என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு
- வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
- ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் கவிபாரதி புகார் செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரத்தை சேர்ந்தவர் கவிபாரதி(28). சம்பவத்தன்று இவர் ஆமத்தூரில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். பின்னர் வெளியே வந்தபோது அங்கு நின்றிருந்த 2 பேர் அவருடன் தகராறு செய்தனர். இதில் இருதரப்புக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் கவிபாரதியை அரிவாளால் தலையில் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் கவிபாரதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story