search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pump Operator"

    • வெங்கடேஷ் அவரது மனைவியை அழைத்து வர புதிய பஸ்நிலையம் அருகே காத்திருந்தார்.
    • அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கும், இங்கும் சுற்றி கொண்டிந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கூட்டாம் புளி வேதக்கோவில் தெரு வை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது44). பம்ப் ஆப்பரேட்டர். இவரது மனைவி ஜெர்லின் கிருத்திகா. இவர் வெளியூருக்கு சென்று விட்டு நேற்று மாலை ஊர் திரும்புவதாக கூறியிருந்தார். அவரை அழைத்து வர வெங்கடேஷ் புதிய பஸ்நிலையம் அருகே காத்திருந்தார்.

    அரிவாள் வெட்டு

    அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கும், இங்கும் சுற்றி கொண்டிந்தனர். இதனை வெங்கடேஷ் தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்கி டையே வாக்குவாதம் ஏறபட்டது. இதில் ஆத்திரமடை ந்தவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பலத்த காயமடைந்த வெங்கடேஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    2 பேர் கைது

    இது குறித்து புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி திரு.வி.க. நகரை சேர்ந்த காளியப்பன் (22) மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த மாதேஷ்வரன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    இவர்கள் மீது புதுக்கோட்டை, தென்பாகம் மற்றும் பாளை போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×