search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயணிகளை ஏற்றுவதில் முன்விரோதம்:தனியார் பஸ் கண்டக்டருக்கு அரிவாள் வெட்டு- 2 பேர் கைது
    X

    பயணிகளை ஏற்றுவதில் முன்விரோதம்:தனியார் பஸ் கண்டக்டருக்கு அரிவாள் வெட்டு- 2 பேர் கைது

    • சுப்பிரமணி நெல்லை சந்திப்பு பகுதியில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்தார்.
    • காயம் அடைந்த சுப்பிரமணியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது21), தனியார் பஸ் கண்டக்டர். சுத்தமல்லி மேலத்தெருவை சேர்ந்தவர் தாமரை கண்ணன் என்ற மதன் (27). இவரும் தனியார் பஸ் கண்டக்டராக உள்ளார். இவர்கள் இருவரு க்கும் இடையே பயணிகளை ஏற்றுவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று சுப்பிரமணி நெல்லை சந்திப்பு பகுதியில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தாமரை கண்ணன் மற்றும் அவரது நண்பரான நம்பிராஜன் என்ற சுந்தர் ஆகிய 2 பேர் சுப்பிரமணியை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினர்.

    சத்தம் கேட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தலைமை காவலர் முருகன் ஓடி வந்தார். உடனே தாமரை கண்ணன், நம்பிராஜன் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த சுப்பிரமணியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் தாமரைக்கண்ணன், நம்பிராஜன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×