என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கத்தியால் குத்தி தொழிலாளி கொலை - ஒருவர் கைது
Byமாலை மலர்26 May 2022 9:21 AM GMT (Updated: 26 May 2022 9:21 AM GMT)
பட்டுக்கோட்டை அருகே தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த அணைக்காடு தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50). விவசாயக் கூலித் தொழிலாளி.இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது.
இந்நிலையில் பட்டுக்கோட்டை அடுத்த செட்டியக்காடு அருகில் உள்ள சாலமன் தோப்பு பகுதியில் வசித்து வரும் மல்லிகா என்பவருடன் செல்வராஜீக்கு பழக்கம் ஏற்பட்டு அவருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செல்வராஜ் கூலி வேலை செய்த பணத்தை கேட்பதற்காக அப்பகுதியில் உள்ள சாலமன் என்பவர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் அவருடைய வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் மைக்கேல் துரையரசன்ஆகியோர், மல்லிகா குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் வாய் தகராறு ஏற்பட்டதில் பாஸ்கர், மைக்கேல் துரையரசன் ஆகியோர் ஆத்திரம் அடைந்து செல்வராஜை அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தினர்.
இந்த தாக்குதலில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து செல்வராஜ் மகன் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மைக்கேல் துரையரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாஸ்கரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X