search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே தொழிலாளி உள்பட 2 பேருக்கு வெட்டு
    X

    களக்காடு அருகே தொழிலாளி உள்பட 2 பேருக்கு வெட்டு

    • மார்சலும், விகுபாயும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    களக்காடு:

    வள்ளியூர் அருகே உள்ள மேலசண்முகபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வின் மகன் மார்சல் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவரும், அதே ஊரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் விகுபாய் (25) என்பவரும் ஏர்வாடி அருகே உள்ள ஆவரந்தலையில் நடந்த கபடி போட்டியை பார்க்க சென்றனர்.

    அப்போது இவர்களுக்கும், பொத்தையடியை பகுதியை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மார்சலும், விகுபாயும் மோட்டார் சைக்கிளில் ராஜபுதூர்-வள்ளியூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அங்குள்ள சாஸ்தா கோவில் ஆர்ச் அருகே சென்ற போது, பொத்தை யடியை சேர்ந்த முத்துக்கு மார் மகன் வைகுண்டராஜா, பெருமாள் மகன் மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து மார்சலையும், விகுபாயையும் வழிமறித்து, அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினர்.

    இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இது தொடர்பாக வைகுண்ட ராஜா, மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.

    Next Story
    ×