search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்குறுங்குடி அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு
    X

    திருக்குறுங்குடி அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு

    • இசக்கியப்பனுக்கும்,முருகனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
    • காயமடைந்த இசக்கியப்பன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் இசக்கியப்பன் (39). விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் முருகனுக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், இசக்கியப்பனை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த இசக்கியப்பன் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, முருகனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×