஆகியோர் அரிவாள் மற்றும் கட்டைகளால் கலாராணி வீட்டிற்குள் புகுந்து கலாராணி, அவரது மருமகள் அனுசியா (22) மற்றும் மகேந்திரன் தாத்தா தீர்த்தப்பன் (76) ஆகியோரை அரிவாள் மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அனுசியா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்த தாக்குதலில் கலாராணியின் தலை மற்றும் கைகளில் சரமாரியாக அரிவாளால் வெட்டு விழுந்தது.அனுசியா, தீத்தப்பன் ஆகியோரும் இதில் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து படுகாயம் அடைந்த 3 பேரும் கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் இச்சம்பவம் குறித்து முருகேசன் மகன் மகேந்திரன் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்இன்ஸ்பெக்டர் மாயாழகு வழக்கு பதிவு செய்து முருகேசன் மற்றும் முருகேசன் என்ற கட்டையன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் முத்துலட்சுமி மற்றும் வினோத் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×