என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "school education department"
- தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 பேர் விண்ணப்பம்.
- ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ராணிப்பேட்டையை சேர்ந்த ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். ஆனால், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுமார் 13 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைத்துள்ளது. பட்டதாரிகள், வீடு தேடி வரும் கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்களை எல்லாம் தற்காலிகமாக நியமிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உள்ளிட்ட தகுதிகளை கொண்டவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார்.
ஆனால், பட்டப்படிப்பை மட்டும் முடித்தவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் விண்ணப்பம் செய்தால், அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். அந்த விண்ணப்பங்கள் மீது முடிவு எடுக்கக்கூடாது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சார்பில், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக கடந்த 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.
அதில், 28 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்வு நடைமுறைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தெரிவிப்பதற்காக வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
- கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
- மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் பள்ளிகள் எவ்வித தாமதமும் செய்யக்கூடாது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10 வரை வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. இந்நிலையில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்று பள்ளிகள் திறந்த உடன், தொடக்கப்பள்ளிகளில் 5ம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகளுக்கு தாமதமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கிட வேண்டும்.
இதர வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து மாற்றுச் சான்றிதழ் கோரினால், அவற்றைத் தடையின்றி வழங்கிட வேண்டும். மாற்று சான்றிதழ் வழங்கும் பணிகளை இன்றும், நாளையும் மேற்கொள்ள வேண்டும்.
அரசுப்பள்ளிகளில் இன்றைய தினமே மாணவர் சேர்க்கையும் தொடங்க உள்ளதால், 8-ஆம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த மாணவர்கள் முந்தைய பள்ளிகளிடம் மாற்றுச் சான்றிதழ் பெற்று அதைச் சமர்ப்பித்த பின் முறையாகப் பதிவேட்டில் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும்.
மேலும் தனியார் மெட்ரிக் பள்ளிகள், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழக முழுவதும் நடந்த வேலைநிறுத்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மாணவர்கள் கல்வி பாதிக்கக்கூடும் என்பதால் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்பும்படி அரசு வேண்டுகோள் வைத்தது. ஆனாலும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல் இருந்ததால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்தது.
பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 4 ஆயிரத்திற்கும் மேலான ஆசிரியர்களுக்கு 17-பி விதியின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் நடந்த அரசாணை எரிப்பு போராட்டத்திலும் சிலர் ஈடுபட்டனர். அவர்கள் மீது 17-பி விதியின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. ஆனால் மிகவும் தீவிரமாக செயல்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்த ஆசிரியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான “பேனல்” தயாரிக்கப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலை பட்டதாரி ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜூன், ஜூலை மாதத்தில் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கான பட்டியல் தயாரிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு 17-பி விதியின் கீழ் தண்டனை பெற்ற 4 ஆயிரம் ஆசிரியர்கள் பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தி மதிப்பெண் அளிக்கின்றனர்.
விடைத்தாள்களை திருத்தம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அரசு தேர்வுத் துறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினாலும் தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவர்கள் மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்து விடைத்தாள் நகல்களை பெற்று பார்த்த போதுதான் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளி வருகின்றன.
ஆசிரியர்கள் அலட்சியமாக விடைத்தாள்களை திருத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அறிந்தும் இது போன்ற தவறுகள் ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்றன.
மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு 4,500 பேர் விண்ணப்பித்து விடைத்தாளின் நகலை பார்த்தபோது அதில் 1700 மாணவர்களின் மதிப்பெண்கள் வேறுபட்டு இருந்தது.
மாணவர்களின் விடைத்தாள்களில் கூட்டல் தவறு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மதிப்பெண்களை கூட்டி மொத்தமாக போடும் போது தவறு செய்திருப்பது தெரிய வந்தது.
10 மதிப்பெண்கள் வரை வேறுபட்டு இருந்தது. மேலும் சிலரது மதிப்பெண்கள் 72 என்பதற்கு பதிலாக 27 என தவறுதலாக கொடுக்கப்பட்டு இருந்தன. விடைத்தாள்களை ஒரு ஆசிரியர் திருத்தினாலும் அது சரியாக திருத்தப்பட்டு இருக்கிறதா? கூட்டலில் தவறு உள்ளதா? என்பதை கண்காணிக்க படிப்படியாக 3 கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணியில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். அப்படியிருந்தும் மதிப்பெண் தவறாக வழங்கியது, முறையாக கூட்டி மதிப்பெண் அளிக்காமல் அலட்சிய போக்கில் செயல்படுதல் போன்றவை கண்டறியப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டத்திலும் விடைத்தாள் திருத்தம் செய்ததில் குளறுபடிகள் செய்ததாக 500 ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இதனை அனுப்பி உள்ளனர்.
விடைத்தாள்களில் பிழைகள் இருப்பதை சுட்டிக்காட்டி மதிப்பெண் மாறுபட்டு இருப்பதையும் கூறி 7 நாட்களுக்குள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
முறையான விளக்கத்தை கொடுத்தால் அவர்கள் மீது 17-ஏ, 17 பி போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். அதன்படி அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவை 3 ஆண்டுகளுக்கு ‘கட்’ செய்யப்படும்.
உரிய விளக்கம் தராதவர்கள் அல்லது விளக்கம் திருப்தி அளிக்காத பட்சத்தில் அவர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விடைத்தாள் திருத்தம் செய்வதில் கவனத்துடன் செயல்படவும் தவறுகளுக்கு இடம் அளிக்கக்கூடாது என தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்த போதிலும் ஆசிரியர்கள் சிலர் தவறு செய்கின்றனர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
தற்போது அலட்சிய போக்கில் விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அவர்களது விளக்கத்தை பொறுத்து ஒழுங்கு நடவடிக்கை இருக்கும். விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால் சஸ்பெண்டு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பு ஏற்றது முதல் கல்வித்துறையில் பல அதிரடியான மாற்றங்களை புகுத்தி வருகிறார். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளை போன்று 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு முறையில் மீண்டும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.
9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மொழி பாடங்களான தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும், ஆங்கிலம் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும் பிரிக்கப்பட்டு தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள் என்று இருப்பதை தமிழ் என்று ஒரே தேர்வாகவும், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என்று இருப்பதை ஆங்கிலம் என்று ஒரே தேர்வாகவும் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன.
இதேபோல 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் மொழி பாடங்களாக தமிழ், ஆங்கிலம் என்று 2 பாடங்களும், 4 முக்கிய பாடங்களும் என மொத்தமாக 6 பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஏதாவது ஒரு பாடத்தை அமல்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழி பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தற்போது தமிழ் மற்றும் ஆங்கில பாடத்துக்கு தலா ஒரு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு ஒரே தேர்வு நடத்தினால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மொழி பாடங்களுக்கு ஒரு தேர்வு முறை என்பது அமலுக்கு வந்துவிடும். மொழி பாடங்களுக்கு தலா ஒரு தேர்வு நடந்தால், தேர்வு நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை குறையும். மேலும் விடைத்தாள் திருத்தும் பணியும் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகனிடம் கேட்டபோது, பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருவதற்கான திட்டம் அரசிடம் இருப்பதாகவும், இறுதி வடிவம் கொடுப்பது குறித்து அரசு தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகளை வரும் ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக அனைத்து தேர்வுகளும் ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரம் முடிவடையும். தற்போது மூன்றாம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 1ல் துவங்கி ஏப்ரல் 12க்குள் முடிக்க வேண்டும். இதற்கான தேர்வு கால அட்டவணைகளை மாற்றி, முதன்மை பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்டங்களின் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். வேலை இழப்பு ஏற்படும் நாட்களை சரி செய்ய, சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்கலாம் என கூறப்பட்டுள்ளது. #SchoolEducationDepartment #ExamsChanged
தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:-
2018-19-ம் ஆண்டில் உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி விகிதம் 8.16 சதவீதமாக உயர்ந்துள்ளது. வரும் நிதியாண்டில் 1,986 கிமீ நீளமுள்ள சாலைகளில் ரூ.1142 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். உற்பத்தி சேவை துறைகளில் கூடுதல் முதலீடுகளை ஈர்க்க அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
கொடுங்கையூர்-பெருங்குடி குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் அலகினை தனியார் பங்களிப்புடன் ரூ.5259 கோடியில் செயல்படுத்த பரிசீலனை செய்யப்படுகிறது.
அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கூட்டு குடிநீர் திட்டங்களை மேற்கொள்ள ரூ.1558.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்கும். நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் குடியிருப்பு கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
ஓய்வூதியத் திட்டம், சம்பள முரண்பாடு ஆகியவை தொடர்பாக உள்ள பிரச்சனைகளை தீர்க்க கோரி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்று அவர்களது போராட்டம் 7-வது நாளை எட்டியுள்ளது.
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து போராட்டத்தை ஒடுக்க முடிவு செய்யப்பட்டது.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப மீண்டும் ஒரு வாய்ப்பு தரப்படுகிறது. அதன்படி உடனடியாக பணிக்கு திரும்புவோர்களுக்கு அவர்கள் விரும்பும் ஊருக்கு பணியிட மாற்றம் செய்து தரப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீண்ட நாட்களாக பணியிட மாற்றம் கேட்டு வரும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #JactoGeo #TeachersProtest
அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் போது அல்லது ஒழுங்கு நடவடிக்கையின் போது உயிரிழந்தால், பணி விதிகளின்படியே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. #SchoolEducation #TeachersLeave
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஒரு முக்கிய அடையாளமாக புத்தகப்பை இருக்கிறது. புத்தகப்பை சுமந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளை பார்த்து பெற்றோர் வருத்தப்படுவதும் உண்டு. ஏனென்றால் அந்த அளவுக்கு புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவற்றை அதிக எடையில் பையில் வைத்து சுமந்து செல்கின்றனர்.
இந்தியாவில் பள்ளி மாணவர்கள் குறைந்த பட்சமாக 6.2 கிலோ முதல் அதிகபட்சமாக 15 கிலோ எடை வரை புத்தகப்பையை சுமந்து செல்வதாகவும், அவர்களின் உடல் எடையில் 30 முதல் 35 சதவீதத்தை புத்தகப்பையாக சுமப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படியாக புத்தகப்பையை சுமந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரையில் முப்பருவ பாடமுறை திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் புத்தகப்பை சுமந்து செல்வதில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதனால் குறைந்த எடையில் தான் இவர்கள் புத்தகப்பையை சுமக்கின்றனர் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் பல தனியார் பள்ளிகளில் இந்த முறை எதுவும் நடைமுறையில் இல்லை. இன்றளவும் பல பள்ளிகளில் கூனி குனிந்தபடி புத்தகப்பையை மாணவ-மாணவிகள் சுமந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர்.
இந்தநிலையில் கூடுதல் பாடப்பிரிவு மற்றும் புத்தகப்பை எடை தொடர்பான அறிவுறுத்தலை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, மாணவ-மாணவிகளின் புத்தகப்பை எவ்வளவு எடையில் இருக்க வேண்டும்? பாடங்கள் பயிற்றுவித்தலை ஒழுங்குபடுத்துவது ஆகியவை தொடர்பான வழிமுறைகளை உருவாக்கி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. அதில் உள்ள சிறப்பம்சங்கள் வருமாறு:-
* 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.
* 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் பாடங்களை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது. 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மொழிப்பாடம், சுற்றுச்சூழல் மற்றும் கணிதம் தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது. (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் அறிவுரைப்படி)
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #HumanResourceDevelopment
மதுரை ஐகோர்ட்டில், மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு பல வருடம் ஆகிறது. பள்ளி கட்டிடங்களில் பெரும்பாலானவை சேதம் அடைந்துள்ளன. அங்கு மாணவர்கள் படிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
எனவே பள்ளிகளை ஆய்வு செய்து பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இதுகுறித்து விசாரிக்க ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து பள்ளிகள் ஆய்வு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வருகிற 29-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். #MaduraiHC
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்