search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kudankulam"

    • கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வள்ளியூர் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கைப்பந்து விளையாட்டில் சூப்பர் சீனியர் பிரிவில் ஹார்வேடு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனர்.

     வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வள்ளியூர் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கைப்பந்து விளையாட்டில் சூப்பர் சீனியர் பிரிவில் ஹார்வேடு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ரியான், ஜுடுவின், புகழேந்தி, முத்துகிருஷ்ணன், சாத்ராக், சாரோன், எட்வின், ரினு, யோகேஷ், ரிஜோ, சிவகுரு,சுபிஷ் மற்றும் டஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் டாக்டர் தினேஷ், பள்ளி முதல்வர் முருகேசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

    • திருவிழா கொடியேற்றம் நடந்துள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்கும்விதமாக இன்று காலை கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர்.
    • கூத்தங்குழி அருகே உள்ள பாத்திமா நகர், சுண்டங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்த கூத்தங்குழி மீனவ கிராமத்தில் உள்ள பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனவா? ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என்பது பற்றி அவ்வப்போது போலீசாரால் சோதனை நடத்தப்படுவது வழக்கம்.

    அங்கு இரு தரப்பினரிடையே பிரச்சினைகள் இருந்து வருகிறது. சமீபத்தில் திருவிழா கொடியேற்றம் நடந்துள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்கும்விதமாக இன்று காலை கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் கூத்தங்குழி அருகே உள்ள பாத்திமா நகர், சுண்டங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்றது.

    • வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார்.
    • செந்தில் தூக்குப்போட்ட நிலையில் தோட்டத்தில் பிணமாக தொங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 40). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

    மனைவி பிரிந்து சென்றார்

    வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் கிருபாகரன் (40). இவர்கள் 2 பேரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகினர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக செந்திலை பிரிந்து அவரது மனைவி குமரி மாவட்டம் பால் குளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    அரிவாள்வெட்டு

    இதற்கு கிருபாகரன் தான் காரணம் என்று நினைத்து செந்தில் ஆத்திரத்தில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அவரை ஓட ஓட அரிவாளால் வெட்டினர். இந்த அரிவாள் வெட்டு தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வைரலாக பரவின.

    இதில் படுகாயம் அடைந்த கிருபாகரன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்கொலை

    இந்நிலையில் நேற்று இரவு செந்திலை திடீரென காணவில்லை. அவரது உறவினர்கள் அவரை தேடிப் பார்த்தபோது அங்குள்ள தோட்டத்தில் செந்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

    சம்பவ இடத்திற்கு கூடங்குளம் போலீசார் விரைந்து சென்று செந்தில் உடலை மீட்டு நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் செந்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.இது தொடர்பாக போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் நெல்லையில் இக்னோசிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் வெற்றி பெற்றனர்.
    • சூப்பர் சீனியர், சீனியர், ஜீனியர் மாணவ-மாணவிகள் எப்பீ பிரிவில் ரிவால்டோ, ஜெப்ரி, இன்பதரணி முதல் பரிசையும் விக்னேஷ், ஜீவா 2-ம் பரிசையும் பெற்றனர்.

    வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் நெல்லையில் இக்னோசிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் வெற்றி பெற்றனர்.

    சூப்பர் சீனியர், சீனியர், ஜீனியர் மாணவ-மாணவிகள் எப்பீ பிரிவில் ரிவால்டோ, ஜெப்ரி, இன்பதரணி முதல் பரிசையும் விக்னேஷ், ஜீவா 2-ம் பரிசையும் பெற்றனர்.

    பாயில் பிரிவில் ஆஷிக், ஜீடித் முதல் பரிசையும், ஆகாஷ் 2-ம் பரிசையும் பெற்றனர். சகாய ஆன்றோ, எபன் 3-ம் பரிசை பெற்றனர்.சேபர் பிரிவில் செரின் முதல் பரிசையும், வின்சர் 2-ம் பரிசையும் பெற்றனர்.

    பவுல் ராஜ், ரோஷன் 3-ம் பரிசையும் பெற்றனர். ஜீனியர் மாணவர் சேபர் பிரிவில் ஜெர்னிசன், தருண்குமார் முதல் மற்றும் 2-ம் பரிசையும் பெற்றனர். பாயில், எப்பீ பிரிவுகளில் மெல்சன், அமீர் 2-வது பரிசு பெற்றனர்.

    மொத்தம் 26 மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான வாள்வீச்சு போட்டிகளில் வெற்றி பெற்றுமாநில அளவிலான வாள் வீச்சு போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளிதாளாளர் டாக்டர்.தினேஷ், முதல்வர் முருகேசன், துணை முதல்வர் ஜெனி, டேனியல் பயிற்சியாளர் ஏஞ்சல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

    • கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மழலையர் பிரிவின் சார்பில் புத்தாண்டு தின விழா மற்றும் பச்சை வண்ண விழா சிறப்பாக நடைபெற்றது.
    • விழாவுக்கு தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார்.

    வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மழலையர் பிரிவின் சார்பில் புத்தாண்டு தின விழா மற்றும் பச்சை வண்ண விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

    விழாவில் சிறப்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. மழலையர் பிரிவு தலைவி முத்துலட்சுமி நன்றி கூறினார்.

    • திருச்சி மாவட்டம் பூவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சமயகண்ணன். இவரது மகன் ராஜேஷ்.
    • இன்று அதிகாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    நெல்லை:

    திருச்சி மாவட்டம் பூவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சமயகண்ணன். இவரது மகன் ராஜேஷ்(வயது 33).

    மயங்கி விழுந்தார்

    இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார்.இதற்காக கூடங்குளம் அருகே பரமேஸ்வரபுரத்தில் தனது சக நண்பர்களுடன் அவர் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார்.

    ஒப்பந்த பணியாளரான ராஜேஷ் நேற்று இரவு பணிக்கு சென்றுள்ளார். இன்று அதிகாலையில் வேலை பார்த்துக்கொண்டி ருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

    சாவு

    உடனே அங்கு பணியில் இருந்தவர்கள் ராஜேசை மீட்டு ராதாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுஉலை நிர்வாகம் சார்பில் அங்குள்ள சுற்று வட்டார பகுதிகளில் சமூக பொறுப்பு நிதியில் இருந்து பல பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • பணிகள் 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பதால் மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் அந்த கால்வாயில் தேங்கி நிற்கிறது

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுஉலை நிர்வாகம் சார்பில் அங்குள்ள சுற்று வட்டார பகுதிகளில் சமூக பொறுப்பு நிதியில் இருந்து பல பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கூடங்குளம் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக ஊரின் நடுப்பகுதியில் கால்வாய் கட்டும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தற்போது அந்த பணிகள் 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பதால் மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் அந்த கால்வாயில் தேங்கி நிற்கிறது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்டும் நிலை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

    போராட்டம் அறிவிப்பு

    அந்த கால்வாயை பார்வையிட்ட பின்னர், பா.ஜனதா ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் சார்பில் பல கோடி ரூபாய் நிதியில் கழிவு நீர் கால்வாய் கட்டுமான பணி நடந்தது. எந்தவித திட்டமிடலும் இல்லாமல் வேலை தெரியாதவர்களை வைத்து பணிகளை செய்தனர்.

    தற்போது கழிவு நீர், மழை நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த சுகாதார சீர்கேட்டை வருகிற 22-ந்தேதிக்குள் ஊராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை என்றால் பா.ஜனதா சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

    • கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்த டாக்டர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்.
    • அங்கு பணிபுரியும் நர்ஸ்களை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

    வள்ளியூர்:

    கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது 39). டாக்டரான இவர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்.

    அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் கண்ணன் (54). சம்பவத்தன்று இவர் வேல்ராஜ் நடத்தி வரும் மருத்துவமனை முன்பு நின்று அங்கு பணிபுரியும் நர்ஸ்களை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.

    இதுகுறித்து வேல்ராஜ் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வினுக்குமார் விசாரணை செய்து கண்ணனை கைது செய்தார்.

    • நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய அசோகன்(வயது 55) அங்குள்ள அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
    • அங்குள்ள நுழைவு வாயில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் உள்ளே வந்துள்ளனரா? என்று பார்த்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அறிவியல் பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய அசோகன்(வயது 55) அங்குள்ள அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    கடந்த 1-ந்தேதி அசோகன் கர்நாடகா மாநிலம் கைகா அணுமின் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். இதனால் அவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கர்நாடகா மாநிலம் சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து சுமார் 60 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுதொடர்பாக கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அங்குள்ள நுழைவு வாயில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் உள்ளே வந்துள்ளனரா? என்று பார்த்து வருகின்றனர்.

    சம்பவம் நடந்த குடியிருப்புக்கு வெளி நபர்கள் யாரும் அவ்வளவு எளிதாக உள்ளே வர முடியாது. பாதுகாப்புக்கு ஊழியர்கள் அதிகமாக இருக்கும் நிலையில் குடியிருப்பில் உள்ளேயே வசிக்கும் எந்த குடும்பத்தினராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த குடியிருப்புகளில் வசித்து வருபவர்களின் கைரேகை மாதிரிகளை எடுத்து கைரேகை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது
    • அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் விஞ்ஞான கருவிகளையும் செயல்முறைகளையும் சிறப்பாக நடத்திக் காட்டினர்.

    வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் விஞ்ஞான கருவிகளையும் செயல்முறைகளையும் சிறப்பாக நடத்திக் காட்டினர். கண்காட்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் முருகேசன், துணை முதல்வர் ஜெனி மற்றும் டேனியல் ஆகியோர் கண்காட்சியை சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தனர்.

    • கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து நடத்திய ஆண்டு விழா நடைபெற்றது.
    • விழாவுக்கு முதன்மை விருந்தினராக அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணிய பிள்ளை கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

    வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து நடத்திய ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு முதன்மை விருந்தினராக அறிஞர் அண்ணா கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிரமணிய பிள்ளை கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.

    பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ் மற்றும் டாக்டர் ரோசலின்ட் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக திருவெம்பலாபுரம் பஞ்சாயத்து தலைவர் முருகன், கூடங்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சி மணியரசு, இடிந்தகரை பஞ்சாயத்து தலைவர் சகாயராஜ், கூத்தங்குழி பஞ்சாயத்து தலைவி வளர்மதி, ராதாபுரம் பஞ்சாயத்து தலைவி பொன் மீனாட்சி அரவிந்தன், உதயத்தூர் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி மணிகண்டன், லயன் செல்வன், டாக்டர் ஸ்டீவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மெட்ரிக் பள்ளி முதல்வர் முருகேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் செல்வராணி ஆகியோர் ஆண்டறிக்கை சமர்ப்பித்தனர்.

    விழாவில் கலை இலக்கிய நிகழ்ச்சிகளை மாணவ மாணவிகள் நிகழ்த்தினர். சிறப்பான சாதனை படைத்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் ஜெனி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை முதல்வர்கள் முருகேசன், செல்வராணி மற்றும் துணை முதல்வர்கள் ஜெனி, டேனியல் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கூடங்குளம் தொழில் பயிற்சிக்கான தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார் .
    • பாளை மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள மாற்று திறனாளிகளுக்கான வள மையத்தை அமைச்சர் சி.வி. கணேசன் திறந்து வைத்தார்.

    நெல்லை:

    கூடங்குளம் அணுமின் நிலையம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிக்கான தொடக்க விழா இன்று அணுமின் நிலைய சாரல் ஸ்வரம் கூடம் அணு விஜய் நகரியத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார் . மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சேரன்மகாதேவி சப்- கலெக்டர் ரிஷப், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி. எஸ். ஆர். ஜெகதீஷ் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அணுமின் திட்ட அலுவலர் சங்கரநாராயணன் வரவேற்றார். அணுமின் திட்ட தலைவர் ஆப்ரகாம் ஜேக்கப் திட்ட விளக்க உரையாற்றினார்.சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    அணுமின் திட்ட அலுவலர் சுந்தரராஜன் நன்றி கூறினார். இதில் ஏராளமான டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. முடித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    அதனைத் தொடர்ந்து பேட்டை ஐ.டி.ஐ. யில் உள்ள பயிற்சி மையத்தை அமைச்சர் பார்வையிட்டார். அப்போது அப்துல் வஹாப் எம்.எல்.ஏ, மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    மதியம் பாளை மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள மாற்று திறனாளிகளுக்கான வள மையத்தை அமைச்சர் சி.வி. கணேசன் திறந்து வைத்தார். அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனையில் அமைச்சர் பங்கேற்றார்.

    ×