search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் நள்ளிரவில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
    X

    தூத்துக்குடியில் நள்ளிரவில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

    • அஜித் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு வேலை முடிந்து டி.சவரியார்புரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வரும் போது, அவரை வழி மறித்த மர்ம நபர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
    • காயம்அடைந்த அஜித் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் டி.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 30). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு வேலை முடிந்து டி.சவரியார்புரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வரும் போது, அவரை வழி மறித்த மர்ம நபர் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். அஜித்திடம் பணம் இல்லாததால் அவரது செல்போனை பறித்துக்கொண்டு அஜித்தின் முதுகில் அரிவாளால் வெட்டிவிட்டு மர்ம நபர் தப்பி ஓடினார். காயம்அடைந்த அஜித் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×